http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




     அம்பேத்கார் நகரில் போய் வைத்திய உதவிகளைச் செய்த பின் வழக்கமாக முதியோர்களுக்காக அங்கே நடத்தும் கீதை, குறள் வகுப்புக்களையும் முடித்துக் கொண்டு சுவாமி பரிசுத்தானந்தர் ஆசிரமத்துக்குத் திரும்பும்போது இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது. நல்ல நிலவொளி பகல் போலிருந்தது.

     அப்போது ஆசிரமத்துக்கு எதிர் வரிசையில் இருந்த அந்த லாட்ஜிலிருந்து ஒரே கூச்சலும் சத்தமுமாக ரகளையாயிருந்தது, அவர் கவனத்தைக் கவர்ந்தது.

     வழக்கமாக அமைதியாயிருக்கும் அங்கே என்றாவது ஒரு நாள் இப்படிக் கலவரமும் ரகளையும் நடப்பது உண்டுதான். ஆனால் வெளியிலிருந்து பிறர் தலையிடும் படியான ரகளையாக அது இராது. கேட்டைத் திறந்து சைக்கிளை உள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு மீண்டும் தெருவுக்கு வந்து நின்று கொண்டு காது கொடுத்துக் கேட்டார் சுவாமி. ஆளரவமற்ற நடுத் தெருவில் இரு புறத்து மரங்களின் பசுமைக்கிடையே அந்த நிலவொளியில் காவி உடையோடு எரியும் ஜ்வாலையாக நின்றார் அவர். "ஐயோ கொல்றாங்களே! கேட்பாரில்லையா? ஈவு இரக்கம் இல்லாத கொலைகாரப் பாவிங்களா!" என்று ஈனமான ஒரு பெண் குரல் காற்றில் வந்தது.

     கேட்ட குரலின் பரிதாப நிலையில் மனம் உருகிக் கால்கள் அந்த திசையை நோக்கி விரையத் துடித்தன. ஆனால் அறிவு தயங்க வைத்தது.

     பரிசுத்தானந்தர் அந்த லாட்ஜைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த செய்திகளே தயக்கத்துக்குக் காரணமாயிருந்தன.

     ஊரின் ஒதுக்குப் புறமான அந்தப் பகுதியில் தோன்றிய முதல் கட்டிடமே அவருடைய ஆசிரமந்தான். ஆசிரமம் தோன்றிய சில ஆண்டுகளுக்குப் பின்னே 'லாட்ஜ்' கட்டிடம் தோன்றியது. 'போர்டிங்' வசதிகள் எதுவும் இல்லாமல் இருந்தும், ஊரிலிருந்து விலகி ஒதுக்குப் புறமாயிருந்தும் அந்த லாட்ஜில் கூட்டம் பொங்கி வழிந்தது. லாட்ஜ் நடத்துகிறவரும் நிறைய லாபம் சம்பாதித்தார். நாளாக நாளாக அங்கே என்ன நடக்கிறது என்பது புரிந்தது. சட்டத்தின் காவலர்களும் அதற்குத் துணை என்றும் அவர்களுக்கு அதற்காக மாமூல் உண்டு என்றும் சொன்னார்கள்.

     சுவாமி பரிசுத்தானந்தரின் நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அந்த லாட்ஜ் வழியில் அங்கே இயங்குவதைத் தடுக்க முடியவில்லை.

     ஒரு ரிக்ஷா காலியாக அந்த லாட்ஜ் பக்கமிருந்து வந்தது.

     சுவாமி அந்த ரிக்ஷாக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டார். ரிக்ஷா அவரருகே வந்து யாரோ யாருடைய குரல்வளையையோ நெரிக்கிற மாதிரி கிறீச்சிட்டு நின்றது.

     "என்னப்பா, அங்கே கூப்பாடு?..."

     "ஒண்ணும் இல்லீங்க சாமி, லாட்ஜ்காரன் கிராதகனுங்க. ஒரு சின்னப் பொண்ணுக்கு அம்மை போட்டிருக்குதுங்க... ஈவு இரக்கம் இல்லாமே அதெப் போயி தொந்தரவு பண்றானுவ. கேள்வி கேப்பார் இல்லே."

     சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இப்போது சுவாமியின் கால்களும் தயங்கவில்லை; அறிவும் தயங்கவில்லை. அம்பு பாய்வது போல் நேர் எதிர்ப்பக்கம் லாட்ஜுக்குள் போய் நுழைந்தார். வாசலில் உயரமும் பருமனுமாக இருந்த நாளைந்து அடியாட்கள் கூட அவரைத் தடுக்க முடியவில்லை. கூப்பாடு வந்த திசையை அடையாளம் வைத்து நடந்ததில் ஓர் அறைக்குக் கொண்டு போய் விட்டது. கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு, முரட்டு ஆள் ஒருவன், கொடி போல் அழுக்குப் பாயில் துவண்டு கிடந்த இளம் பெண் ஒருத்தியைக் கையில் இருந்த பிரம்பால் விளாசிக் கொண்டிருந்தான். அவள் முகத்தில் அம்மை முத்துக்கள் தெரிந்தன.

     தேஜஸ் நிறைந்த கம்பீரமான தோற்றமும் காவி உடையுமாக ஒருவர் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவன் திகைத்துத் திரும்பினான்.

     அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. எரித்து விடுவது போல் பார்த்தார். அடுத்த கணமே யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் ஒரு குழந்தையை வாரி எடுப்பது போல் பாயில் கிடந்த அந்தப் பெண்ணை எடுத்துக் கொண்டு வெளியேறினார் சுவாமி. யார் என்ன செய்கிறார் என்று சுதாரித்துக் கொண்டு அவர்கள் தடுப்பதற்குள் விடுவிடுவென்று சுவாமி தெருவுக்கு வந்து தமது ஆசிரமத்துக்குள்ளே நுழைந்து விட்டார்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/story/pugazhthuravu.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs