http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சணப்பன் கோழி

     பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. முதல் முதலாகப் பட்டினி கிடந்தாலும் கவர்ன்மெண்டு வேலைக்குப் போகவே கூடாது என்ற சித்தாந்தம். அவன் நிலைமைக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபம். அப்பா பென்ஷன் உத்தியோகஸ்தர் இவன் சித்தாந்தத்தைக் கேட்டதும் இத்தனை நாள் போஷித்த அப்பாவுக்குப் பலத்த சந்தேகம் - பரமேச்வரனுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதோ என்று - உண்டாயிற்று. அதிலே தகப்பனாருக்குக் கொஞ்சம் ஏமாற்றம். காலை மடக்கிக் கொண்டு முரண்டு செய்யும் மாடு என்றால் வாலைக் கடித்தாவது எழுப்பலாம்; பரமேச்வரனுக்கு வாலில்லையே!

     மனிதனுடைய வாழ்க்கையில் - தென்னிந்தியத் தமிழனுடைய வாழ்க்கையில் - வேலையை எதிர்பார்த்துக் காலத்தைக் கலாசாலையில் கழித்துப் படிக்கவைக்கும் முதல் முக்கியத்திற்குப் பிறகு, பெரிய இடத்துப் பெண்ணை - கை நிறையப் பணம் கொண்டுவரும் பெண்ணை - கலியாணம் செய்து வைப்பது இரண்டாவது முக்கியமான விஷயம். தான் பென்ஷனாவதற்குள், தன் மகனுக்கு வேலை பார்த்துக் கொடுத்துவிட்டு, தன் அந்திமக் கிரியைகளைப் பையன் சரியாக நடத்தும் நிலையில் கொண்டு வந்து வைப்பது மூன்றாவது வேலை.

     பரமேச்வரனுடைய தகப்பனாருக்கு முதல் வேலை விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. இரண்டாவதோ, அவருக்குப் பெரிய ஏமாற்றமாகிவிட்டது.

     பையன் பெரிய இடத்துப் பெண்ணை, கை நிறையப் பணமும் கழுத்து நிறைய நகையும் போட்டுவரும் பெண்ணை கலியாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். பையனது தர்க்கம் தகப்பனாருக்கு விளங்கவில்லை. சுகமாக இருக்க விரும்புவது மனித இயற்கை என்பது தகப்பனார் அனுபவம். அதில் இன்பம் கிடையாது என்பதுதான் பையன் சிந்தாந்தம். தகப்பனாருக்குப் பையன் நடத்தை அர்த்தமாகவில்லை.

     ஏழைப் பெண், சிறிது படித்த பெண், முக்கியமாகக் குணசௌந்தரியமுடைய பெண் வேண்டும் என்றான் பையன். முதல் இரண்டு நிபந்தனைகளும் சாதாரணமாக நிறைவேறிவிடும். மூன்றாவது? அதுதான் அதிசயம். பரமேச்வரன் எதிர்பார்த்தபடி, ஆசைப்பட்டபடி ஒரு பெண் கிடைத்தது.

     லால்குடிப் பெண். ஏழைப் பிரைமரிப் பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வீட்டுப் பெண் சாரதா. அந்த மூன்று நிபந்தனைகளுக்கு மேல் நான்காவது நிபந்தனை ஒன்றையும் நிறைவேற்றிவிட்டாள் சாரதா. அவள் நல்ல அழகி. பரமேச்வரன், கண்டதும் காதல் என்பதெல்லாம் பற்றிப் படித்திருக்கிறான். அதை அசம்பாவிதம் என்று நினைத்தவன்; கலியாணமான பிறகுகூடக் கட்டுக்கடங்காத பாசம் ஒருவனைப் பிடிக்கும் என்பதிருந்தால் பரமேச்வரன் அதற்கு ஓர் உதாரணம். அவன் சாரதாவிடம் தன்னை மறந்த மாதிரி, அவளும் பரமேச்வரனிடமே தன்னை மறந்தாள். இது பக்கத்திலிருப்பவருக்குப் பொறாமைப்படும்படியாக இருந்தது.

     பரமேச்வரனுடைய வாழ்க்கைச் சகடம் கலியாணமாகும் வரை 'கிர்ர்' என்ற சப்தமில்லாமல் மையிட்டதுபோல் ஓடிக்கொண்டிருந்தது. கலியாணமான 'பிறகு, முதல் அதிர்ச்சி, தனது சாரதாவின் மனம் கலங்குமோ என்றுதான். கலங்கும் நிலைமையும் ஏற்பட்டது. பறவை பெரிதான பிறகும் கூண்டில் இருக்க, அதுவும் கூட ஒரு ஜோடி சேர்த்துக் கொண்டு இருக்க, பெற்ற குருவிகள் இடம் கொடுக்குமா? இது இயற்கை. சிறிது மனத்தாங்கல், சாரதாவை அவள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு அவனை வேலை தேடும்படியாக்கிற்று.

2

     எங்கெங்கோ அலைந்து கடைசியாகப் பம்பாயில் அவனுக்கு 80 ரூ. சம்பளத்தில் வேலை கிடைத்தது. கிடைத்த மறு மாதம் கூட்டிப் போவதாக எண்ணம். சந்தர்ப்பம் ஒத்துவரவில்லை. எப்பொழுதும் சாரதா தியானந்தான். பக்கத்திலிருப்பவர்கள் பெண்டாட்டிக் கிறுக்கனோ என்று கூட நினைக்கும்படி இருக்கிறதென்று அவனுக்குத் தெரியும். பரமேச்வரன் என்ன யோகீஸ்வரனா, மனத்தை ஒரே இடத்தில் கட்டி வைக்க!

     சாரதாவுக்குத் தினம் ஒரு கடிதம். பதிலும் அடிக்கடி வந்து கொண்டிருந்தது - அவளுடைய குதலை எழுத்தில். அதைப் படிப்பதில் அவனுக்கிருந்த பிரேமை இலக்கிய ரஸிகனுக்குக் கம்பனைப் படிக்கும் பொழுது கூட இருந்திருக்காது.

     திடீரென்று அவள் கடிதம் வரவில்லை.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/sanappankozhi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs