பத்துப் பாட்டுக்களில் எட்டாவது
ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர்
பாடிய குறிஞ்சிப் பாட்டு திணை : குறிஞ்சி
பாவகை : ஆசிரியப்பா தோழி அறத்தொடு நிற்றல்
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல், ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், 5 வேறு பல் உருவில் கடவுள் பேணி, நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று, எய்யா மையலை நீயும் வருந்துதி நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும், புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், 10 உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின், தலைவியின் அன்பு மிகுதி
முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை, நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும், சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின், 15 மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல், ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை, எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்: மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப, நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி, 20 இருவேம் ஆய்ந்த மன்றல் இது என, நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ ? ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு என மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று, 25 ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல்
இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர் வினையிடை நின்ற சான்றோர் போல, இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்; கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், 30 வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது, எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச் செப்பல் ஆன்றிசின்; சினவாது ஈமோ! தினைப்புனம் காத்த வகை
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை, 35 முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப, துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெருங்குரல் நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி, எல் பட வருதியர் என, நீ விடுத்தலின், கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த 40 புலி அஞ்சு இதணம் ஏறி, அவண, சாரல் சூரல் தகை பெற வலத்த, தழலும் தட்டையும் குளிரும், பிறவும், கிளி கடி மரபின, ஊழ் ஊழ் வாங்கி, உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து 45 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |