http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



மார்க்ஹீம்

ஆர்.எஸ். ஸ்டீவன்ஸன் - இங்கிலாந்து

     "ஆமாம்! எங்கள் வியாபாரத்திலே பலவிதம் உண்டு; வாங்க வருகிறவர்களில் சிலருக்கு ஒன்றுமே தெரியாது; வெறும் 'அப்பாவிகள்'. அப்பொழுது எங்கள் அநுபவத்திற்கு ஏற்ற லாபத்தைப் பெறுவோம். சில மோசமான பேர்வழிகளும் நம்மிடம் வந்து சேருவார்கள். அப்பொழுது எங்கள் ஒழுக்கத்தால் லாபத்தைப் பெறுவோம்" என்றான் அந்த வியாபாரி.

     மார்க்ஹீம் அப்பொழுதுதான் கண்கூசும் வெளியிலிலிருந்து கடைக்குள் நுழைந்தான். கண் கூச்சம் கடையில் இருட்டுத் திரள்களை எழுப்பிப் பார்வையை மறைத்தது. அந்த வார்த்தைகள் அவனை முகத்தைத் திருப்பிக்கொள்ளச் செய்தன. மேலும் கடைக்காரக் கிழவன் கையில் பிடித்திருந்த தீபத்தை அவன் முகத்திற்கு நேராகப் பிடித்தான்.

     கடைக்காரன் 'களுக்'கென்று சிரித்தான். "இன்றைக்கு கிரிஸ்மஸ். நான் தனியாகக் கடையை அடைக்கப் போகும் சமயத்தையும், நான் வியாபாரம் செய்ய விரும்பாத சமயத்தையும் தெரிந்து கொண்டு வந்திருக்கிறாய். சரி, அதற்கும் கணக்குப் போடுவேன் என்று தெரிந்துகொள். இந்தச் சமயத்தில் தினசரிக் கணக்கை முடித்து விடுவேன். அந்த நேரம் நஷ்டமாகிவிட்டது. அதற்கும் நீ சேர்த்துக் கொடுக்க வேண்டும். மேலும் இன்றைக்கு நீ மரியாதையில்லாமலே என்னுடன் நடந்துகொள்கிறாய். அதையும் உன் கணக்கில் சேர்த்துக் கொள். என்னிடம் முகத்தை ஏறிட்டுப் பார்த்து விற்பனை செய்ய விரும்பாதவனிடம் எப்பொழுதும் நான் தட்டுக்கெட்ட கேள்விகளைப் போட்டுத் தொந்தரவு செய்வதில்லை!" என்று சொல்லி, அந்த வியாபாரி மறுபடியும் 'களுக்'கென்று சிரித்துக்கொண்டான். பிறகு குரலை மாற்றி, கொஞ்சம் நம்பிக்கையற்ற கேவலம் தொனிக்க, "நீ கொண்டு வந்திருக்கும் சாமான் உன்னிடம் எப்படி வந்தது என்று நீ எப்பொழுதும் சொல்லுகிற மாதிரி சொல்லு பார்க்கலாம்? இன்னும் காலியாகவில்லையா? உனது சித்தப்பா பெட்டியும் அவரும் அதிசயமானவர்கள்தான்!" என்றான் அந்தக் கடைக்காரன்.

     கடைக்காரன் சிறிது குட்டையானவன். கண்களில் மூக்குக் கண்ணாடி. தோள் பட்டைகள் சிறிது அகன்றவை. அவன் தனது கால் சட்டை விரல்களின் மீது உன்னி நின்று கொண்டு, மார்க்ஹீம் சொல்லுவதை எல்லாம் நம்பாதவன் போலத் தலையை அசைத்து, 'ஆமாம்' போட்டுக் கொண்டிருந்தான். மார்க்ஹீமுக்கு அவனைப் பார்க்கச் சகிக்கவில்லை. பரிதாபத்துடனும் சிறிது பயத்துடனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

     "இந்தவிசை உமது யூகம் தவறு. இன்று விற்க வரவில்லை; வாங்குவதற்கு வந்திருக்கிறேன். இன்று என்னிடம் விற்பதற்கு ஒன்றுமில்லை. என் சித்தப்பா பெட்டியும் காலியாகிவிட்டது. அதில் இன்னும் சாமான்கள் இருந்தாலும் நான் விற்பதற்குத் தயாரில்லை. எனக்கு பாங்கி லேவாதேவியில் நல்ல வருமானம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு எனது வேலை மிகவும் சுருக்கமானது. எனது ஸ்திரீ நண்பர் ஒருவருக்கு ஏற்ற கிரிஸ்மஸ் வெகுமதி ஒன்று வாங்க வந்திருக்கிறேன்." பேசுவதில் சிறிது உற்சாகமடைந்தவன் போல் மார்க்ஹீம் இன்னும் அதிகமாக விஸ்தரிக்க ஆரம்பித்தான்: "ஆமாம், இந்த நேரத்திலே உம்மை வந்து தொந்தரவு செய்வதற்கு எனக்கு வருத்தந்தான். நான் நேற்றே வரவேண்டும் என்று நினைத்தேன். என்னமோ நேரமில்லாது போய்விட்டது. இன்றைக்கு நடக்கும் விருந்தில் நான் அதைக் கொண்டு போகவேண்டும். நல்ல பணம் வரக்கூடிய இடத்தில் கலியாணம் செய்து கொள்ளப் போகும்பொழுது இந்தக் கவலையீனம் அதைத் தடை செய்துவிடக் கூடாதல்லவா?"

     இருவரும் சிறிது மௌனமாக இருந்தனர். கடைக்காரன் இவனுடைய வார்த்தைகளை நம்பாதவன் போல் விழித்தான். அந்த அறையிலே எந்த இருட்டு மூலையிலிருந்தோ 'டக், டக்' என்ற கடிகாரச் சப்தமும், வெளியே போகும் வண்டிகளின் சப்தமுமே அறையின் மௌனத்தின் கனத்தை அதிகமாகக் காண்பித்தன.

     "சரிதான் ஐயா, நீ சொல்லுகிறபடியே இருக்கட்டும். நீயும் பழைய வாடிக்கைக்காரன். உனக்கு நல்ல சம்பந்தம் ஏற்படும்பொழுது நானா அதைத் தடை செய்ய வேண்டும்? இதோ இருக்கிறதே இந்த முகம் பார்க்கும் கண்ணாடி, இது உன் ஸ்திரீ நண்பருக்கு ஏற்ற பரிசு தான். 15-வது நூற்றாண்டுச் சாமான். அதில் சந்தேகம் கிடையாது. ஆனால் அதை விற்றவரின் பெயரை மட்டிலும் கூற முடியாது. அந்த மனிதனும், உன்னைப்போல், ஒரு சித்தப்பாவின் ஒரே வாரிசு!"




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/markheem.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs