http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




4

     நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய் விடுகிற சமுதாய நஷ்டத்தை என்னென்பது?

     தூபகலசத்திலிருந்து சுருள் சுருளாக மேலெழும் இளம் புகை அலைகளைப் போல் மேகங்கள் சரிந்து சேரும் மலைகளினிடையே பஸ்ஸில் பயணம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பள்ளத்தாக்கை விட்டு மலைமேல் ஏறிவிட்ட பஸ்ஸிலிருந்து திரையை விலக்கிக் கிழே பின்னால் திரும்பிப் பார்த்தபோது, 'இந்த அரிய பொருளைக் கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்ற இடம் இதுதான்' என்று அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து வைத்தாற் போன்று அருமையாய் மல்லிகைப்பந்தல் ஊர் மழையில் மங்கித் தெரிவதைச் சத்தியமூர்த்தி கண்டான். வடிவமாகப் பின் தங்கிவிட்டாலும் எண்ணமாக மனத்தில் நிலைத்து விடுகிற சில அழகிய ஞாபகங்களைப் போல் மல்லிகைப் பந்தல் என்ற அழகு சத்தியமூர்த்தியின் கண்களிலிருந்து மறைந்து கருத்தில் தெரியத் தொடங்கியது. அந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து செல்லும் போது தான் மறுபடியும் அங்கு வந்துவிட வேண்டுமென்ற ஞாபகம் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் புலப்படும்படி இருக்கும். தன் மனத்துக்கு மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் மேல் எவ்வளவு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அங்கிருந்து பிரிந்து செல்லும் போதுதான் சத்தியமூர்த்தியால உணர முடிந்தது. மனத்தில் நிலைக்கும் படியான நிரந்தரமான சந்திப்புகள் எல்லாம் மகிழ்ச்சியில் தொடங்கி ஏக்கத்தில் முடிவதை அநுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறான் அவன். பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மல்லிகைப் பந்தலில் அந்தச் சில மணி நேரங்களுக்குள் நடந்தவற்றை அவன் ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய நினைப்பு வளர்ந்து பெருகி மிக நளினமானதொரு பகுதியில் வந்து நிறைந்தது.

     மல்லிகைப் பந்தலில் இருந்து புறப்படுவதற்கு முன் பாரதி சுட்டிக் காட்டிய ஈரச் செம்மண் நிலமும் அதைச் சுட்டிக் காண்பித்த போது புதிய உணர்வோடு தெரிந்த முகமும் சத்தியமூர்த்தியின் நினைவில் சுற்றிச் சுற்றி வந்தன. வாய் திறந்து சொற்களால் பேச முடிவதை விட அதிகமான நயமும் பொருளும் தந்து பேசுவதைப்போல் ஒலித்த அவள் கைகளின் வளை ஒலி இன்னும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கம்மென்று நறுமணம் பரப்பி நாசியையும் இதயத்தையும் நிறைத்த அந்த மல்லிகைப் பூக்களின் வாசனையை இன்னும் அவனால் மறக்க முடியவில்லை. அவனுக்கு இருபுறமும் பஸ்ஸில் உட்கார்ந்தவர்கள் யாரோ தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள் போல் தோன்றினார்கள். 'சதக் சதக்' என்று வெட்டப்படும் கொலைச் செய்திகளும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய பரபரப்பூட்டக் கூடிய விவரங்களும் அடங்கிய தினப்பத்திரிகை ஒன்றைப் படித்து ஒரு கங்காணி இன்னொரு கங்காணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தச் செய்தித்தாளின் பக்கங்களில் நடந்திருந்த கொலைகளை விட அதைப் படித்துக் கொண்டிருந்தவன் செய்கிற கொலைக்காக மிகுந்த வேதனைப்பட்டான் சத்தியமூர்த்தி. திரு.வி.க.வும் திலகரும் பத்திரிகை நடத்திய நாட்டில் மெய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலரும், பொய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலருமாகப் புனிதமானதொரு பணியைச் சர்வசாதாரணமாக வியாபாரமாக நடத்துகிறவர்கள் பெருகியிருப்பதை எண்ணியபோது மிகவும் வருந்தினான் அவன்.

     அன்று மாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊர் திரும்பும் இரயிலுக்காக அவன் மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. ஒன்பதரை மணிக்கோ, பத்து மணிக்கோ எல்லா நிலையங்களிலும் நின்று நின்று போகிற பிரயாணிகள் வண்டி ஒன்று உண்டு. அதில் புறப்பட்டால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எப்போதாவது மதுரை போய்ச் சேரலாம். புறப்படுகிற நேரமும் உறுதியில்லாமல், போய்ச் சேருகிற நேரமும் உறுதியில்லாமல், இந்தத் தேசத்துச் சராசரி மனிதர்களின் வாழ்க்கை இலட்சியத்தைப் போல் நிச்சயமில்லாத இரயில் அது. அதை எதிர்பார்த்து அந்தக் குளிரிலும் இருட்டிலும் அங்கே காத்திருந்த பலரோடு இப்போது சத்தியமூர்த்தியும் சேர்ந்து கொண்டான். தனியே எதிர்பார்த்துக் காத்திராமல் பலரோடு சேர்ந்து அந்தப் பலரில் ஒருவனாக ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இரண்டு விதமான சுவாரஸ்யங்கள் உண்டு. தன்னுடைய ஆவல் ஒன்று, தன்னைப் போன்ற பலருடைய மொத்தமான ஆவல் மற்றொன்று. தன்னுடைய ஆவலைத் தானே உணர்ந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆவலைப் புரிந்து அனுபவிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu4.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs