http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



அதிகாலை

நிக்கோலாய் டிக்கனோவ்

     1918-ம் வருஷம் ஆகஸ்டு மாதத்தில் துருக்கியர் பாக்கூ என்ற இடத்தை முற்றுகை இட்டார்கள். மென்ஷ்விக் நிர்வாகத் தலைமை போர்டின் ஐந்து தலைவர்கள் மூளையும் சுழன்றது. சர்வ குழப்பம்; அது விஷயத்தைப் புரிந்து கொண்ட பிரமையைத் தோற்றுவிக்கும் ஒருவித வெளிச்சக் குழப்பம்; ஆயுதபாணிகளாகப் பலர் நகரத்துக்கு உள்ளேயும், உள்ளிருந்து வெளியேயும் ஓடிக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் ரணகளத்துக்குப் போகிறார்களோ அல்லது அங்கிருந்துதான் வருகிறார்களா என்பது தெளிவுபடவில்லை.

     குட்டித்தளம் ஒன்று கூபூஜில்லாவுக்கு அனுப்பப்பட்டது. அதன் உத்தியோகம் ஓடிப்போன முஸல்மான் குடியானவர்களை ஊருக்குத் திரும்பி வந்து வீடும் குடித்தனமுமாகக் குடியிருந்து, ஏற்கனவே காற்றைப் புசித்து ஜீவித்து வரும் பாக்கூ வாசிகளுக்குத் தானியச் சாகுபடி செய்யும்படி தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்தத் தளமானது எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் வீதாச்சாரமிட்டது போல அதன் எண்ணிக்கை தேய்ந்துகொண்டு வந்தது. நிர்வாக இலாகா போட்ட உத்தரவைக் காற்றுவாக்கில் விட்டுவிட்டு, தன் தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு நடையைக் கட்டி விடுவதிலேயே அதிகக் கவனம் காட்டினார்கள் அந்தத் தளத்தைச் சேர்ந்தவர்கள். மாஜி பாங்கி குமாஸ்தாவும் சோல்ஜருமான குருட்டிக்காவ் என்பவன் தன்னால் முடிந்தவரை அந்தத் தளத்தை நடத்திக்கொண்டு போனான்.

     ஒருநாள் மாலை அந்தத் தளம் மலைச்சரிவின் அருகாமையில் போகும்போது துருக்கியர் அதைச் சூழ்ந்து கொண்டார்கள். திக்காலுக்கொன்றாக இரண்டொரு முறை சுட்ட பிறகு, குருட்டிக்காவ் தளத்துடன் வந்த ஏக ஸ்திரி ஜாதியான டாஷாவைப் பார்த்து தன்னுடைய மொண்ணைக் கத்தியின் முனையில் அவள் வசமிருந்த மிகவும் வெண்மையான கைக்குட்டையைக் கட்டச் சொன்னான்.

     வைதுகொண்டும், சபித்துக்கொண்டும், அவனுடைய சோல்ஜர்கள், துருக்கியத் துருப்புக்களைத் தொடர்ந்து காலையிழுத்துப் போட்டனர்; துருக்கியத் துருப்புகளின் சோர்வுக்கும் குறைவில்லை.

     துருக்கிய உதவித் தளபதி நீலக்கண்ணாடி அணிந்து ஒற்றன் மாதிரி விளங்கும் செம்பட்டைச் சிகையுள்ள மனிதன். அவன் குருட்டிக்காவையும் அவனுடையை உதவித் தளபதியையும் டாஷாவையும் தணிந்து தஞ்சமான கூறையுடைய வீட்டுக்குள் அழைத்துச் சென்றான். கருக்கல் வெளிச்சம் இயங்கும் ஒரு அறைக்குள் நுழைந்தார்கள். அதன் மத்தியில் உள்ள மேஜைமீது தடியான ரபிவே மெழுகுவர்த்தி குத்தி நிறுத்தப்பட்டு எரிந்து வழிந்தது. வர்த்தி வெளிச்சத்தைச் சூழ இதர கைதிகளும் உட்கார்ந்திருந்தார்கள். இந்தத் தளத்துடன் வந்த விவசாய நிபுணன், ஒரு தபால் உத்தியோகஸ்தர், ஒரு உத்தியோகஸ்தரின் விதவை - இவள் மட்டும் மெய்ஸ் அரிசி வைத்துச் செய்த பெரிய ரொட்டித் துண்டை சர்வ சம்மாரம் செய்துகொண்டிருந்தாள் - எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.

     "மறுபடியும் சண்டைக் கெடுபிடியைப் பார்க்கிறோம், அன்ட்ரூய்ஷா" என்று டாஷா வெகு உற்சாகமாகச் சொல்லிக்கொண்டு, தன் பைக்குள்ளிருந்த சின்ன முகக் கண்ணாடிக்காகத் துழாவினாள். குருட்டிக்காவின் முழுப் பெயர் அன்ட்ரூய்ஷா குருட்டிக்காவ். கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த கம்பிபோட்ட கைக்குட்டையை அவிழ்த்தான். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் குளிர் உறைக்க ஆரம்பித்ததினால், அதை மறுபடியும் கட்டிக்கொண்டான். காலைத் தூக்கி பூட்ஸில் படிந்திருந்த புழுதியைக் கந்தை ஒன்று கொண்டு துடைத்தான்.

     குருட்டிக்காவ் அறையில் அங்குமிங்குமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். இரட்டைக் குழல் தூரதிருஷ்டிக் கண்ணாடி ஒன்று கழுத்தைச் சுற்றிய வாரில் தொங்கி அவனுடைய நெஞ்சில் இடித்துக் கொண்டிருந்தது. அவனிடமிருந்த ஆயுதங்களெல்லாம் பிடுங்கிவிட்டார்கள்.

     "என் இஷ்டப்படி, எனக்கே எனக்கு என்று நான் சொல்லிக்கொள்ளக்கூடிய நிலைமையில் வாழுவதுதான் என் விருப்பம். என்னை ஏன் பாங்கியிலிருந்து இழுத்துப் போட்டார்கள்? நான், - குருட்டிக்காவ் - என்ன சோல்ஜரா? என்னை, என்ன நெப்போலியன் என்று கெரன்ஸ்கி என்று நினைத்துக்கொண்டார்களா? கடைசியாகப் பித்துக்குளித்தனமாக அகப்பட்டுக்கொண்டு முழிக்கிறேன். என்னமோ ஜெர்மன்காரன் பெட்ரோகிராடைப் பிடித்துக்கொண்டார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். பிடித்துக்கொள்ளட்டுமே, எனக்கென்ன, என்னைச் சும்மா விட்டுவிடுன்னுதானே கேட்கிறேன். சமயத்திலே வெள்ளைக் கொடியைக் காட்டியிருக்காது போனால் என்னைக் கொன்றே போட்டிருப்பார்கள். அது ஒனக்கு எப்படியிருக்கும்? எனக்கென்னமோ பிடிக்கல்லே..." என்று ஆத்திரத்தை உலுப்பி கொட்டிக் கொண்டிருந்தான்.

     "அன்ட்ரூய்ஷா, ஆத்திரப்படாதே. இந்தா ஒரு முத்தம் வேணும்னாலும் வாங்கிக்கோ. இம்மாதிரி அகப்பட்டுக் கொள்கிறது வேடிக்கையாக இல்லை" என்றாள் டாஷா.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/athikaalai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs