http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



மணிமந்திரத் தீவு

ஷேக்ஸ்பியர்

     நடுக்கடலிலே நாலைந்து கப்பல்கள் தத்தளித்துத் தடுமாறுகின்றன. கடலலைகள் சினங்கொண்ட கருநாகங்கள் போல ஆயிரமாயிரமாகப் படம் விரித்துத் தலை சுற்றி மோதுகின்றன. உயிரை வாங்கவரும் கால தூதர்களின் கோரச் சிரிப்புப் போல் அலைவிளிம்புகள் நுரைகக்கிச் சுழிக்கின்றன. காற்றோ உன்மத்தம் கொண்ட பேய்க் கூட்டம் போலக் குதியாட்டம் போடுகிறது. வெட்டு மின்னலும் பேரிடியும் வானத்திருட்டை எல்லாம் கம்பியிட்டுப் பிழிகின்றன.

     இயற்கையின் இப்பெருஞ் சீற்றத்துக்கு எதிராகத் திரையிட்ட மரக்கட்டையும் சீலைப்பாயும் என்ன செய்ய முடியும்?

     மாலுமி தீரன் தான்; அனுபவஸ்தன் தான்; கைத்த மனத்துடன், உப்புத் தண்ணீர் கப்பலின் மேல்தட்டில் புரண்டோ டிக் கப்பலையே ஆழத்தில் அமுக்க முயலுவதைப் பலமுறை கண்டவன் தான். ஆனால் இப்பொழுது தன் சாகசத்துக்கு எல்லை வந்துவிட்டது என்பதைக் கண்டு கொண்டான்.

     "தெய்வத்தின்மேல் பாரத்தைப் போட்டு எல்லோரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லு" என்று கீழ்த் தட்டில் உயிரை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறவர்களுக்குச் சொல்லியனுப்பிவிடுகிறான்.

     அதே நிமிஷத்தில் கப்பல் பாறையில் மோதுகிறது.

     அத்தனை ஜீவன்களும் அதனதன் உயிருக்காக ரௌத்ராகாரமான கடலுடன் மல்லாடுகின்றன.

     இப்படியாக ஒரு கோஷ்டி மக்களை ஒரு தீவில் நாடகாசிரியன் எடுத்துக்காட்டுகிறான். மனுஷ குண விகற்பங்கள் எத்தனை உண்டோ அத்தனையும் அதில் உண்டு. நேப்பிள்ஸ் தேசத்து மன்னனான அலான்ஸோ; அவனுடைய சகோதரனான ஸெபாஸ்டியன்; அண்ணனை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட மிலான் நகரத்து ட்யூக் - அவன் பெயர் அஸ்டோ னினோ; நேப்பிள்ஸ் அரசனின் மந்திரியான கொன்ஸாலோ; அலன்ஸோவின் மகன் ஆணழகன் பெர்டினான்ட்; குடிகார ஸ்டிபானோ; விதூஷகன் டிரன்குலோ; மற்றும் மாலுமிகள், மந்திரிகள் அத்தனை பேரும் கரையில் தொற்றி ஏறுகிறார்கள்.

     "இன்றுதான் என் கிரகங்கள் உச்சத்தில் நிற்கின்றன. காலதாமதம் ஏற்பட்டால் காரியம் கெட்டுப் போகும். ஏவின வேலையைச் சரிவரச் செய்தாயா?"

     அந்த நிர்மானுஷ்யமான தீவிலே முடிசூடாத மன்னனாக ஆட்சி புரிந்துவரும் மந்திரவாதியான பிராஸ்பிரோ கேட்கிறான். அவன் உடம்பிலே யந்திரமும் சக்கரமும் பொறித்த ஒரு மந்திர அங்கி கிடக்கிறது. கையிலே மாத்திரைக் கோல்.

     "ஆமாம்; எஜமானே, அத்தனை பேரையும், ஒரு சிறு காயம் கூட இல்லாமல் கரை சேர்த்துவிட்டேன். பயங்கரமான புயலை உண்டு பண்ணினேன். கப்பலைக் கரை அருகே கொண்டுவந்தேன். இப்பொழுது எல்லோரும் தீவின் நாலா கரைகளிலும் ஏறிவிட்டார்கள். இனி எனக்கு விடுதலை எப்போது?" என்று கெஞ்சுகிறது அவன் முன் நின்ற யக்ஷணிக் குழந்தை. அதன் பெயர் ஏரியல். மெல்லிய காற்றைப் போல் அவ்வளவு பசலை.

     "உனக்கு அதற்குள் அத்தனை அவசரமா? வேலை எல்லாம் குறைவற முடியட்டும்; அந்தச் சூனியக்காரி ஸிக்கோராக்ஸ் உன்னை மரத்தில் ஆணியடித்து விடவில்லையா, அதை மறந்துவிட்டாயா? நான் தானே உன்னை மீட்டு வளர்த்தேன். சொன்ன வேலையைச் செய். அப்புறம் கேள்" என்கிறான் பிராஸ்பிரோ.

     இந்த மந்திரவாதி தனது கையில் சிசுவையும் மந்திரத்தையும் ஏந்தி இந்தத் தீவுக்குள் குடியேறுவதற்கு முன் ஸிக்கோராக்ஸ் என்ற சூனியக்காரி இதைத் தனது கொடுமையால் அளந்தாள். அவள் பிறந்தவூர் ஆல்ஜியர்ஸ். அவளது அட்டூழியங்களைச் சகிக்க முடியாமல் கப்பலேற்றி விடுகிறார்கள். அப்பொழுது அந்தச் சூனியக்காரி கர்ப்பிணி. இங்கே வந்த பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது. அது மனிதனுமல்ல; மிருகமுமல்ல. மனித உருக்கொண்ட மிருகம். பன்னிரண்டு வருஷங்கள் இந்தத் தீவிலே உள்ள தேவதைகளையெல்லாம் ஆட்டி வைத்துவிட்டுச் செத்து மடிகிறாள். மனித மிருகமான அல்லது மிருக மனிதனான அக்குழந்தை அனாதையாகிறது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/manimanthiraththeevu.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs