http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ராஜ்ய உபாதை

ஹென்றிக் இப்ஸன் (1828-1906)

     ஷேக்ஸ்பியருக்கு நிகராக உலகம் கொண்டாடும் சிறந்த நாடக ஆசிரியர் ஹென்ரிக் இப்ஸன். தர்மத்துக்கு வெற்றி அளித்தார் ஷேக்ஸ்பியர்; தர்மம் ஏன் வெற்றி பெற வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியவர் ஹென்ரிக் இப்ஸன். புதுப் பாணியிலே எழும் நாடக சூத்ரத்துக்குப் பிதாமகன் இப்ஸன்.

     இவர் 1828ஆம் வருஷம் நார்வே தேசத்தில் உள்ள ஸ்கிப்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். இந்த மேதைக்குப் பிறந்த நாடு முதலில் இடம் அளிக்கவில்லை. இவரது ஆயுளில் பெரும்பாகம் ஜெர்மனியிலும் இத்தாலியிலும் கழிந்தது. தாய்நாடு திரும்புகையில் பேரும் புகழும் பெற்று உலகில் சிறந்த நாடக ஆசிரியராகத் திரும்பினார். புகழும் பேரும் கிடைத்த பின் தாய்நாட்டின் பரிவு என்ற நிழலில் கிரிஸ்டினாவில் வாழ்ந்தார். 1906 மே 28 ஆம் தேதி மரணம். பிராண்ட், பீட்டர்ஜிஸ்ட், கோஸ்ட்ஸ் என்பவை இவரது நாடகங்களில் பிரமாதமானவை.

*****

     நார்வே ராஜ்யத்தை நிர்வகிக்க மணிமுடி தரித்துச் செங்கோல் ஏந்த, பலர் பாத்யதை கொண்டாடினார்கள். மன்னன் ஹாக்கானைப் பல சிற்றரசர்கள் ஆதரித்தார்கள். அவனே தமக்கு மன்னன் என்று ராஜ விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். ஸ்கூல் ஒரு சிற்றரசன். ஹாக்கானுடைய சிற்றப்பா. அவனும் நாடு தனக்குத்தான்; தானே பட்டத்துக்கு உரிமையுள்ளவன் என்று போட்டியிட்டான். பல வருஷங்களாகவே ஸ்கூல் மனதில் தனக்கே ராஜ்யத்துக்கு நியாயமான உரிமையுண்டு என்ற நினைப்பு. முதல் முதல் எர்லிங் ஸ்டீயன்வீக்கை, ஸ்லிட்டங் வம்சத்தினர் தேர்ந்தெடுத்த போதே, அந்த ஆசை வேர்விட்டது. ஸ்டீயன்வீக் ஆட்சிக்குப் பிறகு ரிப்பங் வம்சத்தினர் பட்டத்துக்கு வந்தார்கள். குத்தார்ம் அரசனானான். அவன் சாகும்வரை ஸ்கூல் காத்திருந்தான். குத்தார்முக்குச் சாக்காடு வந்தது. ஆனால் பட்டம் ஸ்கூலுடைய அண்ணனுக்கு வந்தது; அண்ணன் இன்ஜி பார்ட்ஸன் நோயாளி. வியாதி முற்ற முற்ற ஸ்கூலுக்கு நம்பிக்கையும் முற்றியது. இன்ஜி சாகும்பொழுது அவன் மனைவி கருவுற்றிருந்தாள். ஸ்கூலுடைய ஆசைக்கும் அரசுக்குமிடையே அந்தக் குழந்தை சுவராய் நின்றது. அந்தக் குழந்தையையே அரசனாக ஒரு சிற்றரசுக் கோஷ்டி ஏற்றது. அந்தக் குழந்தைதான் ஹாக்கான். ஹாக்கான் சார்பாக ஸ்கூல் சிறிது காலம் ஆட்சி புரிந்தான். ஹாக்கான் பருவம் எய்தி ஆட்சியை வகிக்கும் காலம் வந்தது. நார்வேயில் ஒரு சம்பிரதாயம். சிற்றரசர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து யாரை மகாராஜாவாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கே பட்டம் கிடைக்கும். உரிமைப் பலமும் சிற்றரசர் சம்மதமும் வேண்டும். ஸ்கூலும் அவனுடைய சகாக்களும் ஹாக்கான் பட்டத்துக்கு வருவதை எதிர்த்தனர். பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில், நார்வே நாடு, கத்தி முனையால் உரிமையை உறுதிப்படுத்தும் சிற்றரசுக் கும்பல் குமைந்த கொலைக்களமாகிக் கிடந்தது. கிருஸ்துவப் பாதிரிமார் மடாலயங்கள் இந்தக் குளறுபடிக்கு ஆதரவு கொடுத்து வளர்த்தன. பரலோகச் சாவியைத் தம் கையில் வைத்திருக்கின்றன எனப் பாவிக்கப்பட்ட மடாலயங்கள், இகலோக மன்னர்களின் சிண்டுகளையும் தம் கைவசம் கொண்டு, முடிசூடா மன்னர்களாக ஆட்சி புரிய முயன்றன. அந்தத் தேசத்திலே கிருஸ்துவ தர்மத்தின் பிரதான மடாலயம் ஆஸ்லோ நகரிலிருப்பதாகும். அதன் தலைவராகவும் மன்னர்களின் பிரதான குருவாகவும் இருந்தவர் பிஷப் நிக்கோலாஸ். சிற்றரசர்களை ஒன்றுசேர விடாமல் அவர்களது மனதில் ஆசைத் தீயைக் கிளப்பி, ஆதரவு என்ற ஆகுதி வார்த்து, முட்டி மோதிக்கொண்டு தம் காலடியில் கிடக்கும்படி செய்தார்.

     "ஹாக்கான் கட்சியா, அவன் வேண்டுமானால் அக்கினிப் பரிட்சையால், தன் பாத்தியத்தை நிரூபிக்கட்டுமே" என்றார்.

     "சரி. ஹாக்கான் தொலைந்தான், நெருப்பாவது தப்புவதாவது" என்று மனப்பால் குடிக்கிறான் ஸ்கூல்.

     பழுக்கக் காய்ச்சிய இரும்பை ஹாக்கானுடைய தாயார் கையில் ஏந்த வேண்டும். நெருப்பின் நாக்குத் தாயின் கையைத் தீண்டாது ஒதுங்கினால், அரசுரிமை அவனுக்கு உண்டு. தாய் இங்கா அக்கினிப் பரிட்சைக்கு உடன்படுகிறாள். அக்கினியும் அவளைச் சுடவில்லை. ஹாக்கான் இறந்த மன்னனுடைய புத்திரன் என்பதில் சந்தேகமில்லை. அது அவனுக்கு இராஜ்யத்தின் மீது பாத்யதை கொண்டாட மட்டும் உரிமை கொடுக்கிறதாம்; ராஜ்யத்தைக் கொடுக்கவில்லையாம். அவனைப் போல் சம பாத்யதை உடைய வம்சங்கள் பலவுண்டாம்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/rajyaupaathai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs