http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சாராயப் பீப்பாய்

எட்கார் அல்லன் போ - அமெரிக்கா

     அவன் ஆயிரம் குற்றங்களைச் செய்தான்; ஆனால் என்னால் இயன்றவரை பொறுத்தேன். அவன் என்னைத் திட்டி அவமதித்தான். இனி, பழிக்குப் பழி தீர்க்க வேண்டியதுதான் என்று மன உறுதி கொண்டேன். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வஞ்சம் தீர்த்துவிட வேண்டியதே என்று முடிவு கட்டிவிட்டேன். அதிலே எனக்கு ஒரு ஆபத்தும் நேரக்கூடாது. ஒருவனைத் தண்டிக்கும் பொழுது, தண்டனை கொடுப்போனுக்கு அபாயம் ஏற்பட்டால், அது தண்டனையாகாது. ஆதலால், ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டேன்.

     இதனாலேயே அவனுக்கு என் விஷயத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. எப்பொழுதும் போல, அதாவது எனக்கு இந்தக் கோபம் ஏற்படுவதற்கு முன் இருந்தபடி, நான் அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

     அவன் ஒரு விஷயத்தில் பலவீனமானவன். மற்ற விஷயங்களில் எல்லாம் அவனுக்கு எல்லோரும் மரியாதை செய்து பயப்படுவார்கள். ஒரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் தலைக்கு மிஞ்சிய அகங்காரம். திராக்ஷைச் சாராயத்தில் தனக்குத்தான் எல்லா விஷயங்களும் தெரியும் என்றும், மோசமான சாராயத்தைக் கொடுத்துத் தன்னை ஏமாற்றி விட முடியாது என்றும் தலைக்கு மிஞ்சிய தற்பெருமை. எல்லா இத்தாலியருமே அப்படித்தான். சமயம் ஏற்பட்டால், பிரிட்டிஷ், ஆஸ்திரிய கோடீஸ்வரர்களையும் ஏமாற்றுவதற்கு முயலுவார்கள். இந்த விஷயத்தில் அவன் தன் தேசத்தார்களைப் பார்க்கிலும் கொஞ்சம் உண்மையானவன். அவன் பெருமை கொள்ளுவதில் அதிசயமில்லை. உண்மையிலேயே அவன் கெட்டிக்காரன் தான்.

     அப்பொழுது கார்னிவல் என்ற திருவிழாக் காலம். பொழுது சாயும் சமயம். அவனை வழியிலே சந்தித்தேன். அவன் அதிகமாகக் குடித்திருந்தாலும், என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டான். அவனை அன்று பார்ப்பதற்கே விசித்திரமாக இருந்தது. கோமாளி வேஷம்; கோணல் குல்லாய்; அதிலும் மணி கட்டிய குல்லாய். அவனைப் பார்ப்பதற்கு, நான் மிகவும் சந்தோஷம் கொண்டவன் போல், அவனது கையைப் பிடித்துக் குலுக்கினேன்.

     "பார்ச்சுனாடோ ! நல்ல காலமாக உன்னைச் சந்தித்தேன். இன்றைக்கு என்ன, ரொம்ப குஷால் போலிருக்கிறது? நான் ஒரு சாராயப் பீப்பாய் வாங்கியிருக்கிறேன். அதை மிகவும் விலை உயர்ந்த 'அமான்டிலாடோ ' என்று சொல்லுகிறார்கள். ஆனால், எனக்குச் சந்தேகமாயிருக்கிறது."

     "அது எப்படி? அமான்டிலாடோ வா? இந்தத் திருவிழாக் காலத்திலா?" என்று கேட்டான்.

     "எனக்குச் சந்தேகந்தான். ஆனால், முட்டாள்தனமாக அதற்கு முழு விலையும் கொடுத்துவிட்டேன். உன்னை சந்தித்து, உன்னிடம் அபிப்ராயம் கேட்க அவகாசமில்லை. ஒரு வேளை, சாமான் கிடைக்காமல் போய்விடுமோவென்று அவசரத்தில் வாங்கிவிட்டேன்" என்று நான் பதில் சொன்னேன்.

     "அமான்டிலாடோ வா?"

     "எனக்குச் சந்தேகமாய்த்தான் இருக்கிறது! உனக்கு வேலை இருக்கிறதுபோல் தெரிகிறது. நான் லூசேஷியிடம் கேட்டுக் கொள்கிறேன். அவனுக்கு இந்த விஷயத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. நான் அவனிடம் போய்க் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்றேன் நான்.

     "அவனுக்கு என்ன தெரியும்?"

     "சில முட்டாள்கள் அவனுக்கு என்னமோ தெரியும் என்று சொல்லுகிறார்களே!"

     "சரி, வா, போகலாம்!" என்றான் அவன்.

     "எங்கே?"

     "உன்னுடைய சாராயப் பீப்பாய் வைத்திருக்கும் அறைகளுக்குத் தான்."

     "சிரமம் வேண்டாம். நீ நல்லவன் என்று உன்னிடம் அதிகக் கஷ்டத்தைக் கொடுப்பதா? நான் லூசேஷியிடம்."

     "இல்லை, இல்லை. எனக்கு வேறு வேலை இல்லை. வா, போகலாம்" என்றான் அவன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/saaraayappeeppai.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs