http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஓம் சாந்தி! சாந்தி!

எலியா எஹ்ரன் பர்க்

     (யுத்தம் மனித சமூகத்தின் 'உடனுறை நோயாகவே' இருந்து வருகிறது. தனது தற்காப்புக்காக மனிதன் சமூகம் என்ற ஒரு ஸ்தாபனத்தை வகுத்தான்; பிறகு அதனைக் காப்பாற்றத் தன்னைப் பலிகொடுக்கத் தயாரானான். அதாவது தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகத் தன்னையே பலிகொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்திக் கொண்டான்.

     மனித வம்சத்தின் உருப்படியான காரியாதிகள் எனக் கொள்ளப்படுபவைகளில் ரத்தக் கறை படியாத சித்தாந்தமில்லை; கற்பனையில்லை; இலட்சியமும் இல்லை. நமது கவிதாசாகரத்தின் செம்பாதியில் ரத்த ஆறுகளே ஓடுகின்றன. கொலைத் தொழில், கலையின் நுட்பத்தையும் நயத்தையும், ஒருங்கே திரை கொள்ளுகிறது. கம்ப காவியத்தில் பாதிக்கு மேல் நாங்கள் ஓட்டிச் செல்லும் கற்பனைப் படகு, ரத்தத்தில் தான் மிதந்து செல்லுகிறது. 'கால் தரை தேய நின்று' நம்மைக் காப்பாற்ற வந்த தெய்வங்களின் கை நிறைய ரத்தக்கறை பூசித் திருப்பியனுப்பாமல் நம் மனம் திருப்தி கொள்ள மாட்டேன் என்கிறது.

     மனித வம்சம் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தன்னையே பலிகொள்ளும் இம்முயற்சி ஒரு பெரும் புதிர்; ஆனால் அசட்டுத்தனமான புதிர்.

     இதை எலியா எஹ்ரன்பர்க் ஒரு கதையாக ஜோடித்திருக்கிறார். முதலாவது உலக மகாயுத்தத்தைச் சூழ்நிலையாகக் கொண்டு கதை எழுதப்பட்டிருக்கிறது.

     கதையிலே, சொல்லும் முறைதான் மகா அற்புதமாக அமைந்திருக்கிறது. மந்திரோச்சாடனம் போல... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப... சொன்னதையே சொன்னதையே சொன்னதையே சொல்லிக்கொண்டு போகும் முறை வாசகன் மனதில் பூதாகாரமான கற்பனையை எழுப்புகிறது. உருண்டு தன் ஆகிருதியைப் பெருக்கிக் கொண்டுவந்து, கடைசியில் சப்தகோளங்களும் விண்டு விழும்படி பேரிரைச்சலுடன் தலை குப்புறப் பாதாளத்தில் விழுவது போல விழுந்தபின் நிசப்தம் கூடுவது போல அமைந்திருக்கிறது, கதையின் ஜோரான லேசான மகா அற்புதமான வார்ப்பு... மொழி பெயர்ப்பாளர்)

     அதோ கண்ணுக்குத் தெரிகிறதே, அந்த நட்சத்திரங்களிலிருந்து ஒளி ரேகைகள் வருவதற்கு எத்தனை ஆயிரம் வருஷங்கள் செல்லுகின்றன. அதன் யாத்திரையுடன் மனித வாழ்வை ஒப்பிட்டால் வெகு சுருக்கம். குழந்தைப் பருவம், விளையாட்டு, கலியாணம், உழைப்பு, வியாதி, மரணம் - எல்லா விவகாரங்களும் மிகச் சுருக்கம் தான். சக்தி வாய்ந்த தூரதிருஷ்டிக் கண்ணாடிகள், கணித சாஸ்திரத்தின் நுணுக்க வாய்ப்பாடுகள் எல்லாம் நம் வசம் இருக்கின்றன. ஆனால் நம்முடைய இந்தச் சுருக்க ஜீவியத்தின் கனத்தை நிறுக்கும் தராசை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? ஒரு தட்டில் அந்த ஓசைப்படாத ஒளி ரேகைகள், மறு தட்டில் வந்து வந்து மடிந்து கொண்டிருக்கும் மனித வித்துக்கள் - வருகிறது, பழுக்கிறது, கருகிவிடுகிறது. இப்படி அளந்து பார்க்கத் தராசு இருக்கிறதா?

     அப்பொழுது போர் நடந்தது.

     இனிமேல், காலா காலத்தில் மனிதர்கள் அதற்கு 'மகா' என்றோ 'சின்ன' என்றோ, அடைமொழி சேர்த்து அடையாளம் போட்டு வைப்பார்கள். அந்தக் காலத்திலிருந்தவர்களுக்கு அது வெறும் யுத்தம்தான். பிளேக்குக்கு வேறு பெயர் உண்டா? மரணத்திற்கு வேறு பெயர் உண்டா? அதே மாதிரிதான்.

     ஒரு குறிப்பிட்ட சின்னப் புள்ளி போன்ற இடத்தில் சண்டை நடந்தது. இப்பொழுது வெறும் கல்லும் கட்டியுமாகக் கிடக்கிறதே, அதற்கு ஒரு காலத்தில் இட்பிரஸ் என்று பெயர். அதன் அருகில் அந்த வட்டாரத்தைச் சேராத மனிதர்கள் தூங்கினார்கள், எழுந்தார்கள், நடமாடினார்கள், சாப்பிட்டார்கள், செத்துப் போனார்கள். திடீரென்று கை காட்டி மரம் சரிந்த மாதிரி, கைகளை விரியப் போட்டு விழுந்து செத்துப் போனார்கள். அவர்களுக்குப் பிரெஞ்சுச் சேனையில் 118-வது பட்டாளம் என்று பெயர். இந்தப் பட்டாளம் தெற்கே பிராவன்ஸ் மாகாணத்தில் திரட்டப்பட்டது. அங்கே எல்லோரும் குடியானவர்கள். திராக்ஷைக்கொடித் தோட்டம் போடுகிறவர்கள், மேய்ப்பவர்கள். ஆறுமாதங்களாக அந்தச் சுருட்டைத்தலை மனிதர்கள் களிமண் தரையில் வெட்டப்பட்ட இந்தக் குழிகளில் இருந்து சாப்பிட்டார்கள், தூங்கினார்கள், துப்பாக்கிக்கொண்டு சுட்டார்கள், ஒருவர் ஒருவராகக் கையை விரித்துப் போட்டு விழுந்து மடிந்தார்கள். ராணுவத் தலைமைக் காரியாலயத்தில் இவர்கள் செய்யும் இந்த வேலை 'கரிசல் வாய்க்கால் அருகில் 118 - வது பட்டாளம் இடங்களைப் பாதுகாக்கின்றது' என்று பதிவு செய்யப்பட்டது.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/omshanthishanthi.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs