http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




     துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துதான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள்.

     நொடித்துத் தளர்ந்து நோயில் விழுந்து விட்ட வயதான பெற்றோரையும், படித்துக் கொண்டிருக்கிற தம்பி தங்கைகளையும் காப்பாற்ற அவளுக்கு ஓர் உத்தியோகம் தேவைப்பட்டது. வெறும் உத்தியோகமாக மட்டுமில்லை. கை நிறையப் பணம் சம்பாதிக்கிற உத்தியோகமாகத்தான் தேடினாள் அவள். ஆனால் குறைவாகச் சம்பாதிக்க முடிந்த வேலைகூடக் கிடைக்கிற வழியாயில்லை.

     மாத்யூவை அவள் சந்தித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று அவனே நினைத்தான். முதலில் அவளும் அப்படித்தான் நினைக்க நேர்ந்தது.

     வியாபாரத்தில் மகத்தான பேராசைகளும், அதற்குத் தேவையான திட்டங்களும் முனைப்பும் உள்ள ஒரு நடுத்தர வயது மனிதனை நமக்குள் கற்பித்துப் பார்த்துக் கொண்டால் அவன் தான் 'மாத்யூ'வாக இருப்பான். மாத்யூவின் நினைப்பிலும் அகராதியிலும் 'சாத்தியமில்லை; முடியாது' என்ற வார்த்தைகளே கிடையாது.

     அவன் ஒருவனுடைய அகராதியில் மட்டுமில்லை. பணம் சம்பாதிக்க விரும்புகிற எவருடைய அகராதியிலும் அந்த வார்த்தைகள் இருக்க முடியாதுதான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் வியாபாரம்.

     மாத்யூவோ சகல கலா வல்லவனாக இருந்தான். அரண்மனைக்காரன் தெருவாகிவிட்ட அர்மேனியன் தெருவின் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் 'மாத்யூ டிராவல்ஸ்' - என்று போர்டு தொங்கினாலும் போர்டில் அறிவிக்கப்படாத வேறு பல லாபகரமான வியாபாரங்களையும் அவன் செய்தான். அவனுடைய நிறுவனத்தில் ஆண்களைவிடப் பெண்கள் - அதுவும் இளம் பெண்கள் - அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்தார்கள்.

     அகல்யவைப் பார்த்தவுடன் மாத்யூவுக்குப் பிடித்து விட்டது.

     "துபாய் வேலை ஒன்றும் லட்டு மாதிரி உடனே கையில் கிடைத்துவிடாது. அதற்கு நிறைய முன் பணம் செலவழிக்க வேண்டும். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கேயே வேண்டுமானால் ஒரு வேலை தருகிறேன்" - என்று வார்த்தைகளையும் புன்னகையையும் சேர்த்து அவள் முன் வழங்கினான் மாத்யூ.

     அகல்யா சம்மதித்தாள். அவளுக்கு மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரிந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலம் வரை அவர்கள் குடும்பமே பாலக்காட்டில் தான் இருந்தது. பின்புதான் சென்னைக்குப் பிழைப்பைத் தேடிக் குடியேறியது.

     மாத்யூவைப் போன்ற கெட்டிக்கார வியாபாரிக்கு இப்படி மூன்று மொழிகள் தெரிந்த பெண் எத்தனையோ விதங்களில் பயன்படக் கூடியவளாகவும் அவசியமாகவும் இருந்தாள்.

     எப்படியோ மாதம் இருநூறு, முந்நூறு ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை கிடைத்தால் கூடப் போதும் என்று தேடி அலைந்தவளுக்கு, "முதலில் மாதம் ஐநூறு ரூபாய் தர முடியும்! அப்புறம் போகப் போக ஏதாவது பார்த்துச் செய்யலாம்" என்று மாத்யூ கூறிய சொற்கள் அமிர்தமாகக் காதில் ஒலித்தன.

     'மாத்யூ டிராவல்ஸ்' அலுவலகத்தில் ஏற்கனவே அகல்யாவின் வயதை ஒத்த வயதுடைய வேறு சில பெண்களும் வேலை பார்த்து வந்தார்கள். துணைக்கு இன்னும் இரண்டு மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது அகல்யாவுக்கு ஆறுதலாக இருந்தது.

     வீட்டில் அப்பளமும், சீடையும், முறுக்கும் தயாரித்துக் கடைகளுக்கும், ஸ்டால்களுக்கும், தேடிக் கொண்டு போய் விற்றுப் பிழைத்து வந்த குடும்பத்தில் ஒரு நபர் உத்தியோகத்துக்குப் போய் மாதம் சம்பளம் வாங்கப் போவதை எண்ணினால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.

     "அகல்யாவுக்கு வசதியாக ஒரு வேலை கிடைச்சால் தான் நம்ம குடும்பம் தலை தூக்க முடியும்" என்று அடிக்கடி அவள் தந்தை பெருமூச்சுடனும் ஏக்கத்துடனும் கூறுவது உண்டு. அந்தப் பெருமூச்சுக்கும் ஏக்கத்துக்கும் இனி அவசியமில்லை என்பதை நினைத்தபோது ஒரு விநாடி அகல்யாவுக்கே நிம்மதியாயிருந்தது.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/parthasarathy/story/vasathiyagaoruvelai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs