http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




இரண்டாவது அத்தியாயம்

     பல்கலைக் கழகம் வந்த பின் மல்லிகைப் பந்தல் நகரமே ஓரளவு பெரிதாகியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் மறைந்த மல்லிகைப் பந்தல் கல்லூரி நிறுவனர் பூபதி அதை நிறுவிய போது அது என்றாவது ஒரு நாள் பல்கலைக் கழகமாக வேண்டும் என்ற இலட்சியத்தோடு தான் நிறுவியிருந்தார். அந்தக் கனவு இன்று நனவாகியிருந்தது. பூபதி மறைந்த பின் மஞ்சள்பட்டி ஜமீந்தார் அந்தக் கல்லூரி நிர்வாக போர்டின் தலைவராக வந்தார். ஜமீந்தார் ஒரு பெரிய கள்ளநோட்டு வழக்கில் சிக்கிச் சிறை செல்ல நேர்ந்த பின் அரசாங்கமே குறுக்கிட்டு நிர்வாக போர்டின் மீதுள்ள பல குற்றங்களை விசாரணை செய்து அதைக் கலைத்துவிட்டு மூவர் கொண்ட ஒரு குழ்வைக் கல்லூரி ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்தது. அந்த ஆண்டிலேயே மல்லிகைப் பந்தல் கல்லூரியைப் பார்வையிட வந்த 'யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்' அந்த ஊரும் கல்லூரியும் ஒரு பெரிய ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடிக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்கும் என்று சிபாரிசு செய்யவே மாநில அரசாங்கம் தாமதம் செய்யாமல் சட்டசபையில், 'மல்லிகைப் பந்தல் யுனிவர்ஸிடி ஆக்ட்' என்று ஒரு பில் கொண்டு வந்து நிறைவேற்றியது. யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் வழங்கிய ஒரு பெருந்தொகையோடு மாநில அரசாங்கமும் ஒரு பெருந்தொகை வழங்கிக் கல்லூரிக் கட்டடங்களையும், விடுதிகளையும், பட்டமளிப்பு விழா மண்டபம், செனட் ஹால் ஆகியவற்றையும் மெடிகல், என்ஜீனியரிங், விவசாயம் ஆகிய பிரிவுகளையும் கட்டி முடித்தது. அதன் முதல் நிறுவனர் பூபதியின் நினைவாகப் பட்டமளிப்பு விழா மண்டபம், அட்மினிஸ்டிரேடிவ் பில்டிங் ஆகியவை அமைந்திருந்த பிரதான மாளிகைக்கு பூபதி ஹால் என்ற பெயரும் சூட்டப்பட்டது. பூபதியின் சொத்துக்களில் பெரும் பகுதி ஏற்கெனவே அந்தக் கல்லூரி டிரஸ்டைச் சேர்ந்தவையாக இருந்தது. அவருடைய ஒரே மகள் பாரதி போஸ்ட் - கிராஜுவேட் படிப்பு முடிந்ததும் மேற்படிப்புக்காக அமெரிக்கா போனாள். நடுவே அவள் திரும்பியபோது வீடு உள்பட மீதமிருந்த சொத்துக்களையும் பல்கலைக் கழகத்துக்கே எழுதிக் கொடுத்துத் தந்தை பெயரில் ஒரு 'ஷேர்' ஏற்பாடு செய்து விட்டு மீண்டும் வெளிநாட்டுக்கே போய்விட்டாள். பூபதியின் அழகிய பங்களா பல்கலைக் கழக வைஸ்-சான்ஸலர் மாளிகை ஆகியது. மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் புதிய புதிய துறைகளை அமைப்பதில் அதன் முதல் வைஸ்-சான்ஸலரும், சிண்டிகேட்டும் பெரும் பணி புரிந்தார்கள். இரண்டு ஆண்டுகள் அந்தப் பல்கலைக் கழக வளர்ச்சியில் பொற்காலத்தைப் படைத்தனர்.

     மொழிப் போராட்டம் வந்தது. அந்தப் பல்கலைக் கழகத்தையும் அது பாதித்தது. மொழிப் போராட்டத்தை அடுத்து வந்த பொதுத் தேர்தலில் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்திய கட்சிகள் வென்றன. ஆனால் மாறிய ஆட்சி மிகச் சில மாதங்களிலேயே மாணவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது. பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் உணர்ச்சியை மட்டும் பரவச் செய்து தங்களை ஏமாற்றி விட்டார்களோ என்ற சந்தேகம் இளைஞர்கள் உள்ளத்தில் வேரூன்றியது. அதன் விளைவாக மொழிப் போராட்டத்தை ஆதரித்த இளைஞர்களே அந்தப் போராட்டத்தின் தலைவர்கள் ஆளும் ஆட்சியை முழு மூச்சோடு எதிர்க்க நேரிட்டது.

     இந்தக் காலக்கட்டத்தில் தான் பாண்டியன் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் மாணவனாகச் சேர்ந்திருந்தான். அந்தப் பல்கலைக் கழகத்தில் சேரும் போது அவன் இவற்றையெல்லாம் அறியாத ஒரு நாட்டுப்புறத்து மாணவனாகத்தான் சேர்ந்திருந்தான். இரண்டாண்டுப் படிப்பும், தன்னை ஒரு தேசிய நல நோக்கம் கொண்ட மாணவர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்ததும், அண்ணாச்சியின் நட்பும் அவனைப் பெரிதும் வளர்ச்சி அடையச் செய்திருந்தன. அவனும் சக மாணவர்களும் அந்த இரண்டாண்டில் அவ்வப்போது நடத்திய உரிமைப் போர்கள் எல்லாம் வெற்றியடைந்திருந்தன. போராட்டங்களும், பிரச்னைகளும் ஒருபுறம் இருந்தாலும் படிப்பைக் கோட்டை விடாமல் கவனித்துக் கொண்டான் அவன்.

     'முதல் ஆண்டு எப்படியிருந்தாலும் டிகிரி எக்ஸாமினேஷனுக்கு முந்திய ஆண்டிலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்' என்ற முடிவோடு தான் அந்த ஆண்டு ஊரிலிருந்து புறப்பட்டு வந்தான் பாண்டியன். ஆனால் அது பலிக்காமல் போயிற்று. அவனை மாணவர் பேரவைச் செயலாளன் ஆக்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs