http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




3

     ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.

     சில விநாடிகள் தன் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூசினாற் போல் பூபதி அவர்கள் கீழே குனிந்து சாய்வு நாற்காலியிலிருந்தே கைக்கு எட்டும்படியாக மேஜை மேல் இருந்த காகிதக் கட்டு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். 'ஒழுக்கம் குன்றியும், வரன்முறை இன்றியும் தவறு செய்யும் இளைஞர்களின் தொகையைக் காட்டிலும் அதே விதமான தவறுகளைச் செய்யும் வயதானவர்களின் தொகைதான் அதிகமாயிருக்கும் போல் தோன்றுகிறது' என்று சற்று முன்பு தான் துணிவாகக் கூறிய உண்மை எந்த விதத்தில் அவருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

     போலி நாகரிகத்துக்காகவோ, எதிரே இருந்து கேட்பவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுமே என்பதற்காகவோ நாவின் நுனியில் வந்து நிற்கும் எந்த உண்மையையும் இரண்டு உதடுகளுக்குள்ளேயும் அடக்கி வைத்துப் பழக்கமில்லை அவனுக்கு.

     பொது வாழ்க்கையில் அதிக நன்மையைத் தரமுடியாத இந்தச் சுபாவத்தினால் பலருடைய நட்பையும் உதவிகளையும் அவன் இழந்திருக்கிறான். குறைவோ, நிறைவோ, தாழ்வோ, ஏற்றமோ, மனிதர்களோடு ஒத்துப் போவதற்கான குணம் அவனிடம் இல்லை என்று மாணவப் பருவத்துச் சக நண்பர்கள் பலர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனிடம் நேருக்கு நேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவனைக் கடிந்து கொண்டுமிருக்கிறார்கள்.

     "ஒத்துப் போவதும் மற்றவர்களைத் தேவைக்கு அதிகமாக மன்னிப்பதும், பிறருடைய பலவீனங்களுக்கு அநுசரணையாக நம்முடைய பலங்களையும், திறமைகளையும் ஒடுக்கிக் கொள்வதும், சமூகத்தில் ஒரே விதமான மனிதர்கள் தொடர்ந்து செழிப்பாய் வாழவும், கொழுத்துத் திரியவும் துணை செய்யுமே அல்லாமல் எல்லாருடைய நன்மைகளையும் பாராட்டுவதற்குத் துணை செய்யாது" என்று இந்தச் சுபாவத்துக்காகத் தன்னைக் கடிந்து கொள்ள வரும் நண்பர்களிடமெல்லாம் எடுத்தெறிந்து பதில் சொல்லியிருக்கிறான் சத்தியமூர்த்தி. மாணவ பருவத்திலிருந்தே படிப்படியாய் வளர்ந்திருந்த அஞ்சாமையும் துணிவும் எதிரே இருப்பவரைப் பாதிக்கும் என்பதற்காகவோ, எதிரே இருப்பவருக்குத் தன் மேல் கோபம் வரும் என்பதற்காகவோ எதையும் பேசத் தயங்காத நாவன்மையை அவனுக்களித்திருந்தன. இதன் காரணமாகப் பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ள பலருக்கு நடுவே தான் இருப்பதே அவர்களுக்கு ஒரு பயமுறுத்தலாய், தன்னைப் பார்ப்பதே அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாய் அவன் தோன்றியிருக்கிறான்.

     இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற பூபதி அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருகின்றன என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப் பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படிப் பேசியிருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது. அதே சமயத்தில் யாரையும் குறிப்பிட்டோ எவரோடும் சார்த்தியோ சொல்லாமல் தான் பொதுவாகச் சொல்லிய ஓர் உண்மையைக் கேட்டு அவர் ஏன் அப்படிக் கூசித் தலைகுனிய வேண்டும் என்ற நுணுக்கமான சந்தேகமும் அவனுள் ஏற்பட்டது. அவர் இன்னும் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அந்த மௌனம் அவன் மனத்தை ஓரளவிற்கு வருத்தவும் செய்தது. அவசியம் இல்லாததாகவும் விரும்பத்தகாததாகவும் நிலவத் தொடங்கியிருந்த அந்த மௌனம் கலைவதற்குத் துணை செய்தாள் அவருடைய மகள் பாரதி. அந்தச் சூழ்நிலையில் அங்கு நுழைவதற்குத் தயங்கியவாறே நுழைபவள் போல் மெல்ல நுழைந்து தந்தையின் சாய்வு நாற்காலியருகே சென்று, "சாப்பாட்டுக்கு இலை போட்டாயிற்று" என்றாள் அவள். தாம் மூழ்கியிருந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தலைநிமிர்ந்த பூபதி எதுவும் நடக்காதது போல் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "நீங்களும் இங்கேயே சாப்பிடலாம் அல்லவா?" என்று சுபாவமாகக் கேட்டார். தந்தையே அவரையும் அழைக்க வேண்டும் என்றும், ஆசைப்பட்டு அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு வந்திருந்த பாரதி தான் எதிர்பார்த்தபடியே அது நடந்ததைக் கண்டு மகிழும் மனத்தின் ஆவலோடு சத்தியமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய அந்த ஆவல் வீண் போகவில்லை. எதிர்பாராத அந்த அழைப்புக்கு என்ன மறுமொழி கூறுவதென்று ஓரிரு கணங்கள் தயங்கியபின் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சத்தியமூர்த்தி.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu3.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs