http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




39

     அறியாமையும், பணத்தின் மேலே பேராசையும் சேர்ந்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு கெட்டவர்களாக வேண்டுமானாலும் மாறி விடுவார்கள்.

     ஸ்டோர் ரூம் சாவி வருவதற்குத் தாமதம் ஆகியது. சிரமப்படுகிற காலத்தில், சத்தியவான்களாகவும் நியாயவாதிகளாகவும் இருந்து பின்பு வசதிகள் வந்ததும் மாறி விடுகிற பலரைப் பூமி அறிந்திருந்தான். இப்போது முத்தக்காளும் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதை அவன் வருத்தத்தோடு உணரவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

     அடிப்படை நன்றி, விசுவாசம் போன்ற உன்னத உணர்வுகளைக் கூடப் பணமும் வசதிகளும் மாற்றிக் கெடுத்து விடுவதை உணர முடிந்தது. படிப்பறிவும் விசாலமனமும் இல்லாத முத்தக்காள் போன்றவர்கள் அப்படித்தான் இருக்க முடியும் என்று அவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. சிலருக்கு அநுபவங்களாலாவது மனம் விசாலமடையும். முத்தக்காளை அநுபவங்கள் கூட மாற்ற முடியவில்லை என்று தெரிந்தது. எவ்வளவு நாள் ஊற்றினாலும் கருங்கல் தண்ணீரில் கரைந்து விடாது தானே?

     சொந்தக்காரப் பையனை முத்தக்காள் அழைத்து வந்திருப்பது பற்றிக் கூடப் பூமி கவலைப்படவில்லை. அப்படிச் செய்யப் போவதாக அவள் தன்னிடம் சகஜமாக ஒரு வார்த்தை கூட முன் தகவல் சொல்லாததிலிருந்து தன் மேல் அநாவசியமாக அவள் எவ்வளவு அவநம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது.

     இதற்காக அவன் மனம் அதிர்ந்து போய் ஒடுங்கி விடவில்லை. என்றாலும் மனிதர்கள் எவ்வளவு சிறுமை நிறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் அவனுக்கு உதவியது. முத்தக்காள் போன்றவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று சித்ராவைப் போன்ற மனம் விசாலமடைந்த பெண்ணைக் கூடத் தான் வற்புறுத்தியிருப்பது அவனுக்கு நினைவு வந்தது.

     தன்னைப் போலன்றி ஒரு பெண்ணுக்குப் பெண் என்ற முறையில் சித்ரா முத்தக்காளை மிகவும் சரியாகவே எடை போட்டுப் புரிந்து கொண்டிருப்பது பூமிக்கு வியப்பளித்தது. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பெண்கள் ஏனைய பெண்களை மிகவும் சரியாகவே புரிந்து கொண்டு விடுகிறார்கள். ஆண்கள் தவறான கணிப்புக்களைக் கொடுத்துப் பெண்களைக் குழப்பினாலும் கூட அவர்கள் குழம்புவதில்லை.

     பூமி விரும்புகிறான் என்பதற்காக சித்ரா முத்தக்காளுடைய மெஸ்ஸுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளே ஒழியப் பல நாட்களுக்கு முன்பே முத்தக்காளைப் பற்றிய தன் அநுமானங்களையும் அதிருப்திகளையும் அவள் மறைக்காமல் பூமியிடம் வெளியிட்டு அவனையும் எச்சரித்திருந்தாள். அவன் தான் அந்த எச்சரிக்கையை எல்லாம் அப்போது ஏற்கவில்லை.

     சொந்தச் சேமிப்பிலிருந்து கணக்குப் பாராமல் தன் பணத்தை எடுத்துப் போட்டுச் செலவழித்து விட்டு இப்படி ஓர் அநுபவத்தை அடைவது அவனுக்கு எரிச்சலூட்டியது. தன்னைப் போல் உடல் வலிமையும், மனவலிமையும், வாய்த்த ஒரு மனிதன் பக்கபலமாகநின்று தாங்கியிருக்கவில்லையென்றால் அந்த உணவு விடுதி நடைபெறாமலே நின்று போயிருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தான் அதிகம் என்று அவனுக்குத் தெரியும். முத்தக்காளுக்கும் அது தெரிந்துதான் இருக்கவேண்டும். ஆனால் அவள் இன்று அதை வசதியாக மறந்திருந்தாள். நினைக்க நினைக்க அவனுக்கு மனம் வேதனைப் பட்டது. அங்கே இருப்பு கொள்ளவில்லை.

     யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மெஸ்ஸிலிருந்து வெளியேறி நேரே பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குச் சென்றான். பரமசிவம் எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தவர் பூமியைப் பார்த்ததும் மறுபடி உள்ளே வந்து உட்கார்ந்தார். பூமியின் முகத்தில் சிந்தனைத் தேக்கத்தைப் பார்த்துப் பரமசிவத்துக்கே அவன் மனநிலை புரிந்து விட்டதோ என்னவோ, அவரே விசாரித்தார். பூமி நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான். பரமசிவம் அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். பின்பு சொன்னார்:



சாயங்கால மேகங்கள் : முன்னுரை  1  2  3  4  5  6  7  8  9  10  11  12
13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28
29   30   31   32   33   34   35   36   37   38   39   40  41  42  43  44  45


இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm39.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs