http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சாமாவின் தவறு

     மகத்தான தியாகம் என்பதற்கு சாமாவின் அகராதியில் வெள்ளி குளத்திலிருக்கும் பாட்டியின் வீட்டிற்குப் போவது என்று பொருள். இந்தத் தியாகத்தைச் செய்யாவிட்டால், வருஷம் முழுவதும் கையில் சில்லறை ஓட்டத்திற்கு மிகுந்த தடை ஏற்படும் என்று பூரணமாக அறிவான்.

     சாமா பள்ளிக்கூட மாணவன். கல்விக் கடலில் இண்டர்மீடியட் என்ற சுழலின் பக்கம் நீந்திக் கொண்டு இருக்கிறான். வீட்டிலே பிள்ளை 'காலேசில்' படிக்கிறான் என்றதினால் ஓரளவு மரியாதை. வெளியிலே மாணவ உலகத்தின் கவலையற்ற குஷால் செலவு.

     இவ்வளவு கவர்ச்சிகளையும் விட்டுவிட்டுப் பாட்டியின் வீட்டிற்குப் போக வேண்டுமென்றால் அது தியாகம்தான். அந்தத் தியாக விஷயத்தை கோடை விடுமுறையில் அவன் வைத்துக்கொள்ளுவது வழக்கம். ஏனென்றால் டவுனில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இருக்காது, மறு ஜுன் மாதம் வரை.

     இருந்தாலும் பாட்டியின் முறுக்கும், 'எண்ணைக் குளி' தொந்தரவுகளும் சகித்துக்கொள்வதற்குக் காரணம், பாட்டியை விட்டுப் புறப்படும்பொழுது 'வழிச் செலவிற்கு'க் கொடுக்கும் தொகைதான்.

     சாமா வெள்ளி குளத்திற்குப் போக பஸ் ஏறும்பொழுது வேண்டா வெறுப்பாகத்தான் ஏறினான்.

     பஸ் வெள்ளி குளத்துச் சாலையில் வந்து நிற்கும் பொழுது கருக்கல் நேரமாகிவிட்டது. இவனைத் தவிர வேறு பிரயாணிகள் கிடையாது. ரஸ்தாவின் பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரு மனிதப் பிறவிகூடக் கிடையாது. டவுனில் புத்தகத்தைச் சுமப்பதே அநாகரிகம் என்று கருதும் சாமாவிற்கு, டிரங்குப் பெட்டியும் சுமப்பது என்றால் கொஞ்சம் மனம் கூசியது. ஆனால் கண்ணுக்கெட்டியவரை அவன் நண்பர் ஒருவரையும் சந்திக்க மாட்டோ ம் என்ற நம்பிக்கையில் பிறந்த உற்சாகத்தில் அதைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரை நோக்கி நடந்தான்.

     கருக்கலில் செல்வதற்கு மனம் நிம்மதியாகவிருந்தது. ஆனால் அடிக்கடி காலில் முள்ளுக் குத்திவிடுமோ என்ற பயம். போகும் வழி பனங்காட்டுகளிடையே செல்லும் ஒற்றையடித் தடம். இடைஇடையே குத்துச் செடிகள், கருவேல், இலந்தை முட்செடிகள் முதலியவை படர்ந்து நின்றன.

     டிரங்கு கையைக் கீழே அறுத்துக் கொண்டு விழுந்துவிடும்போல் வழியாய் வலித்தது. அடிக்கடி ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றிக் கொண்டான். 'சீ, என்ன இருட்டு... என்ன டிரங்கு, உளியாய் கனக்கிறது' என்று சொல்லிக்கொண்டான். இனிமேல் தூக்கிச் செல்ல முடியாது. இந்தப் பாழும் ஊர்தான் ரஸ்தாவின் பக்கத்தில் இருந்து தொலையக் கூடாதா? வேறு வழியில்லை. நாஸுக்கு மானம் எல்லாவற்றையும் கட்டி வைத்துவிட்டு, மேல் அங்கவஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு, டிரங்கை முக்கி முனகித் தலைமேல் வைத்துக் கொண்டு நடந்தான்.

     கொஞ்சநேரம் கைகளுக்கு மோட்சம். சற்று கவலை தீர்ந்தது. ஆனால் மூச்சுத் திணறுகிறது. தலை உச்சியும் கழுத்து நரம்புகளும் புண்ணாக வலிக்கவாரம்பித்துவிட்டன. சாமாவின் மனதில் வேறு ஒன்றும் தோன்றவில்லை. ஒரே எண்ணம் 'பெட்டி'. கால்நடைகள் 'டிரங்க்' 'டிரங்க்' என்று தாளம் போட்டு நடக்கிறது. நாவரள்கிறது.

     'பெட்டி!'

     உலகம் பூராவாகவும் அவன் எண்ணத்தில் தோய்ந்து கழுத்துப் பெட்டி மயமாகத் தெரிகிறது. கண்களில் கபாலத்தில் எல்லாம் பொறுக்க முடியாத வலி. 'சீ! பெட்டியாவது கிட்டியாவது! பெட்டியை எறிந்துவிட்டுப் போய்விடலாமா?' என்று இருக்கிறது.

     பனங்காட்டில் காற்றில் அலையும் ஓலைச்சப்தம். பழுத்துவிழும் பனம்பழங்களின் 'தொப்' , 'தொப்' என்ற சப்தம். தலையிலாவது ஒன்று விழுந்து தொலையாதா என்ற ஏக்கம்; எங்கு விழுந்துவிடுமோ என்ற பயம்.

     தூரத்தில் சிறு வெளிச்சம். அப்பாடா! ஊர் வந்துவிட்டது! வாய்க்கால் பாலத்தைத் தாண்டிவிட்டால் கொஞ்ச தூரந்தான். இதில் ஒரு ஊக்கம். கால் கொஞ்சம் விசையாக நடக்கின்றன. ஆனால் சிறிது நேரத்தில் கால்கள் தொங்கலாடுகின்றன...




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/saamaavinthavaru.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs