http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



பளிங்குச் சிலை

வாலரி புருஸ்ஸாப்

     வாலரி புருஸ்ஸாப் (1875-1924) புரட்சி யுகமான நவீன காலத்து ருஷ்யப் புது எழுத்தாளர் கோஷ்டியைச் சேர்ந்தவர். இந்தக் கதை புரட்சிக்கு முந்திய காலத்தைப் பகைப் புலமாகக் கொண்டு, எழுந்த கற்பனைக் கதை.

     அவனுக்குத் திருட்டுக் குற்றத்திற்காக ஒரு வருஷம் கடுங்காவல் தண்டனை விதித்து சிறையிலிட்டார்கள். கோர்ட்டில் விசாரணை நடக்கும்பொழுது அந்தக் கிழவனுடைய நடத்தை என் மனத்தைப் பிடித்திழுத்தது. வழக்கும் விசித்திரமானதுதான். அனுமதி பெற்று அவனைச் சிறையில் பார்க்கச் சென்றேன். பார்க்க முதலில் மாட்டேன் என்றான். பிறகு என்னுடன் பேச மறுத்தான். கடைசியாக அவன் தனது கதையைச் சொன்னான்.

     'நீர் சொல்வது உண்மைதான். எப்பொழுதும் இதே மாதிரி நாடோ டியாகத் திரிந்து கொண்டிருக்கவில்லை. ஒரு காலத்தில் என்னிடம் பணம் இருந்தது. வாலிப முறுக்கு, குஷியாகச் செலவழித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுது எனக்கு இஞ்ஜினீயர் வேலை. சாயங்காலத்தில் ஏதாவது ஒரு விருந்து அல்லது நாட்டியக் கச்சேரி, குடி - இதுதான் தினசரி. ஒவ்வொன்றும் ஞாபகத்தில் இருக்கிறது. எனது நினைவுகளில் எல்லாம் மறக்க முடியாத பொக்கிஷம், ஒரு வஸ்து இருக்கிறது. அவள்தான் நினா."

     "அவள் பெயர் நினா. ஆமாம், நினா. அதில் சந்தேகமில்லை. அவள் புருஷனுக்கு ரயில்வேயில் ஏதோ ஒரு சின்ன உத்தியோகம். ஏழைகள். அந்தச் சிறு வருமானத்தில் மிகவும் செட்டாகக் குடித்தனம் செய்ய அவளுக்குத் தெரியும். தொட்டதெல்லாம் பொன் தான். அவள்தான் அவ்வளவு வேலையும் செய்வாள். மலிவான உடைதான்; கிழிந்துகூட இருக்கும். ஆனால், அவளுக்குத்தான் உடை எப்படி உபயோகப்படுத்தவதென்று தெரியும். அவளைக் கண்டவர்கள் எல்லோரும் அவளைப் பற்றி வெறி கொண்ட மாதிரி போற்றுவார்கள். நானும் அவளைச் சந்தித்தேன். அவளால் புனிதமாக்கப்பட்டேன்.

     "என்னைக் காதலித்த குற்றத்திற்காக கடவுள் அவளை மன்னிக்க வேண்டும். அவளைச் சுற்றிலும் வறுமை, துன்பம். அவளால் என்னைக் காதலிக்காதிருக்க முடியவில்லை. அந்தக் காலத்தில் நானும் பார்ப்பதற்குச் சிறிது அழகாக இருப்பேன். எப்படி அவளைச் சந்தித்தேன்? - நன்றாக ஞாபகமில்லை. சென்ற நினைவுகள் என்ற இருளில் இருந்து பல்விதமான காட்சிகள் என் கண் முன்பு வருகின்றன. அவள் சந்தோஷமாக, உற்சாகமாக - இவை எல்லாம் அவளுக்கு விதிவிலக்கு - இருந்தாள். நாடகத்தில் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே பருகிக் கொண்டிருந்தாள். அவளது புன்சிரிப்பு என் மனத்தை விட்டு மறையவில்லை. 'இந்த இன்பம் வெகுநாள் நீடிக்காது; பரவாயில்லை; அதையும் அனுபவித்து விட்டேன்' என்று இரகசியமாக என்னிடம் சொன்னாள். இந்த வார்த்தைகள் என் ஞாபகத்தில் இன்னும் இருக்கின்றன. அதன் பிறகு என்ன நடந்தது, இவையெல்லாம் நான் நினாவுடன் இருக்கும்பொழுது நடந்தனவா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

     "நான் தான் முதலில் அவளைக் கைவிட்டேன் - இது இயற்கைதான். எனது நண்பர்கள் எல்லாம் அப்படித்தான் செய்து வந்தார்கள். கலியாணமான பெண்களுடன் சில காலம் பழகினார்கள். பிறகு கைவிட்டார்கள். நானும் எல்லோரையும் போலவே நடந்தேன். திருடுவது, வாங்கிய பணத்தை மோசடி செய்வது, கள்ளச் சாட்சி சொல்வது, இவை எல்லாம் குற்றந்தான். ஆனால், தான் காதலித்த பெண்ணைக் கைவிட்டு விடுவது உலக இயற்கை. எனக்கு இன்னும் எத்தனையோ நல்ல அதிர்ஷ்டங்கள் எல்லாம் ஏற்படும்பொழுது, அதற்காக ஒரு பெண்ணைக் கட்டிக்கொண்டு அழுவதா? முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது; ஆனால் கடைசியில் வெற்றி எனக்குத்தான். மனக்கஷ்டத்தை மன உறுதி வென்றது.

     "நினா தன்னுடைய புருஷனுடன் தெற்கே எங்கோ போனதாகவும் அதன் பிறகு இறந்துவிட்டதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் எனது உள்ளத்தில் மட்டும் நினாவைப்பற்றிய நினைவுகள் உறுத்திக் கொண்டிருந்தன. அவளைப்பற்றி ஒரு சமாச்சாரமும் தெரிந்து கொள்ளாமல் அவளை மறக்க முயன்றேன்; அவள் படமோ, கடிதமோ ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. எங்கள் இருவருக்கும் தெரிந்த பொதுவான நண்பர்களும் கிடையாது. நினாவின் உருவம் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறைந்தது. அவளைப் பற்றியே ஒன்றும் என் வாழ்க்கையில் ஏற்படாததுபோல் அவ்வளவு பூரணமாக நான் மறந்தேன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/palinguchchilai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs