http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சொன்ன சொல்

     நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம் உள்ளது. ஏழுமாத கர்ப்பிணியாக அவரது தாயார் அவரைச் சுமந்துகொண்டு சுப்பையா பிள்ளையுடன் மருதூரைவிட்டு புறப்படும்போது ஊரே கண்ணீர் வடித்தது என்று சொல்ல வேண்டும். வாழையடி வாழையாக நல்ல செயலிலிருந்த பண்ணையார் சுப்பு பிள்ளையின் குடும்பம் நொடிந்துவிட்டது. பண்ணையார் சுப்பு பிள்ளை சொன்ன சொல் தவறாதவர் என்று பெயர் வாங்குவதற்கே தம்முடைய நண்பரும் காசுக்கடைப் பிள்ளையுமான உமையொருபாகன் பிள்ளைக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பதற்காக பூர்வீக நிலத்தை எல்லாம் விற்றார். அவருக்கு உதவினார். ஆனால் கடை முறிந்த போது சுப்பையா பிள்ளையின் குடும்பமும் முறிந்தது.

     உமையொருபாகன் பிள்ளை ஆதியில் காசுக்கடை ஆரம்பிக்கும் போது பிள்ளையவர்களையும் பங்கெடுத்து கூட்டாளியாக வரும்படி கேட்டார். ஆனால் பிள்ளையவர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. "எனக்கு பூமியைப் பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதமாட்டேன் என்கிறது. வியாபாரத்தில் ஈடுபடுவது என்றால் நிலம் மண்ணாகப் போய்விடும்; நான் ஒன்று சொல்லுகிறேன்; உனக்கு ஆபத்து வந்தால் எந்த நிமிஷமானாலும் என்னிடம் வா; கை கொடுக்கிறேன்" என்றார். அந்தக் காலத்தில் அவர் அப்படி கையடித்திருக்கும்போது, தன்னை ஒரு விஷப் பரீட்சைக்கு ஆளாக்கிக் கொள்ளுகிறோம் என்று நினைத்தாரோ என்னவோ.

     ஒரு நாள் இரவு 11 மணிக்கு மருதூரில் உமையொருபாகன் பிள்ளை இரட்டை மாட்டு வண்டியில் வந்திறங்கி வாசலில் நார் கட்டிலில் படுத்திருந்த சுப்பையா பிள்ளையவர்களின் காலைக் கட்டிக்கொண்ட பொழுது சத்தியசந்தனாகிவிடுவது என்று உறுதியாக நினைத்தார். உமையொருபாகன் பிள்ளை கேட்ட தொகை திடீரென்று சேகரிக்கக் கூடியதுமல்ல; சேகரித்துக் கொடுத்தாலும் அவரது நிலையையே சற்று ஆட்டி வைக்கக் கூடியது. பேசாமற் உள்ளே சென்று பெட்டியை திறந்து பார்த்தார் வீட்டில் ரொக்கமாக ரூ.2000-ந்தானிருந்தது. "ஏளா, அங்கே என்ன செய்யுறே" என்று மனைவியைக் கூப்பிட்டு கைவசமுள்ள நகைகளை எடுத்துக் கொடுக்கும்படி கேட்டார். கணவருடைய வேண்டுகோள் விபரீதமாகப்பட்டது. கர்ப்பிணி, அந்த சமயத்தில் நிதானித்துப் பேசுவதற்கு இயலுமா? யார்தான் சாதாரண காலத்தில் கூட தம்முடைய கணவரின் நண்பருக்காக கழுத்து நகையை அவிழ்த்துக் கொடுக்க சம்மதிப்பார்கள். அவள் முடியாது என்றதும், நண்பனது கஷ்டத்தைத் தீர்த்து வைப்பது தமது கடமைகளில் ஒன்று என்று நினைத்து, நிலத்தை அடமானம் வைக்க முற்பட்டார். இரண்டொரு புள்ளிகள் விற்பனை என்றால் சம்மதிப்பதாக சொன்னார்கள். இன்னும் இரண்டொரு நண்பர்களிடம் கைமாற்றாக வாங்கிய தொகை ரூ.5000-ம் போக மீதிக்கு நிலத்தை விற்றுக்கொடுப்பது என்று தீர்மானித்தார். சுப்பையா பிள்ளை இவ்வளவு அக்கறை காட்டுகிறதைப் பார்த்தால் இதில் ஏதோ சூது இருக்கிறது என்று சிலர் சந்தேகித்தார்கள். மறுநாளைக்கு பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்துகொள்ள சம்மதிப்பதாக பணம் கொடுக்கிறவரை இணங்க வைப்பதற்காக நிலத்தையும் அதற்கு இசைந்தாற்போல ஏராளமாக தியாஜியம் செய்ய வேண்டியிருந்தது. உமையொருபாகன் பிள்ளை கையில் ஏழாயிரத்துடன் டவுனுக்கு ஏகினார். மறுநாள் விற்பனைப் பத்திரத்தை ரிஜிஸ்தர் செய்து தொகையுடன் சுப்பையா பிள்ளையவர்கள் டவுனுக்குச் சென்றார். உமையொருபாகன் பிள்ளையையும் தொகையையும் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான்.

     மூன்று நாட்கள் கழித்து உமையொருபாகன் பிள்ளை வைரத்தைப் பொடித்துத் தின்று மாண்டுபோனார். கடை முறிந்தது. ரூபாய்க்கு அரையணாக்கூடத் தேறாது எனச் செய்தி வந்தது.

     மாலை ஐந்து மணி இருக்கும்; டவுனுக்கு காரியமாக சென்றிருந்த வேலப்ப பிள்ளை வேகுவேகென்று ஓடி வந்து தகவலைச் சொன்னார்.

     பிள்ளையவர்கள் ஒன்றும் பேசவில்லை. வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். புகையிலையை எடுத்துச் சாவதானமாக போட்டுக் கொண்டு, "இருங்க தம்பி வர்ரேன்" என்று சொல்லிவிட்டுப் போனார்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/sonnasol.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs