http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஆஷாட பூதி

மோலியர் (1622-1673)

     பதினேழாவது நூற்றாண்டில், பிரான்ஸில் நாடகக்காரன் என்றால், மதம் அவனைத் தள்ளிவைத்தது. பிரார்த்தனை - பிரசாதத்தைப் பெறுவது என்றால் விசேஷ சிபாரிசின் பேரில் நடக்க வேண்டிய காரியம். செத்தால், வளமுறைப்படி அந்திமக் கிரியைகள் கூட அனுமதிக்கப்பட மாட்டா. பவித்திர நிலத்தில் (கல்லறைத் தோட்டத்தில்) அவனைப் புதைக்க அனுமதிக்கமாட்டார்கள். சாத்தானின் குழந்தை என்று அவனைத் தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள். இவ்வளவும் தெரிந்திருந்தும் ஜீன் - பாப்டிஸ்டே போக்லின் என்ற மோலியர் அந்தத் தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்டார். நடிகனாகவும் நாடகாசிரியனாகவும் வாழ்வைக் கழித்து ஒரு நாடகத்தில் நடிக்கும்போது திடீரென்று நோயுற்று, சில மணி நேரங்களில் மாண்டார்.

     மோலியர் பிறப்பில் பாரிஸ்வாசி. அவருடைய நாடகக் கோஷ்டி முதலில் ட்யூக் ஆப் ஆர்லியான் ஆதரவில் நாடகம் போட்டு வந்தது. யுத்தத்தின் அழைப்பு ட்யூக்கை போர்க்களத்துக்கு அனுப்பிவிட நாடகக் கம்பெனி வறுமையுடன் தோழமை கொண்டது. பாரிஸிலிருந்து பிரான்ஸ் முழுமையும் சுற்றி வந்தது. வறுமையின் தோழமையை உதறித்தள்ள முடியவில்லை. பாரிஸுக்குத் திரும்பி வந்தபொழுது, மோலியருக்கு ராஜ ஆதரவு கிட்டியது. 'நானே பிரான்ஸ்' என்று மகா இடும்புடன் ஒரு முறை சொல்லிய பதினாலாவது லூயி நல்ல ரசிகன். மோலியருடன் தோழமை கொண்டான். அந்த ஆதரவிலே தழைத்த பெரும் நாடகங்கள் பல. கடைசி மூச்சு ஓடும்வரை மோலியர் நாடகக் கலைக்குச் சேவை செய்தார்.

     உலகத்தின் பிரபல ஹாஸ்ய நாடகக் கர்த்தர்களில் இவரும் ஒருவர். இவரிடத்திலே ஷேக்ஸ்பியரின் மேதையை, கதை வளர்க்கும் திறமையைக் காண முடியாது. ரயிலுக்குப் போகும் அவசரத்தில் கட்டினதுபோல் வார்ப்பு இறுகியிராமல் உருக்குலைந்து கோணிக்கொண்டு நிற்கும். ஆனால் போலிகளை, விஷமிகளை நையாண்டி செய்வதில் அதிசமர்த்தர். அவரது சிரிப்பு சிந்தனையைக் கிளர்த்தி விட ஒரு வியாஜ்யம்.

*****

     கடவுளைச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டால் உலகத்தின் கண்ணில் மண்ணைவாரிப் போடலாம்; திருடுவது, பொய் சொல்லுவது முதலிய கெட்ட செயல்களில் தலையிடுவதைவிட வேதத்தையும் ஒழுக்கத்தையும் ஒரு வியாபாரமாக நடத்தினால், உலகில் பெரும்பாலோரை ஏமாற்றிவிடலாம். அவ்விதம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் மனத்துயர் அடையவும் மாட்டார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்துதான் டார்ட்டுப் கடவுள் கட்சியில் சேர்ந்து கொண்டான். அவன் வாய் வேதம் பேசும்; கிருஸ்துவின் உபதேசங்களை நயம் குன்றாமல் சொல்லும்; உலகத்தின் பாபச் சுமையை முதுகில் ஏந்தி நடப்பது போல், மனித வர்க்கத்தின் முன் பணிவுடன் நடப்பான். டார்ட்டுப்பாவை உலகத்துக்கு வழி தவறி வந்துவிட்ட தேவதூதன் என்றெல்லாம் புகழ்வார்கள், நெருங்கிப் பழகாதவர்கள் மனித குணோபாவங்களை வெகு கூர்மையாக ஊன்றிக் கவனிக்காதவர்கள். டார்ட்டுப்புக்கு வறுமை ஒரு உபயோககரமான அணிகலனாக இருந்தது; உடல் வாடாமல் பார்த்துக் கொள்ளும் மருந்தாகவும் இருந்தது. நாள்தோறும் நீண்ட நேரப் பிரார்த்தனை; காட்டுக் குதிரை போலத் தறிகெட்டு ஓடும் புலனறிவை ஒடுக்கிக்கொள்ளக் கசையடி, -இவை யாவும் உலகத்தின் இன்பப் பேறுகளைப் பெறுவதற்கு விரிக்கப்பட்ட நடை பாவாடையாக அமைந்தன...

     ஆர்க்கான் என்பவன் நல்ல பணக்காரன், பிறப்பிலேயே பணக்காரன். பூர்வீக ஆஸ்தியுடன் தன்னுழைப்பால் செல்வத்தையும் திரட்டியவன். அத்தனை காலமும் இகத்தில் தெய்வம் சுகத்தைக் கொடுத்துவிட்டது. மோட்சத்திலும் இடம் நிச்சயப்படுத்திக் கொள்ள அவனுக்கு நிரம்ப ஆசை. அந்த உலகத்து விவகாரத்தையும் ஆபத்துக்கிடமில்லாமல் பண்ணிக்கொள்ள மார்க்கமுண்டா என்று தேடிவரும் நாளில் டார்ட்டுப்பைச் சந்தித்தான்; வாக்கிலே தெய்வம் தேங்கிக் கிடப்பதைக் கண்டான். பரிச்சயம் தோழமையாயிற்று. ஆஷாடபூதி வந்து போவதாக இருந்தது. கடைசியில் ஆர்க்கான் வீட்டிலேயே வேரூன்றினான். அவன் தாயார் மகனுடைய தெய்வபக்தியை மெச்சினாள். டார்ட்டுப் வருகையால் வீடே பரமபதமாகிவிட்டதாக நினைத்து விட்டாள். தாயும் மகனும் டார்ட்டுப் மனங் கோணாமல் நடந்து உபதேசத்தைப் பவித்திரமாகக் கேட்டு ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்தார்கள். வெகு சீக்கிரத்தில் சாக வேண்டிய கிழவிக்கும், அனுபவித்த பணமே முடிவில் ஆபத்தாக முடியுமோ என்று பயந்த ஆர்க்கானுக்கும் மோட்சத்தில் இடம் நிச்சயமாகக் கிடைக்கும் என்று தோன்றிவிட்டால் ஆனந்தம் ஏன் வராது?

     ஆர்க்கானுக்கு வெறும் பொருட் செல்வம் மட்டும் இல்லை. மனைவி, பிள்ளை குட்டிகள் செல்வமும் இருந்தது. அவர்களுக்கு மோட்ச மோக விவகாரம் அத்தனை அவசரமாகப் படவில்லை. டார்ட்டுப்புக்காக உலகமே திரண்டு சேவை செய்யவேண்டும் என்று நினைக்கும் குடும்பத் தலைவன் தொல்லை பொறுக்க முடியவில்லை.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/aashaadapoothi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs