http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



கலப்பு மணம்

கிரேஸியா டெலாடா - இத்தாலி

     அன்றிரவு சுகமாக இருந்தது. பூலோகத்தைக் கடுங்குளிரினால் சித்திரவதை செய்வதில் சலியாத உறைபனிக் காலத்துக்கும் ஒரு ஓய்வு உண்டு என்பதை அந்த ஏப்ரல் இரவு காட்டியது. இதுவரை பனிக்கட்டிப் போர்வையிட்டு மூடிப் படுத்திருந்த பூமி, மலர்ச்சியின் அறிகுறியுடன் போர்வையை அகற்றிவிட்டது. அமைதியான அந்த இரவில் தளிர்ச் சுருணைகள் இரகசியமாக நிமிர்ந்தன. வயல் புறங்களில் பூக்கள் நட்சத்திர ரகசியத்தை ஏறிட்டு நோக்கின. வான வளையத்திலே மங்கலான வெளிச்சம்; ஆனால் காட்டுக்கப்புறம் தீ எரிவது மாதிரி, அதாவது காட்டுக்கு மணமும் வெதுவெதுப்பும் கொடுக்கிறது மாதிரி, சந்திரன் உதயமாகிக் கொண்டிருந்தது.

     மந்தை அருகில் படுத்திருந்த நாயும் தூங்கிக் கொண்டிருந்தது. குடிசையிலிருந்த மந்தைக்காரனும் தூங்கிக் கொண்டிருந்தான். ஏனென்றால், எஜமான் மாப்பிள்ளைக் கோலத்தில் பெண்டாட்டி 'சம்பாதிக்க'ப் பக்கத்தூருக்குச் சென்றிருந்தான். மேய்ப்பவனுக்குத் தன்னைவிடத் தன் நாயின் மீது அபார நம்பிக்கை. அது நல்ல குட்டி; சூட்டிகையும் வேகமும் அதிகம்; அதன் காவலில் ஒரு சின்ன ஆட்டுக்குட்டிக்குக் கூட ஆபத்து நேர்ந்ததில்லை. மேய்ப்பவனுக்குக் கடுந்தூக்கம்; கும்பகர்ண உபாசனை. நாய்க்கு அறிதுயில். 'இந்த மிருகங்களின் காவலாளி நான் மட்டுந்தான்' என்று நாய் தன் முழுப் பொறுப்பையும் உணர்ந்திருந்தது போலும். ஆனால், வசந்த இரவின் வெதுவெதுப்பு அதன் நரம்புகளையும் பாதித்தது. அதன் முதுகு அடிக்கடி குலுங்கியது; அதன் மயிர் காற்றில் அசைவது போல் தூக்கத்தில் மெதுவாக முனகிக் கொண்டது. புரியாத ஆசைகளும் உணர்ச்சிகளும் அதன் கனவுகளைத் தேக்கின - பருவத்தின் துடிதுடிப்பு. அது இன்னும் குட்டிதான். குலவிருத்தியில் ஈடுபடாத குட்டி.

     ஆனால் அந்த நரிகள் - பாறை ஓரத்தில் வளர்ந்து கிடந்த குத்துச் செடிகளில் பதுங்கிக் கிடந்த நரிகள், ஆணும் பெண்ணும், தூங்கவில்லை. அவைகளால் தூங்க முடியவில்லை. அவைகளுக்குப் பசி, நீண்ட பனிக்காலத்தின் பஞ்சம், வயிற்றை ஒட்டவைத்ததோடு புத்தியையும் கூர்மையாக்கியது.

     பருவத்தின் மாறுதலை உணர்ந்த நரிகள் சந்தர்ப்பம் வந்தது என்று நினைத்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ஆணுக்குப் புத்தியும் திறமையும் இருந்ததினால் வெளியேறி வந்தது. அது கறுப்பு நிறம், குள்ளம்; வால் நீளமாகவும் செழிப்பாகவும் இருந்தது. கண்கள் நட்சத்திரங்கள் போலச் சுடர்விட்டன. பெண் நரி பெரிது. கொஞ்சம் மங்கின சாம்பல் நிறம்; மழுமழுப்பாகவும் நீண்டும் இருந்தாலும், உடம்பைச் சுருக்கிக்கொண்டு, சின்னக் குருவிக் குஞ்சு மாதிரி, தரையோடு தரையாக ஒண்டிக் கிடக்கவும் அதற்குத் திறமையுண்டு.

     அது ஆண் நரியைப் பின் தொடர்ந்தது. 'ஏன் தொடர்கிறோம்' என்ற யோசனை கூட இல்லாமல் அது நடக்கிற மாதிரியே உடம்பை ஆட்டிக்கொண்டு நடந்தது. முன்னங்காலடித்தடத்தில் பின்னங்காலடித் தடத்தைப் பதியவைத்து நடந்தது. வால் அடிச்சுவட்டை அழிக்காவிட்டால், ஏதோ இரண்டு கால் பட்சி நடந்தது மாதிரித் தோன்றும். சரிவில் இருந்த ஓடைப்பக்கமாக இரண்டும் வந்து சேர்ந்தன. இராத்திரி குரல் ஏதும் கேட்கிறதா என்று இரண்டும் கவனித்தன. சமீபத்தில் பெய்த மழையால் ஓடையில் வெள்ளம், கரையோரத்துச் செடிகளின் முறுமுறுப்புக்களைக் கவனியாது, பாய்ந்து சலசலத்தது.

     ஆண் நரி தண்ணீர் குடித்தது; தாகத்தால் அல்ல, மூக்கின் நுனியைக் குளிர வைத்துக்கொள்ள. பிறகு பின்புறமாகத் திரும்பி வாலைத் தண்ணீரில் தோய்த்து அலசியது, பெண்கள் தலையைக் கழுவுவது மாதிரி. பெண் நரியும் அதன் போக்கைத் தெரிந்து கொண்டு, அதைத் தொடர்ந்து மேட்டில் ஏறி, புல்வெளி வழியாக அதைப் பின்பற்றியது; ஆனால் அது தன் வாலால் தரையில் சுவடுகளை அழித்துக்கொண்டே சென்றது. எல்லாம் அவை விரும்பியபடியே இருந்தன. ஆண் நரி ஆட்டுக்கிடையிருந்த புல்வெளி ஓரத்தில் நின்றது. பெண் நரியும் நின்றது. இரண்டும் மோப்பம் பிடித்துக்கொண்டு நின்றன. துளிகூடச் சத்தம் இல்லை. பூமியில் பச்சிலை வாசனை; வைக்கோல், புல், காட்டுப் புஷ்பங்கள் இவற்றின் கதம்ப வாசனை. பெண் நரியும் இதை முகர்ந்தது.

     அதுதான் சொந்தமாக வேறு ஒரு பிளான் நினைத்திருந்தது. ஆண் நரியைக் குத்துச் செடியருகில் நிற்க வைத்து விட்டு, கன வேகமாகத் துள்ளி ஓடியது. வாலிபத் துடிப்பின் வெறி போதையாக மலர்ந்து, வேகத்தில், பலத்தில் இயங்கியது. அவளது ஒரே ஆசை துள்ளிக்குதித்து விளையாடுவதே. அவள் பசியை மறந்தாள். ஒரே குதூகலம். திருட்டை நினைக்காததினால், பசியற்ற, திருட்டு நினைப்பற்ற சகபாடியை எதிர்பார்த்தாள். பழைய குடும்ப சிநேகிதம் மாதிரி ஆட்டுமந்தையை அணுகினாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/kalappumanam.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs