பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடிய பட்டினப் பாலை ... தொடர்ச்சி ... மக்களின் விளையாட்டுக்கள்
முது மரத்த முரண் களரி; வரி மணல் அகன் திட்டை, 60 இருங் கிளை, இனன் ஒக்கல், கருந் தொழில், கலி மாக்கள் கடல் இறவின் சூடு தின்றும், வயல் ஆமைப் புழுக்கு உண்டும், வறள் அடும்பின் மலர் மலைந்தும் 65 புனல் ஆம்பல் பூச் சூடியும், நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் நாள்மீன் விராஅய கோள்மீன் போல மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ, கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, 70 பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது, இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர், கல் எறியும் கவண் வெரீஇப், புள் இரியும் புகர்ப் போந்தை; பறழ்ப் பன்றி, பல் கோழி, 75 உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாட கடற்கரையில் பகல் விளையாட்டு
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி, நடு கல்லின் அரண் போல, நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய 80 குறுங் கூரைக் குடி நாப்பண்; நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்; வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர், 85 சினைச் சுறவின் கோடு நட்டு, மனைச் சேர்த்திய வல் அணங்கினான், மடல் தாழை மலர் மலைந்தும்; பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்; புன் தலை இரும் பரதவர் 90 பைந் தழை மா மகளிரொடு, பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது, உவவு மடிந்து, உண்டு ஆடியும்; புலவு மணல், பூங் கானல், மா மலை அணைந்த கொண்மூப் போலவும், 95 தாய் முலை தழுவிய குழவி போலவும், தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் மலி ஓதத்து ஒலி கூடல், தீது நீங்க, கடல் ஆடியும்; மாசு போக, புனல் படிந்தும்; 100 அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்; பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்; அகலாக் காதலொடு பகல் விளையாடி- அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |