http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



முன்றுறை அரையனார்
இயற்றிய
பழமொழி நானூறு

(உரையாசிரியர்: புலியூர்க் கேசிகன்)

... தொடர்ச்சி ...

181. மனக்கசப்புத் தரும் கடன்

     கடனாகக் கொண்ட ஒரு சிறந்த பொருளைக் கடனாளியின் கையிலே விட்டு வைத்திருப்பவர்கள், அவரிடத்திலே சென்று, எம்பொருளை இன்றே எமக்குத் தருவீராக என்றால், அவர் தருவதே முறை. அஃதன்றிப் பகையினை மேற்கொண்டவர் போலப் பேசத் தொடங்கி, அந்தப் பொருளைக் கடனாகப் பெற்றுக் கொண்டவர் வெகுண்டால், அது விளையாட்டாகச் சொன்னதே யானாலும், மனக் கசப்பைத் தருவதாய் விடும்.

கடங்கொண்ட ஒண்பொருளைக் கைவிட் டிருப்பார்
இடங்கொண்டு தம்மினே - என்றால் தொடங்கிப்
பகைமேற்கொண் டார்போலக் 'கொண்டார் வெகுடல்
நகைமேலும் கைப்பாய் விடும்'.

     வாங்கிய பொருளைத் தந்தவர் கேட்டதும் கொடாமல் இருப்பது மிகவும் தவறு. 'கொண்டார் வெகுடல் நகை மேலும் கைப்பாய் விடும்' என்பது பழமொழி.


182. வித்தைப் பொரிக்கும் மூடர்

     தம் உள்ளத்திலே ஆசைகள் அற்றவனாக அடங்கியிருந்து, ஐம்புலன்களையும் தம் ஆணைக்குள் அகப்படுமாறு செய்து, அவை மேற்செல்லாதபடி காத்துத் தாம் ஏற்றுத் தொடங்கிய துறவு நெறியின் கண், மனம் வாக்குக் காயம் என்ற மூன்றினாலும் மாட்சிமையுடையவராக விளங்கி, இவ்வுலகத்தே உடம்பானது ஒழிந்து போகுமாறு கைவிட்டுச் செல்லும் மறுமை நெறிக்குப் பாதுகாவலான உறுதியை, இளமையிலேயே செய்யாதவர்களே தீயின் மீது விதை நெல்லைப் பெய்து பொரித்து உண்ணும் மூடர்களாவார்.

அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்டு - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே
'கொள்ளிமேல் கொட்டு வைத்தார்'.

     விதை நெல்லால் பின்வரும் பயன் கருதாமல், வாய்ச் சுவைக்கு அடிமையாகிப் பொரித்துத் தின்பவர் அறிவிலிகளே; உடலெடுத்ததன் பயனாக உயிர்க்கு உறுதி தரும் காரியங்கள் செய்வதை மறந்து உடலின்பங்களிலே ஈடுபடுபவர் அவர். 'கொள்ளி மேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி. 'வித்துக் குற்றி உண்டாங்கு' என்பதும் இந்த மடமை குறித்ததே.

183. சொல்லால் வளைக்கவும்

     "யாம் உலகனைத்தையும் ஆள்வோம்" என்பது சொல்லும் அரசர்கள், வரையறை என்பதொன்று இல்லாமல் தீமை செய்தவர்களையுங் கூட அவசரப்பட்டுக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டுத் தோட்டத்திலே ஒருவன் தனக்குப் பயன் தருமாறு வளர்த்து வரும் மரத்தைப் போலச் சொற்களால் அவனை வளைத்துத் தமது அடி நிழலின் கீழ் இருக்கச் செய்து அடக்கியே கொள்வார்கள்.

எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்
ஒல்லை வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.

     மன்னர்கள், தம் பகைவரையும் தமக்கு அடிப்பட்டவராக்கி ஆள்தலையே செய்ய வேண்டும் என்பது கருத்து. 'கொல்லையுள் கூழ் மரமே போன்று' என்பது பழமொழி. கூழ்மரம் - கூழைப் பலாமரமும் ஆம்; பயன் தரும் பழமரமும் ஆம்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/pazhamozhinaanooru65.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs