http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



அம்மா

கே. பாயில்

     பாதை நெடுகலாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், அதற்குச் சின்னக் கிளை ஒன்றும் இருந்தது. இருந்தாலும் மறுபக்கத்தில் ஓடும் சிற்றோடையில் இறங்கி அக்கரைக்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. மலை வழியாகச் செல்லும் மாட்டடித் தடத்தைத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று நினைப்பதும் அதிசயந்தான்.

     ஆனால் பள்ளிக்கூடம் போய்விட்டுத் திரும்ப வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் அந்தச் சின்னப் பையன், ஒரு நாள் டுரூரி சந்தியில் நின்று கொண்டு, "இடது பக்கமாகப் போகும் கிளை வழியாகச் சென்றால் ஷென்டனுக்குத் தான் போக முடியும்" என்று நிர்ப்பந்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் வழிகாட்டிக் கம்பத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவன் எதிரே செல்லும் வேறு ஒரு பாதை, வேறு எங்கேயோ போகிறதாம். ஆனால் அது எங்கே போகிறது என்பதை அந்த வழிகாட்டிக் கம்பம் சொல்லவில்லை என்ற விஷயம் அவன் மனதில் தட்டியது. தூரத்திலே தெரியும் அந்த மலையை ஆற அமரப் பார்ப்பதற்காக அந்தச் சின்னப் பையன் வாட்ட சாட்டமாக உட்கார்ந்து கொண்டான்.

     வாய்க்காலுக்கு அந்தப் பக்கத்தில் பச்சைப் பசேலென மெத்து மெத்தென்ற புல் நிறைய வளர்ந்து கிடந்தது. அதற்கும் அந்தப் பக்கத்தில் கொம்புங் கிளையுமாக மரங்கள் வளர்ந்து நின்றன. அவை காற்றில் எந்தப் பக்கமாகத் தலை சாய்த்து ஆடுகிறது என்பதுகூட அவனுக்குத் தெரிந்த மாதிரி இருந்தது. ஓடைக்கரையிலே இரண்டொரு வில்லோச் செடிகள் (ஒரு விதமான குளிர்ப்பிரதேச அரளி) ஈரச் சிகையைக் காற்றோட்டத்தில் கோதி ஆற்றிக் கொண்டிருப்பது போல் நின்றன.

     அந்தப் பாதை ஒரே செங்குத்தாக மலையுச்சிலே இங்கும் அங்குமாகத் தலையசைத்து நிற்கும் மரங்களை நோக்கி உயர்ந்து செல்லவில்லை. அந்த இடத்தையடையுமுன் அந்தப் பாதை, தன் நிர்க்கதியை அறிவிக்க கைகளை விரிப்பதுபோல் இரண்டு கிளைகளைக் காட்டியது. அந்தக் கிளைகளும் திசை தெரியாது, தலையசைத்தாடிக் கொண்டிருக்கும் குத்துச் செடிகளினூடே மறைந்தன. அந்தச் சின்னப் பையன் தனக்கு எதிரே கிடப்பன எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேலியைத் தாண்டி, அப்புறம் அந்த ஓடையைத் தாண்டி, அப்புறம் அந்த மலைக்குப் போவதற்காக தன் மனதுக்குத் தைரியம் வருவித்துக் கொண்டிருந்தான்.

     மலைச்சாரல் நெடுகிலும் சாணிக் குவியல்கள் அம்பாரம் அம்பாரமாகக் குவிந்து மலைக்கு உடம்பெல்லாம் பொட்டுப் போட்டன. மனதில் வந்த தைரியம் மலையிலிருந்து இறங்கி வரும் பசு மாட்டைக் கண்டதும் பறந்தோடிவிட்டது. தண்ணீர் குடிக்க வருகிறதாக்கும் என்று நினைத்தான். அவனை அது கண்டுவிட்டதும் அசையாமல் நின்று அமைதியாகப் பார்த்தது. வேலிக்கு இந்தப் பக்கமாக நின்று கொண்டு இவனும் கண்களை உருட்டி விழித்தான். பிறகு கன்றுக் குட்டி ஏதாவது தொடருகிறதா எனக் கூர்ந்து கவனித்தான். அதன் கழுத்துத் தசையும் அலகும் அசைபோடுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கொஞ்சம் பொறுத்து எலும்பெடுத்த பசுவொன்று அங்கு வந்தது. பையன் எழுந்து நின்று விலகி ஓடுவதற்கு முன்னால் எட்டுப் பசு மாடுகள் கரடுமுரடான பாதையில் நடமாடிக்கொண்டு இறங்கின.

     அவன் பாதையில் நின்றுகொண்டு, அவை தலைகுனிந்து தண்ணீர் குடிப்பதைப் பார்த்தான். அவை தலையை நிமிர்த்தினபோது தாடி மயிரில் தண்ணீர் முத்துக் கோத்தது. வாயோரத்திலிருந்து இழைவிட்டமாதிரி செள் ஒழுகிற்று. அவை மூக்கை விரியத் திறந்து கொண்டு தண்ணீர் பருகிய போதெல்லாம் மொடமொடவென்று குமிழிகள் தண்ணீர் மட்டத்தில் குதித்துத் தெறித்தன. வேலிக்கு இந்தப் புறத்தில் நின்று கொண்டு பார்ப்பதில் பெருமை ஒன்றும் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். மனிதர்கள், வீரம் என்ற வார்த்தைகள் அவனுக்கு அன்னியமானாலும் அந்தப் பெரிய மிருகங்களைக் கண்டதும் படக்குப் படக்கென்று நெஞ்சுக்குள் இருந்துகொண்டு பறையடித்துக் கொண்டிருக்கும் வஸ்து சின்னப் பொட்டைக் குட்டிக்குத்தான் அணிகலன் என்பதை அவன் அறிவான். அப்பா செத்து எட்டு வருஷங்கள் ஆகிறது. அவர் எப்படியிருப்பார் என்பதுகூட அவனுக்குத் தெரியாது.

     அவனுடைய அம்மாவைப் பற்றி நினைத்திருந்தது வேறு ஒரு தினுசு. எத்தனை காலமாகத்தான் அவள் 'செத்துப் போயிருக்கா' என்ற விஷயம் அவனுக்குத் தெரியவே தெரியாது. திரும்பி ரோடில் ஏறி நடந்து போன போது அவன் அவளைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். நடக்கும்போது சோர்வால் அவனுடைய கால்கள் தரையில் இழுபட்டன. அவை இடையிடையே திடீர் திடீரென்று புழுதியை எழுப்பின. பாதம் மரத்துக் குழைந்தது. அவளிடம் திரும்பிச் செல்ல வழி கண்டுபிடிக்க முடியுமோ முடியாதோ என்பதில் கூட அவனுடைய மனம் அசதி காட்டிக் கொண்டது. 'அத்தையம்மா' பீட்டுஸ்கீடு என்று நினைத்தான். பசுமாடுகள் வாலை முறுக்கித் தத்தம் முதுகுகளில் பலமாக அடித்து ஈ விரட்டின. அத்தையம்மா பீட்டுஸ்கீடு.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/amma.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs