http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்

     மாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற் போல் நடந்து கொண்டார் என்றாலும், அமைச்சர் கரியமாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட் அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறைய பணம் செலவழிக்கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர்களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். மணவாளன் செய்திருந்த ஏற்பாடுகளின்படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகையாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். 'உடன்பிறப்பே, உயிரே, தேனே! மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா! முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும்! எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்!' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். "எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது! எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனை விட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும்... எங்களை யாரும் அசைக்க முடியாது" என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக் கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.

     "நான் உள்ளே தண்ணியை ஊத்திக் கையிலே தடியைக் கொடுத்துப் பத்துப் பேரை அனுப்பிச்சா உன் ஆளுங்க ஆயிரம் பேர் கூட எதிரே நிற்க முடியாது தெரியுமா?" என்று முன்பு ஒரு சமயம் மணவாளனை எதிர்த்துச் சவால் விட்டிருந்தார் இராவணசாமி. இப்போது பாண்டியன் இருப்பது போல் அப்போது மணவாளன் மாணவர்களின் அணியைப் பொறுப்பேற்று நடத்துகிறவராக இருந்தார். அதே போன்ற காரியங்களை இப்போதும் இராவணசாமி செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையைப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் செய்திருந்தார் மணவாளன். எதற்கும் மாணவர்கள் விழிப்பாகவே இருந்தனர்.

     பட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடியில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசியமாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமாநல்லூர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam39.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs