http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு

நதானியேல் ஹாதார்ண் - அமெரிக்கா

     எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதற்காக 1725-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட படையெடுப்பு சரித்திரத்திலேயே கற்பனைக்கு இடந்தரும் பகுதி. அதை எல்லாரும் சாதாரணமாக 'லவல் சண்டை' என்று கூறுவார்கள். சில விஷயங்களை ஜாக்கிரதையாக மறந்துவிட்டு, கற்பனை, அங்கு மடிந்தவர்களின் வீரத்தைப் புகழ்கிறது. போர் செய்த இரு கட்சியினரும் (அந்நாட்டுப் பூர்வீகக் குடிகளான சிவப்பு இந்தியர்களும் வெள்ளையர்களும்) நாகரிக சமூகம் அக்காலத்தில் வீரம், ஆண்மை என்று போற்றக்கூடிய யுத்த தர்மத்திற்கு ஏற்பவே போர் புரிந்தனர். போரில் படையெடுத்த வெள்ளையர்கள் சிதறினாலும், அப்போர் பூர்வீகக் குடிகளை பல வருஷங்கள் வரை ஒடுக்கிவிட்டது என்று சரித்திரக்காரர்கள் சொல்லுகிறார்கள். லவல் சண்டையில் முறியடிக்கப்பட்டுத் தப்பி ஓடி வந்த வீரர்களின் சரித்திரம் சிறிதும் வழுவில்லாமல் காப்பாற்றப்பட்டு வருவதால், கீழே தரப்படும் கதையின் உண்மைப் பெயர்கள் - அவை கற்பனையால் மறைக்கப்பட்டிருப்பினும் - தெரிந்துவிடும் என்று அஞ்சுகிறேன்.

     காலை நேரம். சூரிய கிரணங்கள் மரக்கிளை உச்சியில் அசைவாடிக் கொண்டிருந்தன. அதன் அடியில் முந்திய இரவு படுகாயத்துடன் சோர்ந்து படுத்திருந்த இருவர் இன்னும் கண் விழிக்கவில்லை. அவர்களுடைய படுக்கை காய்ந்துலர்ந்த சருகுகள்தான். அவர்கள் பக்கத்தில் ஒரு பெரும் கருங்கற்பாறை கல்லறை மீது நிறுத்தப்படும் பிரமாண்டமான குத்துக் கல்லைப்போல் நின்றது. இவ்விருபிரயாணிகளின் சமீபத்தில் சிறுசிறு ஓக் மரக் கன்றுகள் நின்றன.

     இருவரில் ஒருவன் வயோதிகன்; மற்றவன் வாலிபன். கிழவன் ஏற்ற படுகாயம் அவனை உறங்க விடவில்லை போலும். சூரியோதயமானவுடனேயே அவன் மிகவும் சிரமத்துடன் எழுந்து உட்கார்ந்தான். தலை நரைத்திருந்தது; காயமில்லாவிட்டால் எதையும் தாங்கக்கூடிய தேகவலிமை படைத்தவன்; ஆனால் அவன் முகம் வெளிறி, கோடுகள் விழுந்து, வாழ்க்கையின் முடிவான யாத்திரை ஆரம்பித்து விட்டது என்பதைக் காண்பித்தது.

     பக்கத்திலிருந்து வாலிபன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்திலும் ஒரு கை துப்பாக்கியைப் பிடித்த வண்ணமாக இருந்தது. கனவில் மறுபடியும் போரை நடத்துகிறான் போலும். திடீரென்று கூக்குரல் விட்டுக்கொண்டு எழுந்தான். உடனே கனவுடன் என்ற பிரக்ஞை வந்தது. உடனே தன்னுடன் இருப்பவனின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தான்.

     "ரூபன், இதோ இந்தப் பாறைகள் எனது தலைக்கல். இனி என்னால் நடப்பது கஷ்டம். நான் ஏற்ற குண்டு எதிர்பார்த்ததைவிட அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. இந்த மலையின் அடுத்த பக்கத்தில் நமது வீடு இருந்தாலும் என்னால் இனி ஒரு அடி எடுத்துவைக்க முடியாது" என்றான் அந்தக் கிழவன்.

     "மூன்று நாள் பிரயாணம் உங்களுக்கு மிகுந்த களைப்பைத் தந்துவிட்டது. ஏதாவது காய் கிழங்குகள் இருந்தால் பார்த்து வருகிறேன். அதன் பிறகு என்மேல் சாய்ந்து கொள்ளுங்கள். மெதுவாக நான் உங்களை கைத்தாங்கலாக அழைத்துச் செல்லுகிறேன்."

     "இன்னும் இரண்டு நாள் கூட நான் பிழைத்திருக்க மாட்டேன். உனக்கோ என்னைவிடப் படுகாயம். நீயாவது உன்னைக் காப்பாற்றிக் கொள். எனக்கோ நம்பிக்கை கிடையாது. நான் இங்கிருந்தே சாகிறேன்."

     "அப்படியானால் நானும் உம்முடன் இருப்பேன்."

     "அது வேண்டாம். சாகப்போகிறேன். இந்த ஆசையையாவது நிறைவேற்று. ரூபன்! உன்னை நான் என் மகன் போலப் பாவிக்கிறேன். உன் தந்தையின் உத்தரவை ஏற்று இங்கிருந்து புறப்பட்டுப் போ!"

     "நீர் என்னை மகன் போல் பாவித்து நடத்தியதற்காக நான் உம்மை இந்தக் காட்டிலே விட்டு விட்டு நடையைக் கட்டிவிட வேண்டுமாக்கும்! நீர் இறப்பது உண்மையானால் கடைசி வரையிலிருந்து உமக்கு வேண்டிய சாமக் கிரியைகளை நடத்திய பின்பே போவேன். எனது பலமும் போனால் நாம் இருவரும் ஒரே குழியில் படுத்துக் கொள்வோம். பின்பு தெய்வம் சக்தியைக் கொடுத்தால் நான் போகிறேன்."

     "பட்டணங்களிலே உயிருடன் இருப்பவர் பார்க்காமல் இருக்க, இறந்தவர்களைப் புதைக்கிறார்கள். இவ்விடத்திற்கு இன்னும் 100 வருஷங்களுக்குள் யார் வரப் போகிறார்கள்? தெய்வ மணம் கமழும் காற்றில் நான் ஏன் அமைதியை ஏற்கலாகாது? சாகும்பொழுது இந்தப் பாறையில் உன் பெயரை எழுதுவேன். அதன் பின் அமைதிதான். முட்டாள்தனமாகத் தாமதிக்காதே!"




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/rojarmalvinineemasadangu.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs