http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



திருக்குறள் குமரேச பிள்ளை

     நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்லுகிறார்களே, 'உயிர்க் காலேஜ்', 'செத்தக் காலேஜ்' என்று - சென்னையில் அவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம் ஒன்றுமில்லை, - அதில் இரண்டாவதாக ஒரு காலேஜ் சொன்னேனே, அதில் அவசியமாக இருக்க வேண்டிய பொருள், எங்களின் அதிர்ஷ்டத்தாலும், சென்னையின் துரதிர்ஷ்டத்தாலும், எங்களூரிலேயே இருக்கிறது. அதுதான் எங்களூர் திருக்குறள் குமரேச பிள்ளை.

     இந்தத் திருவாளர் தமது திவ்ய சரீரத்திலேயே இந்த உலகத்துப் 'பென்ஷனையும்' காருண்ய அரசாங்கத்தின் பென்ஷனையும் சுமந்து மகிழும் பெரியார். இவரைப் பார்க்கும்பொழுதெல்லாம், குறள் ஒன்றும் எனக்கு ஞாபகம் வராவிட்டாலும், 'பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க' என்று வரும் பாட்டு எனது மனதில் கிடந்து கொம்மாளம் அடிக்கும்.

     கொஞ்சம் வருணிக்கலாமா? உச்சிக்குடுமி. சிவனைப்போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வைத்த 'இமிடேஷன்' நெற்றிக்கண்; கொசுவைக்கூடக் கொல்லச் சக்தியற்ற சந்தனப் பொட்டு. அதற்குப் பகைப்புலமாக விபூதி. கழுத்தில் தங்க நாண் இட்ட ருத்ராக்ஷம்... தப்பு, உருத்திராக்கம். அதை மறைக்க முடியாமல் நாணமுற்றுத் தவிக்கும் காலர்களுள்ள நாகரிகச் சீமை 'டுவில்' ஷர்ட், அதற்குமேல் நாஸுக்காகப் போடப்பட்ட டர்க்கி துண்டு, இடையில் தூய லங்காஷர் மல். இடது கையில் பொடி டப்பி, வலது கையில் மடித்த குட்டிக் குறளும், ருத்திராக்ஷ மாலையும் - இம்மாதிரி இவர் 'வெள்ளைக் கலையுடுத்து', 'புத்தகம் பொடிகை மாலை' இத்யாதி சின்னங்களுடன் தோன்றும் ஓர் ஆண் சரஸ்வதியாகவே (விஷ்ணு பெண்ணுரு எடுத்தால் சரஸ்வதி ஏன் ஆணுரு எடுக்கக் கூடாது?) தோன்றுவார். இது அவர் நமக்குச் சாதாரண நேரங்களில் சாதித்தருளும் திவ்விய சேவை. விசேஷ காலங்களில்... ஐயோ, என்னால் முடியாது.

     இவர் பேச்செல்லாம் சிறு பிரசங்கங்கள். இவரைக் காணும்பொழுது எல்லாம் எனக்கு ஒரே ஒரு எண்ணம் தோன்றும். இவர் மூளையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டு இருக்கும் குறள் எல்லாம், இவர் வாயைத் திறந்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வருகிற மாதிரித் தெரியும். எத்தனையோ வருஷங்களாகியும் இந்தத் திருக்குறளுக்கு விடுதலை என்ற சுய ஆட்சி கிடைத்த பாடு இல்லை.

     உயர் திருக்குறள் குமரேச பிள்ளைக்கு மூன்றில் எப்பொழுதும் நம்பிக்கை. தெய்வங்களும் மூன்று. இலக்கியமும் மூன்று. ஒன்று சிவஞானபோதம், இரண்டு காஞ்சி புராணம், மூன்று பெரிய புராணம். இவை மூன்றின் கருத்தையும் கலந்து பொருந்தியது திருக்குறள் என்ற தமிழ்மறை.

     எங்களூரின் கிழக்குப் பக்கத்தில் ஒரு வெளியுண்டு. அதில் ஒரு கட்டிடம். வாரத்தில் ஐந்தரை நாட்கள் ஆரம்பப் பள்ளிக் கூடமாகவும், ஒன்றரை நாட்கள் உபாத்தியாயரின் மனைவி நெல் காயப்போடும் ஸ்தலமாகவும், மார்கழி மாதத்தில் பஜனை மடமாகவும், முக்கியமாக எங்களூர் கோகலே ஹாலாகவும் திகழ்ந்தது. அதில்தான் நமது குமரேச பிள்ளையின் 'அரங்கேற்று காதை' நடிக்கப்படும்.

     வீட்டில் ஒரு பாகத்தைக் கோவிலாக்கி, கலைத்திறன் ஜலத்திற்கும் இல்லாத படங்களின் முன் புஷ்பங்களையும் மருந்தையும் வாரித் தெளித்து, பூஜை என்ற மகத்தான பொழுதுபோக்கு யக்ஞத்தைச் செய்தும், கழிக்க முடியாத மணிச் சங்கிலிகளை, இந்தத் திருச்சபையில் கழிக்க முயலும் பெரியவர்களும், பத்து ரூபாய்களுக்காக, 'பானா' 'ழானா' 'இம்மன்னா' 'பழம்', 'இரண்டும் இரண்டு நான்கு' என்ற அஸ்திவாரக் கப்பிகளை, கல்வி என்ற பெருங்கோவிலைக் கட்டுமாறு, சிறுவர் மூளை என்ற திவ்வியப் பிரதேசத்திலே நாள் முழுவதும் இடித்துச் செலுத்தும் திருப்பணியில் அயர்ந்து தளர்ந்து நித்திரை சுவானுபூதியை விரும்பும் மூளையின் கொற்றர்களும், வாழைப்பழத் தோலில் சறுக்கி விழுவதிலிருந்து, இரண்டு நாய்களின் குருக்ஷேத்திரம்வரை, இமைகொட்டாமல் பொறுமையுடன் பார்க்கச் சக்தி வாய்ந்த, குளிக்காத நாயனார்களும், - இவர்களுக்குத்தான் குமரேச பிள்ளையின் சண்டமாருதத்தைத் தாங்கும் எஃகினாலான மூளைகள் உண்டு.

     சாயங்காலம் ஐந்து மணிக்கு ஆரம்பித்து, மேஜையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இருக்கும்வரை, அல்லது குமரேச பிள்ளைக்குப் பசி எடுக்கும்வரை, இந்தச் திருச்சபை நடக்கும். கேட்க வந்தவர்களைப் பற்றி அவருக்குக் கவலை என்ன? செவிக்குணவு இல்லாத போதன்றோ சற்று வயிற்றுக்கும் ஈயவேண்டும்!

     ஒருநாள் எக்கச்சக்கமாக அங்கு அகப்பட்டுக்கொண்டேன்.

     குமரேச பிள்ளை எழுந்து, 'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்' என்று கண்ணை மூடியவண்ணம் பிலாக்கணம் வைத்துவிட்டுப் பேசலானார்:




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/thirukuralkumaresapillai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs