http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




மூன்றாம் அத்தியாயம்

     சுதந்திர தினத்தை அடுத்து வந்த இரண்டு விடுமுறை நாட்களும் பிரசாரத்திலும், ஒவ்வொரு விடுதியாகப் போய் மாணவர்களைச் சந்திப்பதிலும் அண்ணாச்சி கடைக்கு எதிரே பொதுக்கூட்டம் போட்டுப் பேசுவதிலும் கழிந்து விட்டன. தலைவனும், பேரவைச் செயலாளனும் ஒத்த நோக்கு உடையவர்களாக இருந்தால்தான் பல்கலைக் கழகத்தில் பல காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதால் பாண்டியன் வோட்டுக் கேட்கும் போது மோகன்தாஸுக்கும் மோகன்தாஸ் வோட்டுக் கேட்கும் போது பாண்டியனுக்கும் சேர்த்தே கேட்டார்கள். பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர் பேரவைத் தலைவர், செயலாளர் தேர்தல் சம்பந்தமான எந்தக் கூட்டமும் நடத்தக்கூடாது என்று ரிஜிஸ்திரார் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதனால் இரு தரப்பு மாணவர்களுமே வெளியே தான் கூட்டம் போட்டுப் பேசியாக வேண்டியிருந்தது. இவர்கள் இந்த வாயிலில் அண்ணாச்சி கடையருகே கூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் அந்த வாயிலில் 'ஹில்டாப் டிரைகிளீனர்ஸ்' அருகே கூட்டம் போட்டார்கள். மாணவர்களின் ஆர்வத்தையும் கூட்டத்தையும் பார்த்தால் பாண்டியனும் மோகன்தாஸும் அமோகமாக வெற்றி அடைந்து விடுவார்கள் என்று தெரிந்தது.

     'இந்தத் தேர்தலே நடக்கவிடாமல் பண்ணினாலும் பண்ணுவேனே ஒழிய அந்தப் பயல்களை ஜெயிக்க விட மாட்டேன்' என்று அன்பரசன் கறுவிக் கொண்டிருப்பதாகப் பாண்டியன் காதுக்குத் தகவல் எட்டியது. முதலில் இது சும்மா வேடிக்கைக்காகச் சொல்லப் படுகிறது என்று தான் பாண்டியனும் மோகன்தாஸும் நினைத்தார்கள். ஆனால் திங்கள்கிழமை மாலையில் அவர்கள் அண்ணாச்சி கடைக்குப் போனபோது அண்ணாச்சியே அதை உறுதிப் படுத்தினார்.

     "தம்பீ! கோட்டச் செயலாளர் மினிஸ்டருக்கு ஃபோன் பண்ணி மினிஸ்டர் 'லெவலிலே' வி.சி.க்குப் பிரஷர் கொடுக்கிறாங்க. 'தேர்தல் நடந்தால் பல்கலைக் கழக எல்லையிலே அமைதியும் ஒழுங்கும் குலையும்'னு காரணம் சொல்லித் தேர்தலையே ஒத்திப் போட ஏற்பாடு நடக்குது."

     "சும்மா இது ஒரு ரூமரா? அல்லது நம்பலாமா? இது உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது அண்ணாச்சி?"

     அண்ணாச்சி சுற்று முற்றும் பார்த்துவிட்டுத் தணிந்த குரலில் அவனுக்கு மறுமொழி சொன்னார்:

     "மந்திரி வி.சி.கிட்டவும், ஆர்.டி.ஓ.கிட்டவும் பேசினதைக் கேட்ட ஒருத்தரே வந்து சொன்னாரு. டெலிபோன் எக்சேஞ்சிலே நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! ஆனா இதை நீங்க உங்களுக்கு தெரிஞ்சதா வெளியிலே காட்டிக்கிட வேண்டாம். அவங்க வாயாலேயே வரட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்."

     "இந்த வி.சி. கோட்டச் செயலாளருக்கே நடுங்குவார்! மந்திரியே ஃபோன் பண்ணிவிட்டால் கேட்கணுமா?" என்று கொதிப்போடு சொன்னான் மோகன்தாஸ்.

     "இன்னிக்குச் சாயங்காலம் 'கண்ணு' வரேன்னிச்சு. இன்னும் காணலியே?" என்று பாண்டியனைப் பார்த்துச் சொன்னார் அண்ணாச்சி.

     "நான் கூடப் பார்த்து ரெண்டு நாளாச்சு அண்ணாச்சி. அவுங்க ஹாஸ்டல்லே அது நல்லா உழைச்சு நமக்காக ஒருத்தர் விடாமல் 'கான்வாஸ்' பண்ணிச் சொல்லியிருக்குன்னு கேள்விப்பட்டேன்."

     "யாருதான் நல்லாக் கான்வாஸ் பண்ணலே? எட்டாயிரத்துச் சொச்சம் பேருலே ஏழாயிரம் பேர் நமக்கு ஆதரவா இருப்பாங்கங்கிறது உறுதி. யாருமே 'கான்வாஸ்' பண்ணாட்டியும் இது உறுதி. ஆனால் பாவிங்க எதுவுமே நடக்காமப் பண்ணிடுவாங்க போலே இருக்கே...? ஒரே அக்ரமமாவில்ல இருக்கு?" என்று அண்ணாச்சி சொல்லிக் கொண்டிருந்த போதே சைக்கிள் கடைக்கு எதிர்ப்புறத்து மருந்துக் கடையிலிருந்து,

     "அண்ணாச்சி! ஃபோன் வந்திருக்கு, வாங்க" என்று குரல் கொடுத்தார்கள். அண்ணாச்சி எழுந்து விரைந்தார். "நீ கவலைப்படாதே பாண்டியன்! எது வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம். மாணவர்களை ஏதோ கிள்ளுக் கீரை என்று நினைக்கிறார்கள். தேர்தலை நிறுத்தினால் கூட்டமாக வி.சி. வீட்டுக்கு ஊர்வலம் போகலாம். அப்புறம் தானே வழிக்கு வருவார்" என்றான் மோகன்தாஸ்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam3.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs