மதுரைக் கூடலூர் கிழார்
இயற்றிய
முதுமொழிக் காஞ்சி (உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.) ... தொடர்ச்சி ... 6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
நலன் உடமையின் - அழகுடைமையை விட நாணு - நாணமுடைமை அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது. 7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
குலன் உடைமையின் - நல்ல குணத்தையுடைமையினும் கற்பு - கல்வியுடைமை உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது. 8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
கற்றாரை - கற்ற பெரியாரை வழிபடுதல் - போற்றியொழுகுதல் கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது. 9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
செற்றாரை - பகைவரை செலுத்துதலின் - ஒறுத்தலினும் பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம்படுத்திக் கொள்வது சிறப்பானது. 10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
முன் பெருகலின் - முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும் சிறுகாமை - நின்ற நிலையில் குறையாதிருத்தல் செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று. 2. அறிவுப்பத்து ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் - 1. பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப.
ஈரத்தின் - அவனுக்குள்ள அருட்டன்மையினால் அறிப - அறிஞர் அறிந்து கொள்வர் கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ள மக்களுக்கெல்லாம் ஒருவன் உயர்ந்த குடியில் பிறந்தாலும் அவன் அருளால் அறியப்படுவான். 2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.
ஈரம் உடைமை - அருளுடைமையை ஈகையின் - அவன் கொடைத்தன்மையினால் இரக்கம் உள்ளவன் என்பது அவன் கொடுப்பதனால் தெரியும். 3. சோரா நல் நட்பு உதவியின் அறிப.
சோரா - நெகிழாத நல்நட்பு - உயர்ந்த நட்புடைமையை உதவி செய்யும் தன்மையினால் நல்ல நண்பர்களைப் பெறுவான். 4. கற்றது உடைமை காட்சியின் அறிப.
கற்றது உடைமை - கற்ற கல்வியுடைமையை காட்சியின் - அறிவினால் ஒருவன் பெற்ற கல்வியை அவனின் அறிவால் அறிவார்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |