http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




இருபத்தொன்பதாவது அத்தியாயம்

     நேரு விழாக் கூட்டத்தன்று மாலை தன்னையும் அருகில் வைத்துக் கொண்டு அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்த போது, 'உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படும் பொறுப்பு உன்னைவிட இந்தத் தங்கச்சிக்குத்தான் அதிகம்' என்று தன்னைச் சுட்டிக்காட்டிப் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களுடைய அன்பும் நேசமும் தங்களோடு பழகும் பிறரால் புரிந்து கொள்ளப்பட்டுச் சரியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு விட நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனம் பூரித்தாள் அவள். விடுதி விதிகள் கடுமையாக்கப்பட்டிருந்தும் கூட அன்று முன்னிரவில் அண்ணாச்சியின் கடை முன்பாக நடந்த நேரு விழாக் கூட்டத்தில் பாண்டியன் பேசுகிற வரை இருந்து கேட்ட பின்பே அவளும் மற்ற மாணவிகளும் விடுதிக்குத் திரும்பினர்.

     மறுதினம் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன் பல்கலைக் கழக மைதானத்தில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது "உனக்காகவாவது நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உன்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே அண்ணாச்சி சொல்லிவிட்டார். அதனால் இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கும் போதே எதிரே 'எச்சரிக்கை'யைப் பார்க்கிற பயம் வந்து விடுகிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பாண்டியன். அவள் அருகே நின்ற தோழிகளும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

     "நல்லவேளை! அபாயம் என்று சொல்லாமல் 'எச்சரிக்கை' என்று சொன்னீர்களே?"

     "எச்சரிக்கை என்று சொல்லிவிட்டதனால் அபாயம் இல்லை என்று ஆகிவிடாது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் அபாயம் என்பதனால் தான் ஆண்கள் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது..."

     "ஆண்கள் மட்டும் அபாயமே இல்லாத பரம சாதுக்களோ?"

     "ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவு செய்ய வேண்டிய விவாதம் இது. இப்போது எனக்கு அதற்காக நேரமில்லை."

     "ஏன்? நேரு விழாப் பட்டிமன்றத்தில் தோற்றது போதாதா? மறுபடியும் தோற்க ஆசையா?"

     கண்ணுக்கினியாள் சார்பாக அவளுக்குப் பரிந்து கொண்டு வந்து பேசிய எல்லாப் பெண்களும் கேள்விக் கணைகளைத் தொடுத்த போது முதற் பாட வேளைக்கான மணி அடித்து அவனைக் காப்பாற்றியது. எல்லோருமே அவரவர்களுடைய வகுப்புக்களுக்காக விரைந்தார்கள். மைதானத்தில் வகுப்புக்காக விரைந்து கொண்டிருந்த பாண்டியனை நடன சுந்தரம் என்ற பெயரையுடைய கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர் அவசரமாகத் தேடி வந்து எதிர் கொண்டார்.

     "அண்ணனைப் பார்க்கத்தான் வந்தேன்? ஒரு ஐந்து நிமிஷம் நின்னு நான் சொல்றதைக் கேட்டப்புறம் தான் போகணும். இரண்டு வாரங்களாக ஒரு பெரிய தகராறு. வகுப்பிலே உரைநடைப் பகுதி நடத்த வருகிற போதெல்லாம் பண்புச் செழியனார் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்லி, 'மேடைத் தமிழ், ஏட்டுத் தமிழ் எல்லாமே அவரால் தான் உயிர் பெற்றது. அவரே தமிழுக்கு உயிர் கொடுத்தார். அவரை வீர வணக்கம் செய்தே தமிழை வளர்க்க முடியும்' என்று வெளிப்படையாகக் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நானும் வேறு சில தேசிய மாணவர்களும் வகுப்பிலேயே குறுக்கிட்டு, 'வீர வணக்கத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி மோசம் போன காரணத்தால் தான் ஒரு தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யாரோ ஒருவர் மேடையில் பேசியது போலவே மூக்கால் பேசவும், யாரோ ஒருவர் எழுதியது போலவே 'பருவப் பாவை உரைநடை' எழுதவும் பழகிச் சீரழிந்தனர். தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் ஒரிஜினாலிடியும், இண்டுவீஜுவாலிடியும் வளராமல் வெறும் இமிடேஷன் மட்டுமே நோயாக வளர்ந்து பயங்கரமான தொத்து நோயான காலத்தைத் தான் நீங்கள் பொற்காலம் என்று பொய்யாகப் புனைந்து இங்கே சொல்கிறீர்கள் சார்!" என்று மறுத்தோம். உடனே பண்புச் செழியனாருக்கு ஆதரவான மாணவர்கள் வகுப்பிலேயே எங்கள் மேல் பாய்ந்து விட்டார்கள். கூப்பாடு போட்டார்கள். வகுப்பில் நடக்கும் பச்சையான இந்தக் கட்சிப் பிரசாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும்" என்றார் நடன சுந்தரம்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam29.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs