பத்துப் பாட்டுக்களில் நான்காவது
தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடிய பெரும்பாண் ஆற்றுப்படை முது வேனிற் பருவம்
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில், யாழ்
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் 5 உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை; பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக் கரு இருந்தன்ன, கண் கூடு செறி துளை; உருக்கியன்ன, பொருத்துறு போர்வை; சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; 10 பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை; நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்; மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்; பொன் வார்ந்தன்ன புரி அடங்க நரம்பின் 15 தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ, பாணனது வறுமை
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது, பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப் பழுமரம் தேரும் பறவை போல, 20 கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண! பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரைத்தல்
பெரு வறம் கூர்நத கானம் கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்தாங்கு, பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு 25 வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி, வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு, யாம் அவணின்றும் வருதும்- இளந்திரையனின் மாண்பு
நீயிரும், இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் 30 திரை தரு மரபின், உரவோன் உம்பல், மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும், இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், 35 அல்லது கடிந்த அறம் புரி செங்கோல், பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின்; கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்! நாட்டின் அறப் பண்பாடு
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி, கைப் பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் 40 கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்; உருமும் உரறாது; அரவும் தப்பா; காட்டு மாவும் உறுகண் செய்யா; வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி, சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! 45 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |