http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




நான்காம் அத்தியாயம்

     துணைவேந்தரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. அங்கே வந்து உட்கார்ந்திருந்த கோட்டச் செயலாளரைத் தான் அவர்கள் அந்நியராகக் குறிப்பிடுகிறார்கள் என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. அந்த ஆளிடம் தம் வாயால் அதை எப்படிச் சொல்வது என்று பயந்தார் அவர். தம்முடைய பயத்தை மறைக்க முயன்று கொண்டே அவர்கள் யாரை அங்கிருந்து வெளியேற்ற விரும்புகிறார்கள் என்பது புரிந்தும் புரியாதது போல,

     "அப்படி அந்நியராக இங்கே யாரும் இல்லையே?" என்று ஒவ்வொரு வார்த்தையாக இழுத்து நிறுத்தியபடி மாணவர்களை ஏறிட்டுப் பார்த்தார் துணைவேந்தர்.

     அவர் வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது பாண்டியனுக்கு ஆத்திரமூட்டியது.

     "நீங்கள் விரும்பினால் இங்கே உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த அந்நியர் யாரென்று நாங்களே சுட்டிக் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம் சார்!"

     இந்த நிலையில் கோட்டச் செயலாளருக்கே ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

     "உங்களை நான் அப்புறமா வந்து பார்க்கிறேங்க" என்று மேல்துண்டு தரையில் புரள நடந்து வெளியேறினார், அந்த ஆள். அவருக்கு ஆதரவாக 'வாக்-அவுட்' செய்வது போல் அன்பரசன் முதலியவர்களும் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். துணைவேந்தர் பாண்டியன் மோகன்தாஸ் முதலிய மற்ற மாணவர்களிடம் பேச தொடங்கினார்.

     "பல்கலைக் கழக எல்லையில் இப்போது நிலவும் நெருக்கடி நிலையை உத்தேசித்துத் தேர்தல்களையெல்லாம் தள்ளிப் போடலாம் என்று நினைக்கிறேன். நாளையே 'ஓரியண்டேஷன் டே' செலபரேட் செய்து விட்டுப் படிப்பிலும், வகுப்புகளிலும், பாடங்களிலும் கவனம் செலுத்தலாம் என்று தோன்றுகிறது. வழக்கமாக ஜூலை கடைசியிலேயே 'ஓரியண்டேஷன் டே'யை முடித்துவிடுவோம். இந்த வருடம் தான் எல்லாமே தாமதமாகிவிட்டது. இனி மேலாவது தாமதமில்லாமல் காரியங்களைச் செய்வதற்கு நீங்கள் எல்லாரும் என்னோடு ஒத்துழைக்க வேண்டும். அன்பரசன் தரப்பினரும் அவர்களைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் ஏற்கெனவே இதற்கு ஒப்புக் கொண்டு தங்கள் ஒத்துழைப்பைத் தர இணங்கியுள்ளனர்."

     "அவர்கள் இவருக்கு ஒத்துழைப்பைத் தர இணங்கியிருக்கிறார்களென்பது பொய். இவர் அவர்களோடு ஒத்துழைக்க இணங்கியிருக்கிறார் என்பதுதான் மெய்" என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே மெல்லச் சொன்னான். "நீ பேசாமல் இரு. இவர் நம்மையெல்லாம் முட்டாளாக்கப் பார்க்கிறார். இவருக்குச் சரியான பாடம் கற்பிக்கலாம்" என்றான் மோகன்தாஸ். ஏறக்குறைய மோகன்தாஸைப் போன்ற அதே மனநிலையில் தான் மற்ற மாணவர்களும் இருந்தனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்கிச் சுவரொட்டிகள் ஒட்டி எல்லா ஏற்பாடுகளும் செய்து வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துவிட்ட பின் மாணவர் பேரவைத் தேர்தலே கிடையாது என்பதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியாமலிருந்தது. மேலும் தங்கள் முன்னிலையிலேயே அன்பரசன் முதலியவர்களிடமும் இதைப் பற்றிப் பேசாமல், 'ஏற்கனவே இது பற்றி அவர்களிடம் நான் தனியே பேசி இணங்கச் செய்துவிட்டேன்' என்று துணைவேந்தர் கூறியது அவர் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதாயிருந்தது.

     "இனி நீங்கள் நினைப்பதைச் சொல்லலாம்" என்று அவர்களை நோக்கி வேண்டினார் துணைவேந்தர். மோகன்தாஸ் மாணவர்கள் சார்பில் மறுமொழி கூறினான்.

     "பேரவைத் தேர்தலும் நடந்து முடிந்த பின்பு தான் ஓரியண்டேஷன் நாள் கொண்டாடப்படுவது வழக்கம் சார்! பழைய வி.சி. காலத்திலிருந்து அப்படித்தான் நடக்கிறது."

     "வீணாகப் பழைய காலத்தை ஏன் இழுக்கிறீர்கள்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்."




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam4.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs