http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



துன்பக் கேணி

1

     வாசவன்பட்டி என்றால் திருநெல்வேலி ஜில்லாவாசிகளுக்குத் தெரியாது. ஜில்லாப் படத்தைத் துருவிப் பார்த்தாலும் அந்தப் பெயர் காணப்படாது; அது ஜில்லாப் படத்தின் மதிப்பிற்குக் கூடக் குறைந்த ஒரு சிறு கிராமம். ஊரைச் சுற்றிலும் பனை. பெட்ரோல் நாகரிகத்தின் ஏகாதிபத்தியம் செல்லும் ஜில்லா போர்ட் ரஸ்தாகூட, அது தன் மதிப்பிற்குக் குறைந்தது என்று நினைத்துக் கொண்டு, ஊரைவிட்டு விலகி 1/2 மைலுக்கு அப்பாலேயே செல்லுகிறது. ரஸ்தாவைவிட்டு இறங்கிக் கிழக்குப் பக்கமாக ஒரு மைல் சுமாருக்கு உடைமுள்ளும் சோற்றுக் கத்தாழையும் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருக்கும் வண்டித் தடத்தில் சென்றால் ஒரு பனங்காட்டில் கொண்டுவிடும். அந்தக் காட்டில் தான்தோன்றியாகச் சென்று கொண்டிருக்கும் எந்த ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றாலும் வாசவன்பட்டி எல்லைக்கு வந்துவிடலாம்.

     ஊர் ஆரம்பித்துவிட்டது என்ற குறிப்பு என்னவெனில், பனங்காடு முடிந்து மறுபடியும் அந்த வண்டித்தடம் இரண்டு குட்டிச்சுவர்களுக்கிடையில் அற்புதமாகத் தோன்றுவதுதான். அவ்விரண்டு குட்டிச்சுவர்களும் எதிர்எதிராக இரண்டு 'நந்தவனத்தை'ச் சுற்றி வருகின்றன. தங்க அரளியும், செவ்வரளியும், முல்லையும் தறிகெட்டு வளர்ந்திருக்கும் ஒரு பிரையிடம். 'நந்தவனம்' ஒவ்வொன்றிலும் ஒரு கிணறு உண்டு.

     இதைக் கடந்துவிட்டால் கிழக்கே பார்த்த கோவில், மிகவும் பாழடைந்து, மதில்கள் இடிந்து, மொட்டைக் கோபுர அலங்காரத்துடன் காணப்படும். அந்தக் கோவிலின் அர்ச்சகர் வீடு ஒன்றையும் இரண்டு மூன்று இடிந்து கூரை விழுந்த வீடுகளையுமுடைய தெருத்தான் அக்ரகாரம். அது இருபது அடிக்கப்புறம் மறுபடியும் திரும்பி, கத்தாழைச் செடி பூவரச மரங்களுக்கிடையில் சென்று, பிள்ளைமார் வீதியாக மாறுகிறது. தட்டோ டு போட்டு நாழி ஓடுகளால் சாய்ப்பு இறக்கிய பெரிய வீடுதான் பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளையின் வீடு. அதைத் தொடர்ந்த இரண்டு மூன்று வளைவுகளில் கணக்கு முதலியார், கி.மு. சங்கரலிங்கம் பிள்ளை, பலசரக்குக் கடை ஓட்டப்பிடாரம் பிள்ளை - ஓட்டப்பிடாரம் என்ற ஊர் அவரது பூர்விகம் - வாத்தியார் சுப்புப் பிள்ளை, பிள்ளையார் கோவில் பூசாரி வேணுவலிங்கப் பண்டாரம் - இவர்கள் எல்லோரும் வசிக்கும் குடிசைகள். குடிசைகளைப் பார்த்தாலே, அவர்கள் பண்ணைப் பிள்ளையைப் போல் வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெற்றவர்கள் அல்லர் என்று தெரிந்துவிடும். எல்லாரும் பண்ணைப் பிள்ளையவர்களின் வயல்களை, வாரமாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து ஜீவிப்பவர்கள். வேளாளர் எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்றுதான். கமறும் தேங்காயெண்ணெய் வாசனை பரிமளிக்கும் இந்தத் தெருவைத் தாண்டினால் ஊர்ப் பொட்டல். அதில் தனிக்காட்டு ராஜாவாக, தேஜோமயானந்தமாக, ஊர்க்காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம் நெடுமரம் போல் காறைக் கட்டியினால் உறுதியாகக் கட்டப்பட்டு நிற்கும். இடிந்து விழுந்த கோவிலில் மூர்த்தீகரமாக எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணுவை விட இவருக்கு ஊர் மக்களிடையில் அதிக மதிப்பு உண்டு. அது அந்தச் சுடலைமாடனுக்குத் தெரியுமோ என்னவோ! அதைச் சுற்றி ஐந்தாறு மறவர் குடிசைகள், இவற்றில் ஊர்த் தலையாரி முதலியோர் வசிப்பார்கள். குடிசைகளைத் தாண்டிச் சென்றால் மானாவாரிக் குளம் - அதாவது தண்ணீருக்கு வானம் பார்க்கும் ஏரி. அதன் இக்கரையின் வலப்புறத்தில் பறைச்சேரி; அங்கு ஒரு முப்பது குடிசைகள்.

     வேளாளர் தெருவில், ஊர்ப் பொட்டலை அணுகினாற் போல் பண்ணைப் பிள்ளையவர்கள் கட்டிய சவுக்கை, ஓலைக்கூரை வேய்ந்த திண்ணை, ஒட்டப்பிடாரம் பிள்ளையின் பலசரக்குக் கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கும். ஊர்ப்பேச்சு, ஊர்வம்பு, கி.மு.வின் அரசாங்க நிர்வாகம், சீட்டாட்டம் எல்லாம் அங்குதான். சவுக்கையில் வேனிற்காலங்களில் இரவில் ஆட்கள் படுப்பதற்கும், பகலில் 'பெரிய மனிதர்' சாய்ந்திருந்து போவதற்கும் கோரைப் பாய், அழுக்குத் தலையணை, திண்டு முதலியவை மூலைக்கு ஒன்றாகக் கிடக்கும். ஓட்டப்பிடாரம் பிள்ளையின் கடையில் ரூலர் சிகரெட் முதல் பின்னை எண்ணெய் வரை வாங்கிக் கொள்ளலாம். மகா சிவராத்திரி, சுடலைமாடனுக்குக் கொடை முதலிய காலங்களில் அவர் சீட்டுக்கட்டுகளும் விற்பார். ஓட்டப்பிடாரம் பிள்ளை பலசரக்குகளில் மட்டும் வியாபாரம் செய்பவர் அல்லர். குழிப்பெருக்கம், அரிவரி முதலிய ஆரம்பக் கல்வி விஷயங்களிலும் பண்டமாற்று வியாபாரம் நடத்துபவர். உற்சாகம் வந்துவிட்டால் கடை முன்பு கூடியிருக்கும் தேவமார்களுக்கு 'மருதை வீரன்' கதை, அல்லியரசாணி மாலை முதலியவற்றை வாசித்துக் காலட்சேபம் செய்வார். சவுக்கையில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் அடிபட்டால் அவர் கடையிலிருந்து கொண்டே கூட்டத்தில் தம்முடைய பங்கையும் சேர்த்துவிடுவார்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/thunbakkeni.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs