பத்துப் பாட்டுக்களில் மூன்றாவது
ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
பாடிய சிறுபாண் ஆற்றுப்படை வேனிற்காலம்
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல, செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று, கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த புதுப் பூஞ் செம்மல் சூடி, புடை நெறித்து, 5 கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து, வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப, வேனில் நின்ற வெம் பத வழி நாள் காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப, 10 பாலை நின்ற பாலை நெடு வழிச் சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன்
ஐது வீழ் இகு பெயல் அழுகு கொண்டு, அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என, மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன் 15 மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய் உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ, வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து, ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின், சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், குறங்கு என. 20 மால் வரை ஒழுகிய வாழை; வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி; ஓதி, நளிச் சினை வேங்கை நாள்மலர் நச்சி, களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து, யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளி, 25 பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை; முலை என, வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின்; எயிறு என, குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின்; மெல் இயல்; 30 மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் நடை மெலிந்து அசைஇய நல் மென் சீறடி கல்லா இளையர் மெல்லத் தைவர, பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ, 35 நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கை வல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க, இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ, துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப, முனிவு இகந்திருந்த முது வாய் இரவல! 40 வஞ்சி மாநகரின் சிறப்பு
கொழு மீன் குறைய ஒதுங்கி, வள் இதழ்க் கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை பைங் கறி நிவந்த பலவின் நீழல், மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர, விளையா இளங்கள் நாற, மெல்குபு பெயரா, 45 குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் குட புலம் காவலர் மருமான் ஒன்னார் வட புல இமயத்து, வாங்கு வில் பொறித்த எழு உறழ் திணி தோள், இயல் தேர்க் குட்டுவன் வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று. 50 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |