http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




29

     எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடைந்தெடுத்த கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்.

     இராட்சத ராட்டினம் இரண்டாவது முறை நாலைந்து சுற்றுக்கள் வேகமாகச் சுற்றுவதற்குள்ளேயே சித்ராவுக்குத் தலைசுற்றத் தொடங்கிக் கண்களில் நீர் துளித்துவிட்டது. அவள் நழுவி விழுந்து விடாமல் பூமி தாங்கிக் கொள்ள வேண்டியதாகி விட்டது. மூன்றாவது முறை சுற்றத் தொடங்குவதற்கு முன்பே பூமி அவளோடு அவசரமாக கீழே இறங்கி விட்டான். சித்ரா குழந்தைத் தனமாக உடனே பூமியை ஒரு கேள்வி கேட்டாள்:

     "தலை சுற்றாமல் மயக்கமோ வாந்தியோ வராமல் உங்களால் இந்த வேகத்தை எப்படித்தான் பொறுத்துக் கொள்ள முடிகிறதோ?"

     "என்னைப் பொறுத்தவரை இந்த வேகம் என் இயல்பு. வேகமும் சுறுசுறுப்பும் இல்லாவிட்டால் குங்ஃபூ, கராத்தே, ஜூடோ எதிலுமே நான் தேர்ந்திருக்க முடியாது. என் போல் வேகமும் தீரமும் உள்ளவர்கள் குறைவாகவும் மந்த புத்தியும் பயமும் கோழைத்தனமும் உள்ளவர்கள் அதிகமாகவும் உள்ள தேசத்தில் அவர்களை விட இன்று என் போன்றவர்கள் தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது."

     பூமியின் கோபமும் குமுறலும் இன்னும் தணியவில்லை என்பதையே அவனுடைய சொற்கள் காட்டின. அவனே தொடர்ந்தான்:

     "வெறும் நொண்டிகளை வைத்து ஓட்டப் பந்தயம் நடத்திக் காட்டி வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிய நான் தான் முட்டாள்தனம் பண்ணிவிட்டேன்."

     "விட்டுத் தள்ளுங்கள். வேறு எதையாவது பேசலாம். திரும்பத் திரும்ப இப்படி நினைத்து வருந்துவதற்குக் கூட இவர்கள் தகுந்தவர்கள் இல்லை."

     "எட்டுத் திசைகளிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோழைகளே தெரிகிற தேசத்தில் சுதந்திரத்திற்குப் பிறகும் பச்சை அடிமைத்தனமே தொடரும்."

     "நீங்கள் ரொம்பவும் கோபமாயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது."

     "நம்பியவர்கள் ஏமாற்றிவிட்டால் என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாது! நான் என்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்றியதில்லை."

     "இதில் உங்களுக்கு என்ன வந்தது? எங்கள் நன்மைக்காக நீங்கள் இதில் தலையிட்டீர்கள். அவர்கள் பெட்டிஷனில் கையெழுத்துப் போடவில்லை என்றால் நஷ்டம் அவர்களுக்குத் தானே?"

     "அப்படியில்லை! மண் குதிரைகளை நம்பி நான் ஆற்றில் இறங்காமலாவது இருந்திருக்கலாமே?"

     "உண்மைதான்! ஆனால் இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. நானும் தேவகியும் கையெழுத்துப் போட்டிருக்கிறோமே. அந்த இரண்டு கையெழுத்துக்களுடனே நீங்கள் பெட்டிஷனை அனுப்பலாம்."

     "இந்த ஆட்டு மந்தைக் கூட்டம் நன்மையடைவதற்காக நீங்கள் இருவரும் பலியாகத்தான் வேண்டுமா?"

     "பலருக்குக் கிடைக்கிற பெரும்பாலான நன்மைகள் சிலர் பலியாவதனால் தான் கிடைக்க முடிகிறது."

     நீண்ட விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் இருவருடைய கையெழுத்தோடு மட்டும் அந்தக் கடிதத்தைச் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார்கள். அவர்கள் தீவுத் திடலிலிருந்து லஸ் முனைக்குச் செல்வதற்காக பஸ் ஏறியபோது பஸ்ஸில் பொருட்காட்சிக்கு வந்து திரும்பும் கூட்டம் பயங்கரமாயிருந்தது. ஒரே நெரிசலும் நெருக்கடியுமாகப் பஸ் பிதுங்கி வழிந்தது.



சாயங்கால மேகங்கள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28
29   30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm29.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs