http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



விபரீத ஆசை

     தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு, மோளம் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுபத்தி, எருமுட்டை கலந்த வாசனை தூரத்துப் படை எல்லாம் மெட்ராஸ் பிண 'வாசனை நாற்றம்' கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்துச் சிந்தனையையும் தாக்கியது.

     நான் இப்பொழுது நிற்பது என் வீட்டு மொட்டை மாடி.

     மனிதனுக்குப் பிணத்தைப் பார்க்கும் ஆசை, எல்லா ஆசைகளையும் விடப் பெரிது. பயத்தில் பிறந்த ஆசையோ என்னவோ!

     அது ஒரு பணக்கார பிணம். அதாவது மாஜி பணக்காரனாக இருந்த பிணம்.

     உடன் வருகிறவர்கள் ஜாஸ்தி, கொள்ளி வைப்பவனுக்குக் கைத்தாங்கள் சம்பிரமம் எல்லாம்.

     பிணம், பட்டு அணிந்திருந்தாலும் வாயைத் திறந்திருந்தது. திறந்த வாயைச் சந்தனம் அப்பி மூடியிருந்தார்கள். அப்பொழுதுதான் குளித்து எழுந்தவர் மாதிரி வாரிவிடாத நரைத்த கிராப்புத் தலை.

     என் கண்கள் இந்த நுணுக்கமான விவரங்களை உயரவிருந்து இரண்டொரு நிமிஷ காலத்தில் கவனித்த தென்றாலும் என் மனம் வேறெங்கோ சென்றுவிட்டது.

     நேரத்தையும் தூரத்தையும் தாண்டிச் செல்லும் யந்திர விசை சிந்தனையிடந்தானே இருக்கிறது?

     "புனரபி மரணம், புனரபி ஜனனம்... ..."

     "இதிலென்ன புதுசு... சவத்தை விட்டுத் தள்ளு" என்றது விவகார அறிவு. ஆனால் பற்றுதல் விட்டால் தானே?

     "புனரபி மரணம்"... இத்யாதி... இத்யாதி.

     இதைக் கங்கைக் கரையில் உட்கார்ந்து கொண்டு நிர்விசாரமாகச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

     கலியாணமாகாத வயது வந்த கன்னிப் பெண்ணை வைத்துக்கொண்டு, காக்க முயலும் மாஜி சுமங்கலி அவ்வாறு நிர்விசாரமாக இருப்பாளா? அதுதான் போகட்டும்; நாளைக்கு அடுப்பு மூட்ட வேண்டுமே!

     வாழ்வென்ற குளத்தில் நிரந்தரக் கடன் என்ற பாசியை ஏதோ இரண்டொரு நாளாவது விலக்கும் முப்பது ரூபாயை இனி யார் வந்து போடுவார்கள். ஜட்கா வண்டிக் குதிரை மாதிரி ஓடி ஓடி உழைத்தவருக்கு நாலு பேர் சவாரி சௌகரியமாக இருக்கும். ஆனால் அவரை விட்டால் கதியில்லை என்பவருக்கு...

     அந்தக் காலத்தில் ரங்கசாமி நண்பன் தான், ரொம்ப நல்லவன்; சாது. அத்தோடு அவன் மனைவியும் ரொம்ப நல்லவள், சாது. அதுமட்டுமா? விவரம் தெரியாத அழகி.

     நான் அப்பொழுது அவர்கள் வீட்டுக்குப் போவேன்... அடிக்கடி.

     என் குழந்தையின் வியாஜமாக நான் அங்குச் செல்லுவேன்... என் குழந்தைக்கு அவர்கள் பேரில் ரொம்பப் பிரியம். அவர்களுக்கும் அப்படித்தான்.

     நான் என் நண்பனைப் பார்க்கப் போவேன். என் எண்ணம் அத்துடன் நின்றுவிடவில்லை. அது அவர்கள் இரண்டு பேருக்கும் தெரியாது. என் மனமும் விழுந்துவிட ஆரம்பித்தது. இப்பொழுது எனக்கு அவள் பேர் கூட ஞாபகமில்லை. அவ்வளவு காலமாகி விட்டது...?

     ரங்கசாமி வாழ வேண்டிய இடம் சர்க்கார் ஆஸ்பத்திரி. என்னமோ தவறிப் போய் மேடைத்தெரு 9-ம் நம்பர் வீட்டில் குடித்தனம் நடத்தினான். அவனும் நானும் ஒரே ஆபீஸில் தான் வேலை பார்த்து வந்தோம்; அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம்; எனக்கு ஐம்பது ரூபாய் சம்பளம்; எனக்குக் கால் தடுக்கினால் எங்கப்பா வைத்துவிட்டுப்போன வயல் வரப்பின் மேலாவது விழலாம்; அவன் கடன்காரன் காலடியில்தான் விழவேண்டும்; எத்தனையோ தடவை கடன்காரன் காலடியில் விழுந்திருக்கிறான்; கடன்காரனுக்குப் பின்னால் டாக்டர் எப்பொழுதும் நிற்பார்.

     நான் அப்பொழுது என் குடும்பத்தை வீட்டுக்கு, ஊருக்கு அனுப்பி விட்டிருந்தேன். என் கைச் சமையல் கசந்தால், ரங்கசாமி வீட்டுச் சாப்பாடு. அல்லது அசட்டுப் பிடித்த ஐயன் கிளப் உண்ணாவிரதம்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/story/vibareethaaasai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs