http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



63

     தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவு தான். அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது. அதே போல் சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம் தான். ஆனால் அதிலிருந்து மறுபடி விழித்துக் கொள்ள முடிவதில்லை...

     பாரதி மறைத்திருந்தாலும் சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை விட்டு விட்டு மேற்கு ஜெர்மனிக்குச் செல்லப் போகிறார் என்று இப்போது தெரிந்து விட்டது. பாரதி அந்த விவரத்தைத் தன்னிடம் மறைத்ததற்காக மோகினி சிறிதும் கவலைப்படவில்லை. வாழ்வில் எதற்காகவுமே கவலைப்பட்டுப் பயனில்லை என்பது போல் விரக்தியடைந்து விட்டபின் கவலைப்படுவது கூட அதற்குக் காரணமான துயரத்தின் கௌரவத்தைக் குறைத்து விடுகிறதே! 'எல்லாத் துயரங்களையும் நம்மைத் தேடி வருகிற மலைமலையான எல்லாத் துன்பங்களையும் - நமக்கே சொந்தமாக ஏற்று அங்கீகரித்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கும் போது தான் அந்தத் துயரத்துக்கு நாம் செய்கிற கௌரவம் மெய்யாகிறது' என்று அந்த நிலையில் எதையும் தாங்கிக் கொள்ள முடிந்து ஒரு நிதானமும் மனப்பக்குவமும் அவளுக்கு வந்திருந்தன. 'என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் அக்கா' என்று கேட்ட பாரதியிடம் தான் சொல்வது பொய்தான் என்ற உணர்வுடனே சிறிதும் மனம் குழம்பாமல், 'ஏதோ பழைய பாட்டு எழுதுகிறேன்' என்று பதில் சொல்லிச் சமாளித்த போதும், நள்ளிரவுக்கு மேலாகிவிட்ட அந்த நேரத்தில் தனியாக உட்கார்ந்து கொண்டு பேய் போல் எழுதிக் கொண்டிருந்த போதும் அதே நிதானத்தோடுதான் அவள் நடந்து கொண்டிருந்தாள். பார்க்கப் போனால் எது பேய்? எது மனிதன்? பேய்க்கும் மனிதனுக்கும் உயிரும் உணர்வும் தானே வேறுபாடுகள்? வாழ்க்கையிலேயே பேய் பிசாசுகளை விடக் கொடிய மனிதர்கள் தன்னைச் சூழ்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் போது உருவமில்லாத வெறும் பேய் பிசாசுகள் இவர்களை விடக் கெட்டவர்களாக இருக்க முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை.

     அப்போது அவளைச் சுற்றிலும் ஒரே இருள். நடுவே மேஜை விளக்கு மட்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அவள் எதைச் செய்து கொண்டிருந்தாளோ அதுவே சொப்பனம் போல் இருந்தது. வாழ்வதையும் நினைப்பதையும் விடச் சொப்பனம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது வருகிறது அது. பிரத்தியட்ச வாழ்வில் துக்கங்களில்லாமல் சுகமாயிருக்கிறது. தோட்டத்துப் பக்கமிருந்து வீசிய குளிர்ந்த காற்றில் பன்னீர்ப் பூவின் மணமும், பவழ மல்லிகை மணமும், கமகமத்தன. எங்கோ மரப் பொந்தில் ஆந்தை ஒரு முறை அலறியது. அப்போது சுவர்க்கடிகாரம் இரண்டு மணி அடித்தது. அந்த வேளையில் அவளுடைய மனத்தைப் போல் உலகமும் உணர்வும் செத்துப் போய்த் தூங்கிக் கொண்டிருந்தது. தூக்கமும் ஒரு தற்காலிகமான சாவுதான்! ஆனால் அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிகிறது. சாவும் ஒரு நிரந்தரமான தூக்கம்தான்! ஆனால், அதிலிருந்து விழித்துக் கொள்ள முடிவதில்லை. தான் எழுதிய கடிதங்களைத் தனித்தனியே மடித்து இரண்டு உறைகளில் இட்டு மேஜை மேல் வைத்தபின் ஒரு நோக்கமும் இல்லாமல் வெளியே பலகணி வழியே பார்த்தாள் மோகினி. எதிர்ப்புறம் நிலவும் மழை இருளும் கலந்து மயங்கிய மலையில் எங்கோ குங்குமமிட்டது போல் தீ எரிந்து கொண்டிருந்தது. பின்னிரவு குளிரக் குளிரப் பவழ மல்லிகைப் பூக்களின் வாசனை அறைக்குள் அதிகமாக வந்து பரவியது. காலந்தப்பிய மிக முன்னாலேயே இந்தச் சோம்பேறி உலகத்தை எழுப்பி விட ஆசைப்பட்ட அவசரக்காரச் சேவல் ஒன்று எங்கிருந்தோ ஒருமுறை கூவியது. வெறும் சொல்லுக்கும் நினைப்புக்கும் பொருள் எந்த இடத்தில் முடிகிறதோ அந்த இடத்திலிருந்துதான் உணர்ச்சி பிறக்கிறது. மோகினி அப்போது உணர்ச்சி மயமாயிருந்தாள். திடீரென்று அந்த அகாலத்தில் உடனே நீராடிவிட்டு வரவேண்டும் போலத் தோன்றியது அவளுக்கு. குளியலறைக்குப் போய்ச் சந்தனச் சோப்புப் பூசி உடல் குளிர நீராடி வேறு நல்ல புடவை மாற்றித் திலகமிட்டுக் கொண்டாள் அவள். கண்களுக்கு ஆசையோடு மையும் தீட்டிக் கொண்டாள். அவள் அப்போது அந்த நள்ளிரவில் தனக்குத்தானே செய்து கொண்ட காரியங்களுக்கு ஏதோ ஓர் அர்த்தமிருக்கிறாற் போலவும் தோன்றியது. அவள் அப்போது தான் பரிபூரணமான சந்தோஷத்தோடு இருப்பதாகவும் உணர்ந்தாள். அப்படி உணர்ந்த மறுகணமே அதன் மறுபுறத்தில் பரிபூரணமான துக்கத்தையும் உணர்ந்து அநுபவித்தாள். இருளில் தட்டுத் தடுமாறித் தோட்டத்துக்கு ஓடிப்போய் அரைகுறையாக மலர்ந்திருந்த இரண்டொரு ரோஜாப் பூக்களையும், அடுக்கடுக்கான குடை மல்லிகைப் பூக்களையும் பறித்து ஈரக்கூந்தலை முடித்து அதில் சொருகிக் கொண்டு வந்தாள். ஏதோ நினைத்தவளாக உள்ளே போய்த் தேடி எடுத்து அரங்கேறிய நாளிலிருந்து தன் பட்டுப் பாதங்களை அலங்கரித்த அந்தச் சலங்கைகளையும் பாரதி எழுந்து விடுவாளோ என்ற பயத்தோடு காலில் ஓசைப்படாமல் அணிந்து கொண்டாள். இந்தப் பாழாய்ப் போன உலகத்துக்குப் புகழோடும், பெருமையோடும், தான் அறிமுகமாகக் கருவியாக இருந்த எல்லாவற்றையும் தன்னோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் போல ஓர் ஆசை அப்போது அவளுள்ளே எழுந்து தவித்தது. மேஜை விளக்கருகே கையைக் கொண்டு போய்ப் பட்டுப் புடவைத் தலைப்பினால் தன் விரலிலிருந்த மோதிரத்தைத் தேய்த்துப் பளபளக்கச் செய்த பின் அதன் பொன்னொளியில் தன் முகத்தைப் பார்த்த போது அந்த மோதிரத்தை அணிவித்த தெய்வத்தின் ஞாபகம் வந்து மனத்தைப் பிசைந்தது. அவளுடைய சலங்கையணிந்த பாதங்கள் உடனே எங்கோ புறப்பட்டுப் போய்விட வேண்டும் போல் துடிதுடித்தன. மைதீட்டிய விழிகள் யாரையோ பார்க்கப் பறந்தன. சிவந்த உதடுகள் யாரிடமோ புன்முறுவல் பூக்க நெகிழ்ந்தன. கமலக் கைகள் யாரையோ வணங்க வேண்டும் போலக் குவிந்து கூப்புவதற்கு முந்தின.



பொன் விலங்கு : ஆசிரியர் முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29
30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45  46
47  48  49  50  51  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu63.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs