http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



மிளிஸ்

பிரட் ஹார்ட் - அமெரிக்கா

     ஸிராநிவாடா மலைத் தொடரில் சமவெளிக்குப் பக்கத்தில் இருக்கும் சிவந்த மலைகளில்தான் "ஸ்மித் பாக்கெட்" என்ற இடம் இருக்கிறது. அது ஒரு சுரங்க ஸ்தலம். அதாவது ஒரு காலத்தில் தங்கம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் பிறந்த சுரங்க ஸ்தலம். தற்பொழுது அதற்கிருக்கும் பெருமையெல்லாம், புராணங்களைப் போல, பழம்பெருமைதான்.

     முதன் முதலில் ஸ்மித் என்ற ஆசாமி அங்கு சுரங்கம் வெட்டி 5,000 டாலர்கள் சம்பாதித்தான்; பின்பு அதில் மேற்கொண்டு 3,000 டாலர் செலவழித்து, தங்கம் இனிக் கிடைக்காது என்ற உண்மையைக் கண்டுபிடித்தான். பொன் என்றால் ஆசை யாரை விட்டது? அவனைத் தொடர்ந்து பல குடும்பங்கள் அங்கு குடியேறின. நாளாவிர்த்தியில் பள்ளிக்கூடமும், ஒரு மாதாகோயிலும் அங்கு தோன்றின. ஸ்ரீ. ஸ்மித் அவர்கள், படிப்படியாய்த் தங்க ஆராய்ச்சியிலிருந்து பலவித இன்ஜினியர் தொழில்கள் எல்லாம் அநுபவித்து கடைசியில் சாராயக் கடை வைத்தார். அதில் ஸ்ரீ. ஸ்மித் அவர்கள் பெற்ற லாபம் மிதமிஞ்சிக் குடிக்கப் பழகியதுதான்.

     அன்று பொழுது மங்கி வெகு நேரமாகிவிட்டது. ஸ்மித் பாக்கெட்டினுடைய எதிர்காலச் சமூகத்தைப் பண்படுத்தும் பொறுப்பை வகிக்கும் 'வாத்யாரய்யா', பள்ளிக்கூடத்திலே உட்கார்ந்து கொண்டு, காப்பிநோட்டுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறார். பள்ளிக்கூடக் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அன்று முழுவதும் 'டொக்' 'டொக்' என்று கூரையின் மீது தட்டிக் கொண்டிருந்த மரங்கொத்திக் குருவிகளின் வேலையென்று நினைத்து அவர் பேசாமல் இருந்து பார்த்தார். சப்தம் ஓய்கிற பாட்டைக் காணோம்.

     "யாரது?" என்று ஏறிட்டுப் பார்த்தார்.

     ஒரு சிறு பெண். அழுக்குப் படிந்த உடை, கறுத்து விசாலமான கண்கள், கவனிப்பாரற்றுச் சடை ஏறிய தலை மயிர், - எல்லாம் அவள் யார் என்பதை நினைவிற்குக் கொண்டுவந்தன. அவள் வேறு யாருமில்லை. ஸ்மித் பாக்கெட்டின் நிர்மாணகர்த்தரான ஸ்ரீ. ஸ்மித் அவர்களின் ஏக புத்திரி ஸ்ரீமதி மெலிஸா ஸ்மித்; - சுருக்கமாக 'மிளிஸ்' என்று அழைப்பார்கள். தாயைப் போல் பிள்ளை என்ற பழமொழியை உத்தேசித்துத்தான் கடவுள் மிளிஸின் தாய்க்கு வசை ஏற்பட்டுவிடாதபடி குழந்தை பிறந்தவுடனேயே தம் பக்கம் அழைத்துக் கொண்டார் என்று கருத வேண்டியிருக்கிறது.

     "உனக்கு என்ன வேண்டும்?" என்றார் உபாத்தியாயர். மிளிஸ் கதை முழுவதும் அவருக்கு நன்றாகத் தெரியும். இயற்கையிலே வளர்ந்த பிள்ளை. ரெவரண்டு மக்ஸ்னாக்லி ஊருக்குப் பெரிய பாதிரியார். அவள் 'குணப்படுவதற்காக' (சீர்திருந்துவது என்பதற்கு கிறிஸ்தவப் பதப் பிரயோகம்) அவளை ஹோட்டலில் சிறு கையாளாக அமர்த்தினார். பின்பு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மதபோதனைப் பள்ளிக்கூடத்தில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு இவளை அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பெரிய குடும்பக் குழந்தைகளுக்கிடையே இவளது மட்டரக வேடிக்கைப் பேச்சுக்கள் ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணிவிடும் என்று பயந்து, பாதிரியார் அவளை வெளியே துரத்தி விட்டார். இதுதான் அவளது பூர்வகதை. அந்த மோசமான கிழிசல் உடைகளிலும் பளிச்சுப் பளிச்சென்று ஒளி வீசும் அவள் கண்கள் அவளுக்கு ஒரு கண்ணியத்தைத் தந்தன.

     "இன்று ராத்திரி நீர் தனியாக இருப்பீர் என்று தெரிந்துதான் இங்கே வந்தேன். அந்தக் குட்டிகள் இருக்கும்பொழுது எனக்கு வர இஷ்டமில்லை. ஏன், அவர்களைப் பிடிக்கவில்லை; அவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை; அதுதான். நீர் பள்ளிக்கூடந்தானே வைத்திருக்கிறீர்? எனக்குப் படிக்க வேண்டும்" என்று திடுதிடுவென்று பேசினாள்.

     உபாத்தியாயர் பேசாமல் அவளைக் கவனித்தார்.

     "என் பெயர் மிளிஸ், மெலிஸா ஸ்மித். குடிகார ஸ்மித்தின் மகள். நான் பள்ளிக்கூடத்திற்கு வருகிறேன்."

     "அப்புறம்?" என்றார் வாத்தியார் வெகு சாவதானமாக.

     இதுவரை அவளை யாவரும் எதிர்த்தார்கள். அதில் பிறந்தது ஆரம்பத்திலேயே சூட்டுடன் பேசும் அவளது பாஷை. உபாத்தியாயரின் அமைதியை அவள் எதிர்பார்க்கவில்லை. முதலில் அவள் முகம் சிறிது வெட்கத்தால் சிவந்தது. பின்னர் மேஜையின் மீது குப்புறப் படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இத் துக்க ஆவேசம் அடங்கும் வரை உபாத்தியாயர் அமைதியாக இருந்தார். அவள் தேம்பல்களுக்கிடையே, "இனி ஒழுங்காக இருப்பேன்" என்றாள்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/miliz.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs