http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




     சமூக சீர்திருத்த வாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும் பிடிவாதத்தைத் தளரவிடவில்லை அவர்.

     எவ்வளவு வேண்டியவர்கள் வீட்டுத் திருமணமாயிருந்தாலும் வரதட்சிணை, சீர்செனத்தி என்று பெண்ணைப் பெற்றவர்களைக் கசக்கி பிழியும் கல்யாணங்களுக்கு அவர் போவதில்லை. அப்படி ஒரு விரதம் வைத்திருந்தார். சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாலும் அத்தகைய திருமணங்களை மதித்துப் போகாமல் புறக்கணித்தார். பெண்ணுரிமை இயக்கத்துக்காக கடந்த முப்பது ஆண்டுகளாக அலுக்காமல் சலிக்காமல் போராடி வந்தார் அவர். இந்தப் போராட்டம் அவரை வெகுஜன விரோதியாக்கி இருந்தது.

     "பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை கொடுத்து வரதட்சிணைக்கு மாப்பிள்ளை தேடுவது என்பது சந்தையில் காளைமாடு பிடிப்பது போல அநாகரிகமாக நடந்து வருகிறது. இது சாஸ்திரங்களின் படியும் சரி அல்ல, மனிதாபிமானப்படியும் சரியல்ல. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளங்களில் முதன்மையானது வரதட்சிணை" என்று அவர் முழங்கிய மகாநாடுகளும் கூட்டங்களும் கணக்கில் அடங்காதவை. வரதட்சிணை வாங்கிய கல்யாணத்தில் மறியல் செய்து ஜெயிலுக்குக் கூடப் போய்விட்டு வந்தார்.

     இப்படி அவரும் அவரைப் போன்ற சமூக சீர்த்திருத்த வாதிகளும் எவ்வளவோ கரடியாகக் கத்தியும் நாடு திருந்திவிடவில்லை. பழக்கங்கள் மாறிவிடவில்லை. அதுதான் அவரைக் கூடச் சற்றே விரக்தியடைய வைத்தது.

     "தன் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுத்து, ரிஸ்ட் வாட்சிலிருந்து பாத்திரம் பண்டம் வரை சகலமும் வாங்கிக் கொடுத்துச் சிரமப்பட்ட ஒரு தாயோ தந்தையோ, அதை மனத்தில் வைத்துக் கொண்டு தன் பிள்ளைக்கு மணமகளாக வருகிற பெண்ணிடம் கருணையாக நடந்து கொள்வதில்லை. அந்தப் பெண்ணணயும் அவளுடைய பெற்றோரையும் கசக்கிப் பிழியவே தயாராயிருக்கிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி படித்த பெண்ணே துணிந்து முன் வந்து 'வரதட்சிணை வாங்கிக் கொள்ளும் எந்த மணமகனையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என்று மறுப்பதுதான். இப்படி மறுக்கத் துணியாமல் பெண் ஆணுக்குப் பணிந்து பயந்து போகிறவரை சமூகத்தில் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை. நாம் எதிர்பார்க்கிற பெண்ணுரிமையும் கிடைக்கப் போவதில்லை" என்று அவர் கூறிய யோசனையை யாரும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. உலகம் எப்போதும் போலத்தான் நடந்து கொண்டிருந்தது.

     "சுகவனத்துக்கென்ன? பிள்ளையா? குட்டியா? ஒன்றும் இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்" என்று அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லாததால்தான் அவர் இப்படி எல்லாம் மேடைகளில் முழங்குவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். யார் என்ன பேசினாலும், எப்படிக் கிண்டல் செய்தாலும் பெண்ணுரிமை இயக்கத்திலும், வரதட்சிணை ஒழிப்பு இயக்கத்திலும் அவருடைய தீவிரம் குறையவே இல்லை. வயது முதிர்ந்த பின்னும் அவரைப் பொறுத்த வரை இளமையின் வேகத்துடனேயே செயற்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவ்வப்போது சிறு சலிப்பு ஏற்படுவது மட்டும் தவிர்க்க முடியாததாயிருந்தது.

     ஒரு சமயம் பக்கத்து வீட்டில் குடியிருந்த சிவன்கோயில் குருக்களின் பெண் குழந்தையான சிறுமி காமு, தெருவில் பாண்டி விளையாடினாள். அப்போது பாண்டி விளையாட்டுக்கான கட்டங்களையும், கோடுகளையும் ஒரு பையன் காலால் அழித்தான். அவனை நோக்கி ஆத்திரத்தோடு, "உங்க மாதிரி திமிர் பிடிச்ச ஆம்பளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாரு!" என்று அவள் பதில் சொன்னதற்காக அவளைப் பாராட்டித் திண்ணையிலிருந்தே கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கிக் கொடுத்திருந்தார், சுகவனம். பெண்ணுரிமை இயக்கத்தில் அவருக்கு இருந்த வெறி காரணமாக, யார் ஆண்களைத் திட்டினாலும், ஆண்களின் கொடுமையைப் புரிந்து கொண்டு திட்டினாலும், புரியாமலே திட்டினாலும் அவர்களுக்கு அவருடைய பாராட்டுக் கிடைத்தது; பரிசும் கூடக் கிடைத்தது.

     "மாமா, இப்ப நீங்க எதுக்காகக் கைதட்டினீங்க? எதுக்காக என்னைக் கூப்பிட்டுச் சாக்லேட் வாங்கித் தர்றீங்க?" என்று அன்றைக்கு அந்த அறியாப் பருவத்துச் சிறுமி காமு கேட்ட போது, "உனக்கு அதெல்லாம் இப்பப் புரியாது அம்மா! உன் மாதிரி ஒவ்வொரு பொண்ணும் நெனைவு தெரிந்து வயசு வந்த பின்பும் அந்த மாதிரி தைரியமாக ஒவ்வொரு ஆம்பளைக் கடங்காரனின் கொட்டத்தையும் ஒடுக்கறதுன்னு துணிஞ்சிட்டீங்கன்னா, அன்னியிலேருந்து பெண்குலம் உருப்பட ஆரம்பிச்சுடும்" என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/story/gnanacherukku.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs