http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சமாதி

     நடுநிசி.

     மௌன்ட் ரோடு சாலையினருகில் இருக்கும் கல்லறைத் தோட்டக் காவல்காரன் குடிசையிலிருந்த நாய் அபாரமாகக் குலைக்கிறது. தோட்டக்காரன் நாயை அடக்கிப் பார்க்கிறான். அது கல்லறைத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டே குலைத்தது.

     ஜன்னல் வழியாக இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. உடன் கைவிளக்கை எடுத்துக்கொண்டு, நாயையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். நாய் கல்லறைகளின் பக்கமாகக் குலைத்துக் கொண்டே ஓடுகிறது.

     அதோ அந்த கல்லறையின் பக்கத்தில் என்ன? யாரோ குனிந்திருப்பது மாதிரித் தெரிகிறதே?

     ஓட்டமாக ஓடிச்சென்று பார்க்கிறான்.

     லாந்தலின் மங்கிய வெளிச்சத்தில் ஒரு வாலிபன், பிரேதக் குழியைத் தோண்டி அதனுள் இருந்த சவப்பெட்டியை யுடைத்து அதிலிருக்கும் பிணத்தை வெளியே இழுக்கும் பொழுது பிடித்துக் கொள்ளுகிறான்.

     அந்தப் பிரேதம் நேற்றுப் புதைக்கப்பட்ட ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியின் பிரேதம். பிரேதத்தை இழுத்துக் கொண்டிருந்தவன் வாலிபன். நல்ல நிலைமையில் இருப்பவன் போல் தோன்றியது.

     உடனே அவனைப் பின்கட்டாகக் கட்டிப் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சேர்த்துவிட்டான்.

     அந்த வாலிபன், ஒரு பிரபல வக்கீல். மல்ஹரிராவ் என்ற பெயர்.

     விசாரணை நடந்தது. மல்ஹரிராவ் செய்த கோரமான, வெறுக்கத்தக்க செய்கையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.

     விசாரணையைப் பார்க்க வந்தவர்களுக்கும், இந்த வக்கீலின் நடத்தை மனதைக் கொதிக்க வைத்தது. "தூக்கில் போட வேண்டும்" என்று பார்க்க வந்தவர்கள் தங்கள் இலவசத் தீர்மானத்தைக் கூறினார்கள்.

     கோர்ட்டில் ஏற்பட்ட அமளியை ஒருவாறு அடக்கிய பிறகு, நீதிபதி, குற்றவாளியை நோக்கி, "உன் சார்பாகக் கூற வேண்டியவற்றை சொல்" என்றார்.

     மல்ஹரிராவ் தனக்கு வாதிக்க ஒரு வக்கீலும் வேண்டாம் என்று முன்பே தடுத்துவிட்டார்.

     மெதுவாக எழுந்து நின்றார். நல்ல அழகர்; கட்டுறுதியுள்ளவுடல், மனவுறுதி காண்பிக்கும் உதடுகள், களங்கமற்ற முகம்.

     "மாட்சிமை தாங்கிய நீதிபதியவர்களே, ஜுரர்களே!

     "நான் அதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமாதியிலிருந்து என்னால் வெளியே இழுக்கப்பட்ட நங்கையை, நான் காதலித்தவன். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

     "நான் அவளைக் காதலித்தேன். எனது காதல் சரீர சம்பந்தமான வெறும் காமத் தீயல்ல. அது ஒரு தெய்வீகமான காதல். அது களங்கமற்ற தனிப்பெரும் உணர்ச்சி.

     "இன்னும் கேளுங்கள்.

     "நான் அவளை முதன்முதலாகச் சந்தித்த பொழுது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகள் ஆச்சரியமானது. கண்டதும் காதல் என்ற அழகின் மயக்கம் அல்ல. அவளைக் கண்டவுடன், எங்கோ கண்டது மாதிரி, மீண்டும் சந்திப்பது மாதிரி உணர்ந்தேன். அவளுடைய நடத்தைகளும், அவள் குரலும், எல்லாம் என்னை அவளுள் ஐக்கியப்படுத்தி விட்டன.

     "அவள் எனது ஆத்மிக ஆசையின் பதில் போலும், நம்பிக்கையின் பயன்போலும் எனக்குப் பட்டது.

     "சிறிது பழக்கம் அதிகப்பட்டது. அவள் என்னுடன் வாழச் சம்மதித்தாள். உலகம் தூற்றலாம். அதற்கு அதைத் தவிர வேறு என்ன தெரியும்? ஆனால் அந்தத் தெய்வத்தின் முன்பு அவள் எனது மனைவிதான். நான் அவளைப் பெற்றேன். அவள்தான் என் வாழ்க்கை. இதற்குமேல் நான் ஒன்றும் விரும்பவில்லை.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/samaathi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs