பத்துப் பாட்டுக்களில் முதலாவது
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடிய திருமுருகு ஆற்றுப்படை பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இவரது இயற்பெயர் கீரன் என்பதாம். நெடுநல்வாடையை இயற்றியவரும் இவரே. இந்நூல் ஆற்றுப்படுத்தப்படுவர்கள் பெயரைச் சார்த்தி வழங்காமல் பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்ந்து விளங்குகிறது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செந்தமிழ் தெய்வமாகிய முருகப் பெருமான். இந் நூல் முருகன் எழுந்தருளியுள்ள ஆறு படை வீடுகளை பாராட்டும் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. திருப்பரங்குன்றம்
முருகக் கடவுளின் தோற்றப் பொலிவு
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு, ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி, உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள், செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 5 மறு இல் கற்பின் வாணுதல் கணவன் கடப்பமாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை, வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி, தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து, இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து 10 உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன் சூரரமகளிரின் உடல் அழகு
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி, கணைக் கால், வாங்கிய நுசும்பின், பணைத் தோள், கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், 15 பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல், கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை, சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி சூரரமகளிரின் அலங்கரிப்பு
துணையோர ஆய்ந்த இணை ஈர் ஓதிச் 20 செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு, பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி, தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, 25 துவர முடித்த துகள் அறும் முச்சிப் பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி, கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக 30 வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ் நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை, தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின் குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் 35 வேங்கை நுண் தாது அப்பி, காண்வர, வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா, சூரரமகளிர் ஆடும் சோலை
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி 'வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன் சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி 40 |
சென்னை நூலகம் தேடல் |
![]() Custom Search |
| இலக்கிய தகவல்கள் |