கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்
இயற்றிய
ஆசாரக்கோவை (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ... தக்கணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும் முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால், எப் பாலும் ஆகா கெடும். 3
தக்கிணை - காணிக்கை வேள்வி - யாகம் ஆசிரியர்க்கு தட்சணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவம் செய்தலும், கல்வியும், இந்நான்கினையும் காத்து வாழ வேண்டும். இல்லையென்றால் எந்த உலகத்திலும் பயன் இல்லை. முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும் நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின் தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே - முந்தையோர் கண்ட முறை. 4
வைகறை - விடியற்காலம் யாமம் - பின்சாமம் விடியற்காலையில் விழித்தெழுந்து, மறுநாள் செய்ய வேண்டிய அறச்செயல்களையும், வருவாய்க்கான செயல்களையும், சிந்தித்து, தாயையும் தந்தையையும் தொழுது ஒரு செயலைச் செய்ய அறிவுடையோர் சொல்லிய முறையாகும். எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும் திட்பத்தால் தீண்டாப் பொருள். 5
எச்சிலார் - எச்சிலையுடையாராய் திட்பத்தால் - யாப்புற பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்டார். எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு, அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென, நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6
திங்கள் - மதி ஞாயிறு - சூரியன் புலையும், மதியும், நாயும், சூரியனும், மீனும் ஆகியவற்றை எச்சிலையுடையார் கண்ணால் காண மாட்டார். எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள், இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்- விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7
விழைச்சு - எச்சில் மல மூத்திரங்கள் இயற்றிய இயக்கம் இரண்டொடு, இணை எச்சில், வாயினால் வழங்கிய எச்சில் ஆகிய நான்கினையும் பாதுகாக்க வேண்டும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |