பத்துப் பாட்டுக்களில் முதலாவது
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
பாடிய திருமுருகு ஆற்றுப்படை ... தொடர்ச்சி ... சூரர மகளிர் ஆடும் சோலை
காந்தட் பூங்கண்ணி மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து, சுரும்பும் மூகாச் சுடர்ப் பூங் காந்தள் பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன் முருகன் சூரனைத் தடிந்த வகை
பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு, 45 சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் பேய்மகளின் துணங்கைக் கூத்து
உலறிய கதுப்பின், பிறழ் பல் பேழ் வாய், சுழல் விழிப் பசுங் கண், சூர்த்த நோக்கின், கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெரு முலை அலைக்கும் காதின், பிணர் மோட்டு, 50 உரு கெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல் கண் தொட்டு உண்ட கழி முடைக் கருந் தலை ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர வென்று அடு விறற் களம் பாடி, தோள் பெயரா, 55 நிணம் தின் வாயள் துணங்கை தூங்க மாமரத்தை வெட்டிய வெற்றி
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை, அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி, அவுணர் நல் வலம் அடங்க, கவிழ் இணர் மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து, 60 எய்யா நல் இசை, செவ்வேல் சேஎய் ஆற்றுப்படுத்தல்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு, நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும், செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன், நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப, 65 இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே: மதுரை மாநகரச் சிறப்பு
செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி வரிப் புனை பந்தொடு பாவை தூங்க, பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில், திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து, 70 மாடம் மலி மறுகின் கூடல் குடவயின் திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல்
இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக் கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், 75 அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |