http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



தேசிய கீதம்

எல்.ஏ.ஜி. ஸ்டராங் - இங்கிலாந்து

     லாரி நிறையத் துருப்புக்கள் கன வேகமாகச் சென்று சில விநாடிகள் கூடக் கழியவில்லை. அது இப்பொழுதுதான் நிகழ்ந்தது. வெடியின் அதிர்ச்சி பரீலியை அப்படியே கலங்க வைத்துவிட்டது. ஒரு வினாடி நடைபாதை அதிர்ந்தது. வீட்டுக் கூரைகள் அமுங்கி நிமிர்ந்தன. தெரு முழுவதும் நாசமாகிவிடும்போல் இருந்தது. அடுத்த நிமிஷம் யாவும் முன்போல் உறைந்துவிட்டன. பரீலியின் முழங்கால்கள்தான் வளைந்தன; அவனுடைய சுவாசம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது மாதிரி இருந்தது.

     அவன் கீழே விழுமுன், அல்லது அவன் கீழே விழாது சமாளித்துக் கொள்ளுமுன், எங்கிருந்தோ, மின் வெட்டு மாதிரி ஒரு கை பாய்ந்து அவனது கரத்தைப் பிடித்து அவனைப் பக்கவாட்டில் இழுத்தது. முன்பு அத்தெருவில் ஈஸ்டர் புரட்சியின் போது ஏற்பட்ட சேதம் இன்னும் பழுது பார்க்கப்படவில்லை. அத்தெருவில் வானத்தைத் தொடும் கூரை வளையம் 'தெத்துக் கொத்தாக' முளைத்த பல் மாதிரி இருந்தது. பல கூறைகளில் உள்ள ஓட்டைகள் மரப் பலகை வைத்து மூடப்பட்டிருந்தன. நல்லகாலம் வரும், நிரந்தரமாகப் பழுது பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை போலும்!

     அதிர்ச்சியால் ஏற்பட்ட அரை மயக்கம் இன்னும் தெளியவில்லை. ஏதோ லோகமே பிளான் போட்டுத் தன்னை எதிர்ப்பதாக நினைத்துத் தட்டுத் தடுமாறிக் குளறினான். அவனைத் தாக்கியவன், கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.

     "மேலே காயம் கீயம் பட்டதா?" என்று கொச்சை ஆங்கிலத்தில் திரும்பத் திரும்பக் கூறி கொண்டு, அவன் உடலைத் தடவி ஆராய்ந்தான். "நல்ல காலம்! உனக்கொன்றுமில்லை."

     கையிலிருப்பதைக் களவாட இதுவும் நூதன விதமான முறையோ என்று பரீலி தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறி, பின்பக்கம் கிடக்கும் காரைக் கட்டிகளில் கால் வைத்தான்.

     "கொஞ்சம் மெதுவாக ஸார், உங்களுக்கு ஒன்றுமில்லை; இங்கே உட்காருங்கள். தெருவைப் போல இங்கே ஆபத்தில்லை. இங்கே இரண்டு பேருக்கு இடம் இருக்கிறது."

     அந்த அந்நியன் தன் மீது நம்பிக்கை ஏற்படும்படியாகப் பல்லைக் காட்டினான். பரீலிக்கு சுய உணர்வு வந்தது. பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டு கொண்டான். உடனிருந்தவன் க்ஷவரம் செய்துகொண்டு எத்தனையோ காலம் கழிந்திருக்க வேண்டும். அவன் மேல் படிந்திருந்த அழுக்கின் எல்லையைத் தெய்வந்தான் வரையிட வேண்டும். ஆனால் அவனுடைய முகத்தில் ஜொலித்தது சிநேகபாவம் என்பதில் சந்தேகமில்லை என்பதை பரீலி கண்டு கொண்டான்.

     பரீலி தன் உலர்ந்த உதடுகளைச் சிறிது உள் மடித்து நனைத்துக் கொண்டான். ஆனால் வாயிலிருந்து சப்தம் 'எழமாட்டேன்' என்றது. சிறிது கனைத்துக் கொண்டான்.

     "வந்தனம் நீ உதவியதற்கு. திடீரென்று ஏற்பட்டது. நான் எங்கிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை" என்றான் மேல் நாட்டு மோஸ்தரில்.

     "அது உங்க குத்தமா? இந்தக் காலத்துலே யாருக்குத் தான் நாம் எங்கே இருக்கோம் என்று தெரியுது?" என்றான் அந்த அழுக்குடை அந்நியன்.

     இயற்கை நிலையடையவே, பரீலிக்குக் கோபம் பொங்கிப் பொங்கி எழுந்தது.

     "நான் இங்கே முப்பது வருஷத்துக்கப்புறம் வருகிறேன். நான் இந்த மாதிரி எதிர்பார்க்க - "

     எங்கோ 'பிஸ்' 'பிஸ்' என்று இருமுறை வெடிச் சப்தம் கேட்டது. மறுபடியும் அந்தத் துப்பாக்கிச் சப்தம். சாட்டையைச் சொடக்குவது போல் இச்சப்தம் சந்தில் எதிரொலிப்பதைப் பரீலி கேட்டான்.

     அந்த ஏழை அந்நியன் தோள்களைக் குலுக்கிக் குவித்துக் கொண்டான்.

     "அதோ போகிறார்கள் பாரும். எப்பொழுதும் லேட்தான்; எப்பொழுதும் வேட்டை முடிந்த பின் தான்..." என்றான் அவன்.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/thesiyageetham.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs