பத்துப் பாட்டுக்களில் ஏழாவது
பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடிய நெடுநல்வாடை ... தொடர்ச்சி ... கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
மனை உறை புறவின் செங் கால் சேவல் 45 இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது, இரவும் பகலும் மயங்கி, கையற்று, மதலைப் பள்ளி மாறுவன இருப்ப; கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர், கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக; 50 வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப; கூந்தல், மகளிர் கோதை புனையார், பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார், தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, 55 இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப, கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த செங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி, சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின், 60 வேனில் பள்ளித் தென்வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப் போர் வாய் கதவம் தாழொடு துறப்ப; கல்லென் துவலை தூவலின், யாவரும் தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65 பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர; ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார், தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை, கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ, கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப; 70 காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து, கூதிர் நின்றன்றால் அரண்மனை அமைப்பு - மனை வகுத்த முறை
போதே, மாதிரம் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம், இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு, ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75 நூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு, தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி, பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து- கோபுர வாயில்
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின், பரு இரும்பு பிணித்து, செவ்வர்க்கு உரீஇ, 80 துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு, நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து, போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின், கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து, 85 ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை, வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக, குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில், முற்றமும் முன்வாயிலும்
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின், தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, 90 நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை குறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |