http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




     என்ன காரணத்தாலோ முதலிலிருந்தே அவள் மேல் அவர் மனத்தில் ஒரு வெறுப்புத் தோன்றிப் படர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அந்த வெறுப்பு அதிகமாகியதே ஒழியக் குறையவில்லை. அந்த வெறுப்பின் காரணத்தையோ மூலத்தையோ அவர் ஆராய்ந்ததில்லை.

     சமய சந்தர்ப்பங்களும் அவள் காண்பித்த திறமைகளும் கூட அந்த வெறுப்பைத் தளர்த்தவோ மாற்றி அமைக்கவே முடியவில்லை. அவளது அபரிதமான அழகையும் மிஞ்சிய வெறுப்பாயிருந்தது அது. ஒரு பிரபலமான தினசரியில், திரைப்படம், நாடகம், நாட்டியம் போன்ற நுண்ணிய கலைகளுக்கு விமர்சனம் எழுதும் 'ஆர்ட் க்ரிடிக்' அவர். அவருடைய விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது. அவர் இரண்டு வார்த்தைகள் புகழ்ந்து எழுத மாட்டாரா என்ற ஏக்கமும் கலைஞர்களிடையே இருந்து வந்தது. பெரும்பாலான கலைஞர்கள் அவரை அண்ணா என்றே பவ்யமாக அழைத்தனர்.

     அதற்கு அவர் எழுதி வந்த தினசரியும் ஒரு காரணம். தேசீய அளவில் பரந்த செல்வாக்கும், சர்வ தேச மரியாதையும் உள்ளதாயிருந்தது அது. அவரும் மூத்த அநுபவசாலியாயிருந்தார்.

     புதிதாக வந்த சுகுணகுமாரியின் மேல் மட்டும் அவர் ஏன் அத்தனை வெறுப்பைக் காண்பித்து வந்தார் என்பது பெரும் புதிராயிருந்தது. பலருக்கு அது விளங்கவே இல்லை. படிப்படியாக முன்னேறிச் சுகுணகுமாரி நாடகத்தில் நடித்த போது, "இவள் நடிப்பது நாடகக் கலைக்கே அவமானம் உண்டாக்கக் கூடியது" என்று எழுதினார் அவர்.

     பின்பு அவள் நடனம் கற்று அரங்கேறியபோது, "காக்கை வலிப்பு வந்த மாதிரி மேடை மேல் உதறி நடுங்கிக் கை கால்களை விதிர் விதிர்ப்பது எல்லாம் நடனம் ஆகிவிடுவதில்லை" என்று சுடச்சுட வெளுத்துக் கட்டியிருந்தார்.

     நாடக அனுபவம், நாட்டியத் தகுதியாகிய இரண்டும் இளமையும் வனப்பும் கவர்ச்சியும் நிறைந்த உடலழகும் அவளைச் சினிமாவில் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்த போது, "இன்றைய சினிமா உலகம் எந்தத் தீமையையும் எந்த மோசத்தையும் எந்தச் சுமார் ரகத்தையும் ஏற்க முடியும். அது இப்போது சுகுணகுமாரியையும் ஏற்றிருக்கிறது" என்று கடுமையாக எழுதினார் அவர்.

     பிற இளம் விமர்சகர்கள் சிலரும், இளம் கலைஞர்களும், "எல்லாவற்றையும் கடுமையாகத் தாக்கி எழுதினால் மற்றவர்களுக்குத் தம்மேல் பயமும் மரியாதையும் இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அவர் தாக்கி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்" என்று தங்களுக்குள் பேசிக் கொள்வது கூட உண்டு. அவர்கள் தம்மைப் பற்றி அப்படிப் பேசிக் கொள்வது அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்கள் அவரை மதித்தனர். அவருக்கு அஞ்சினர்.

     சில துணிச்சலான இளம் விமர்சகர்களும் கலைஞர்களும் அவருக்குக் 'கிழட்டுப் புலி' என்று கூட ஒரு பட்டப் பெயர் சூட்டியிருந்தார்கள். சமயா சமயங்களில் தமக்குத் தாமே நினைத்துப் பார்க்கும் போது கூட அந்தக் காரணம் பொய் அல்ல என்று அவருக்கே தோன்றியது. ஆனால் உள்ளூறச் சில சந்தேகங்களும் அவருக்கே உண்டு தான். தாமாகவே மற்றவர்களிடம் பேசும்போது சவடாலாக ஏதாவது சொல்லி வந்தார். தம்முடைய பெருமையையும் மரியாதையையும் உயர்த்திக் கொள்வதற்காகப் பிறருடைய பெருமையைக் குறைத்துச் சொல்லவும் அவர் தயங்கியதில்லை. அது ஒரு பழக்கமாகவே கூட ஆகியிருந்தது.

     "இப்போ, புதுசா யாரோ ஒரு அழகான குட்டி, அவ பேரென்ன? சுகுணகுமாரியோ சகுணகுமாரியோ, யாரோ ஒருத்தி, அவ என்னை 'பர்ச்சேஸ்' பண்ணிடனுன்னு ப்ளாங் 'செக்' கொடுத்து ரகசியமா ஆளனுப்பினா, ஓய்! நானா மசிவேன்?" என்பார்.

     "என்னைத் தனியா மகாபலிபுரம் 'கோல்டன் ஸாண்ட்ஸ் பீச் ஹோட்டலில் போய் 'வீக் எண்டு'க்குத் தங்கலாம்னு அவளே ஒரு தினுசாச் சிரிச்சுக்கிட்டே கூப்பிட்டாங்காணும்! அதுக்கு வேற ஆள் பாருடீன்னுட்டேன்" என்று இன்னொரு சமயம் கூறுவார்.

     ஐம்பத்தேழு வயது நிறைந்து தலை பூரண சந்திரன் மாதிரி பளீரென்று வழுக்கையாகிப் போன 'ஆர்ட் கிரிட்டிக்' ஜம்புநாதனா இப்படிப் பேசுகிறார் என்று பலருக்கு நம்ப முடியாமல் கூட இருக்கும்.

     எந்தச் சமயத்தில் எப்படி மனநிலை இருக்கிறதோ அப்படி மற்றவர்கள் அவர் வாயில் அரைபடுவார்கள். சிலர் அவருடைய வாய்க்குப் பயந்தே அவரிடம் மரியாதையாக நடப்பது போல் நடித்தார்கள். பலர் நிஜமாகவே மதித்ததும் உண்டு.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/story/oruveruppin.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs