http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சிரித்த முகக்காரன்

     அவன் சோகமாக இருக்கிறான், தனியாக இருக்கிறான் என்று சொல்லிவிடுவது எளிது; ஆனால் அவன் எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான். அப்படிச் சொல்லிவிட்டாலும், அவனைப் பாட்டிலில் போட்டு அடைத்து லேபில் ஒட்டி வைத்த மாதிரியாகும்; 'ஐயோ பாவம்! என்ன துயரமான கதை, என்ன சோகப்பட்ட மனுஷன். லோகத்திலே நம் கண்ணில் படாமல் எவ்வளவு தீரர்கள் இருக்கிறார்கள்!' என்று எல்லாம் சொல்லச் சொல்லும்படி ஒன்றுமில்லை. அவன் ரொம்ப சாதாரண மனுஷன்; அவனைப் போன்றவர்களை எங்கும் பார்க்கலாம். அவனுடைய நிலைமையும் சாதாரணம்; ரொம்ப சர்வசாதாரணம். அதனால்தான் அவன் உலகத்தின் கண்ணில் விழாமல், மறைந்து உலகம் இழந்த ஒருவனாக இருக்கிறான்.

     அவன் ஜப்பானியன். ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க், பெஞ்சில் உட்கார்ந்து, போய்க்கொண்டும் வந்துகொண்டுமிருக்கும் ஜனங்களை நிர்விசாரமாகப் பார்த்துக் கவனித்துப் பொழுதைப் போக்குகிறான். இன்று ஞாயிற்றுக்கிழமையானதினால் தன் நேரத்தைச் (உலகத்தின் நேரத்தைச்) செலவு செய்து கொண்டிருக்கிறான்; இந்த மகாலோகத்துடன் மறுபடியும் உறவு கொண்டு விடுவதற்காக, "நாம் என் கஷ்டப்படுகிறோம்" என்பதைக் கண்டுபிடிப்பதற்குச் சோகமாக, தனியாக உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறான். அவன் ரொம்ப நேரம் யோசிக்கவில்லை; பெரிய சித்தாந்திகள் மாதிரி ஆற அமர உட்கார்ந்து மனசைத் துருவவில்லை. அதற்குப் பதிலாகச் சும்மா உட்கார்ந்து இருந்தான். அப்புறம் வெகு சீக்கிரத்தில் சோகத்தின் தனிமையிலிருந்து வெளி வந்தது சிரிப்பு; மகிழ்ச்சியால் அல்ல; சோகத்தாலும் அல்ல. அப்போதுதான் நான் முகத்தைப் பார்த்தேன். அழகானதொன்றல்ல; சர்வ சாதாரணமானது தான்; எங்கேயும் பார்க்கக் கூடியதுதான்.

     அவன் பெயர் என்னவானால் என்ன? அதனால் பிரமாதமாக வித்தியாசம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை; இருந்தாலும் அவன் பெயர் த்ஸுமுரா. ஹாரிஸன் ஏழாந்தெரு பார்க் பெஞ்சில் அவன் உட்கார்ந்திருக்கும்பொழுது அவனைக் கண்டேன். நான் ஒரு மரத்தடியிலிருந்து ஒரு புஸ்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் ஏறிட்டுப் பார்த்தபொழுது அவனைக் கண்டேன். அன்னியன் ஒருவன் யார் என்பதை நிர்ணயிக்க மனசு செய்யும் முயற்சியே ஒரு ரசமான யாத்திரை. நான் புஸ்தகத்தை வாசிப்பது போன்ற பாவனையில் அவனைக் கவனித்தேன்; ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கு பெஞ்சில் உட்காரும் நபர்களைப் போலத்தான் அவனும் இருந்தான். யார் என்ற யோசனை ஆரம்பிக்கையில் அவன் என் மனசில் விசுவரூபம் எடுத்து விட்டான். என் அண்டையில் வாழுகிறவன், எனக்குத் தெரிந்தவன், பேசினவன் மாதிரி எல்லாம் ஆகிவிட்டான். அப்பொழுது திடீரென்று எதிர்பாராத சமயத்தில் அவன் சிரித்தான். பித்துக்குளிச் சிரிப்பு அல்ல. ஆனால் யாரையும் கவனிக்க வைக்காத சிரிப்பு. யாரும் கவனித்தாலும் பார்க்கிலோ, தெருவிலோ எதையோ வேடிக்கையாகப் பார்த்திருக்க வேண்டும் எனக் கருதி அத்துடன் விட்டு விடுவார்கள். ஆனால் அது மாத்திரமல்ல. அவனுடைய பார்வையில் விசித்திரமில்லை. எல்லோரையும் போலத்தான் இருந்தான். இருந்தும் அவனிடம் அலாதியாக ஏதோ விசேஷம் இருந்தது.

     அவன் யார், எங்கு வேலை செய்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்தேன். உள் மனத்தின் சர்க்கஸ் விந்தைகளில் நடக்கும் ரசமான வேடிக்கைகளுக்கு வரம்பே கிடையாது. என்னத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தான்? அதைத் தெரிந்து கொள்ள விரும்பினேன்; அவன் யார், ஜீவனோபாயத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்... நான் பல முறை யோசித்தேன்.

     'எழுத்தாளனோ? சித்திரக்காரனோ! சாஹித்ய கர்த்தனோ? அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கக்கூடும். அவனுடைய சோக முகத்திற்கும் சிரிப்புக்கும் சம்பந்தமில்லை. ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருந்தான்; உலகமே தன்னில் ஓர் அம்சம் மாதிரி. சிரிப்பதற்கு விஷயமோ அர்த்தமோ இல்லாதபோது பித்துக்குளி மாதிரி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் பித்துக் குளியாக இருக்க முடியாது - காரண காரியமற்ற வாழ்வை அவனது உடை காட்டவில்லை. பாதிரியோ? பலருக்குத் தலைமை வகித்து முன்னே வழி காட்ட வந்தவனோ? - தன் 'தலைமை' வேஷத்தைக் களைந்து அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத வகையில் ஜனங்களுடன் அளவளாவிப் பழக வந்தவனோ? ஆனால் ஞாயிற்றுக்கிழமையாச்சே. ஞாயிற்றுக்கிழமைதான் பாதிரியாருக்குப் பழி வேலை இருக்கும் தினம். இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பார்க்குக்கு வருவதென்றால் யாருக்கும் இயலும். ஒரு சமயம் அவனை மளிகைக் கடைக்காரனோ பூக்கடைக்காரனோ என்றெல்லாம் நினைத்தேன். இப்படியாக நினைத்துக் கொண்டு போனேன்; நினைப்புகளுக்கு முடிவில்லை.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/sirithamugakkaaran.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs