பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்
இயற்றிய முல்லைப் பாட்டு ... தொடர்ச்சி ... அரசனுக்கு அமைத்த பாசறை
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர், நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு, மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, 45 இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரிவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர் நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ, கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, மெய்காப்பாளர் காவல்புரிதல்
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், 50 அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு, துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப் பெரு மூதாளர் ஏமம் சூழ நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், 55 தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி, எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின் குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப வன்கண் யவனர்
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை, மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, 60 வலி புணர் யாக்கை, வன்கண் யவனர் புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல், திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும், உரையா நாவின், 65 படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, பாசறையின் கண் வேந்தன் மனநிலை
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது, எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, 70 தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை 75 முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து பாசறையில் வெற்றி முழக்கம்
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல், நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி, அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |