http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சிவசிதம்பர சேவுகம்

     தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால் மேற்கு ரத வீதி வர்த்தகர்கள் அவரை சாமி, சாமி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கழுத்துப்பிடரி வரை வளர்ந்த சிகை; அதாவது அள்ளிச் சொருகி, நிலைகுலைந்து தவழும் சிகை; நரையோடி நெஞ்சை மறைக்கும் தாடி; கண்ணுக்கு மேல் பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம்; மல் வேஷ்டி, சிட்டி துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையில் இருளடித்த 'கர்ப்பக்கிருகம்' - இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை. லேயன்னா மேனா வீனா ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம். பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறிந்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் 'ஸ்பிளின்டர்ஸ்களாக' திருநெல்வேலி மேற்கு ரத வீதியில் வந்து விழுந்தார். அன்று விழுந்த இந்தச் சதைப்பிண்டம் இன்றும் நாடியின் தாள அமைதி குன்றாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது. அவருடைய சேவகமும் மாறியது கிடையாது. அவர் வந்தபோது லேயன்னா இருந்தார்; தாமிரவருணி ஆற்றில் பெருவெள்ளம் வந்து பையன்களைப் பரீட்சைக்குப் போகவிடாதபடியடித்து, ஊழியின் இறுதிக் காலத்தைக் கோடு போட்டுக் காட்டியபோது மேயன்னா இருந்தார்; சற்றுக் கண் விழித்து எழுந்த விராட புருஷன் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்த மாதிரி வந்த 1930-ம் வருஷ உப்பு யுகம் வந்த போது வீயன்னா இருந்தார். இப்பொழுது இம்மூன்றும் கலந்து தேசத்தை நெருக்கிய போது, விலாச முதலாளிகளின் புதல்வர்கள் பெயரால் கடை நடந்து கொண்டிருந்தது. முறையே மூத்த மக்கள் மூவரும் தம்முள் அத்தான் மைத்துனர்களாகி விட்டார்கள். அவர்கள்தானிருந்து கடையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், லேயன்னாவுக்கு இவர் தவிர ஒரு மகனும், மற்றும் இருவருக்கும் முறையே இரண்டிரண்டு பேரும் உண்டு. இவர்கள் சர்க்கார் முதல் மார்வாடி சேட் மாவுத் தொழிற்சாலை வரையுள்ள பெரிய வர்த்தக ஸ்தாபனங்களில் சேவகத் தொழில் செய்து கொண்டிருந்தார்கள். எப்போதோ ஒரு தடவை எட்டிப்பார்ப்பது, ஏட்டுக் கணக்குகளைப் பார்ப்பது, பிறகு 'ஒத்தி வைத்த' நலத்துக்காக சேவகம் செய்து சம்பளம் வாங்குவது, இப்படியே ஓடிய ரத்த பந்த சக்கரத்துக்குப் பின்னால் இழையாக அமைந்திருந்தார் சிவசிதம்பரம் பிள்ளை. சிவசிதம்பரம் பிள்ளைக்குத்தான் ஆதி முதல் அந்த ஜவுளிக்கடையின் உட்கணக்குத் தெரியும்; கடையின் மேசைப் பெட்டி மாதிரி, புத்தியும் ஜீவனும் விவேகமும் உள்ள மேசைப் பெட்டி மாதிரி, அவர் இருந்து வந்தார்.

     சிலர் பூட்டின் வாயிலேயே சாவியைத் தொங்கப் போட்டிருப்பார்களல்லாவா, அதேமாதிரி இந்த இளவட்ட முதலாளிகளும் இவரது மடியிலேயே சாவியைப் போட்டு வைப்பார்கள். அதாவது இவரது மடியில் அல்லது மூத்த பிள்ளை வள்ளியூர் லெச்சமணப்பிள்ளை பெட்டக சாலை கிழக்குச் சுவர் காந்தி படத்துக்குக் கீழே அல்லது சிவசிதம்பரம் பிள்ளை இடுப்பில் சாவி தொங்கிக்கொண்டிருக்கும். தான் உண்டு, தன் கணக்கு உண்டு, தன் காரியம் உண்டு என்றிருப்பவராகையால் முதலாளிகளுக்கு இவர் யாரோ காவேரிப் பாசனத்து மருதூர் கார்கார்த்த வேளாளர் என்பது மட்டும் தெரியும். சிவசிதம்பரம் பிள்ளை அதற்கு மேல் யாரையும் தெரிந்துகொள்ள விடுகிறதில்லை. லேயன்னாவினுடைய மூத்த மகனுக்கு கணக்குத் தப்பாமலிருப்பதில்தான் குறி. யாராயிருந்தால் என்ன; பேசுகிற பேரேடு என்று நினைத்து, அதற்குமேல் அவரைப் பற்றிச் சிந்திக்கிறதில்லை. அவர் 'மெட்டிக்கிலேஸனுக்கு' ஒரு வகுப்பு முந்தி தோத்துப்போய் பள்ளிக்கூடத்துடன் 'கத்திகிட்டு' வந்துவிட்ட காலம்; மைனர் பிள்ளையாக நடமாடுவதற்கு சற்று கால் தள்ளாட ஆரம்பித்தபோது, சிவசிதம்பரம் பிள்ளையின் 'உத்தியின்பேரில்' ஒரு தாலியும் கட்டி, வீட்டோ டு கட்டிப்போட்டு மேல ரத வீதி ஜவுளிக்கடை சொருகு பலகைகளுக்குள் சென்று வெளிவரும் சரக்கானார்கள். லேயன்னா கண்ணை மூடிய பிறகுதான் அவர் முதலாளி ஸ்தானத்துக்கு வந்து அப்பால் சென்று உலாவும் சரக்காகப் பரிணமித்தார். லேயன்னா கண்ணை மூடும்போது, "செலம்பரம், செலம்பரம்" என்ற ஜெபந்தான். பிரிவு, கடையைப் பிரித்துவிடாமல் சிவசிதம்பரம் பிள்ளைதான் இருந்து லேயன்னா கடைப் பங்கு வகையராவையும், கன்னடியன்கால் பாசன நன்செய் வகைகளையும் ஈவு செய்து மக்களுக்குள் குடுமிப்பிடி வராமல் பார்த்துக் கொண்டார்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/sivachidambarasevugam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs