http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



துன்பத்திற்கு மாற்று

ஸீனர் லூயிஜி பிரான்டல்லோ - இத்தாலி

     நமது வாழ்க்கையை, முக்கியமாக அதில் காணும் துன்பங்களை, வான வெளியிலே தேஜோமயமாகச் சுழன்று செல்லும் நட்சத்திர மண்டலங்களுடன் ஒப்பிட்டுப்பாரும், அப்பொழுது அது துச்சமாகத் தென்படும்.

     ஆமாம், இந்தச் சித்தாந்தம் எல்லாம் சரிதான்; நான் ஒப்புக் கொள்ளுகிறேன்; உமக்கு மிகவும் பிரியமான ஒருவர் இறந்து, இந்தப் பூமியிலேயே மண்ணோடு மண்ணாகக் கலந்து போகிறார் என்று வைத்துக் கொள்ளும் - அப்பொழுது நீர் என்ன செய்வீர்?

     கொஞ்சம் சிரமமான காரியந்தான். மேலும் அந்தப் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை மறக்க முயற்சிக்கையில்தான், இதன் சிரமம், பல மடங்கு பெரிதாக வளர்ந்து தோன்றும். ஏப்ரல் மாதத்தின் மனோகரமான அஸ்தமன சூரிய ஒளியில் மலர்ந்து தலை தூக்கும் வெள்ளைப் பூக்கள் உமது கண்களில் படுகின்றன. உமது மனத்தில் புதிய உணர்ச்சி பெருகுகிறது. ஆனால் அதே சமயத்திலே உமது மனத்தின் மூலையில், இறந்தவன் இனி இந்த அழகுகளை அநுபவிக்க முடியாதே என்ற எண்ணம் பிறக்கிறது.

     சரி, இந்த மாதிரிச் சமயத்தில் உனக்கு ஒரு மகன் இறந்துவிட்டால் பிரிவுத் துன்பம் எப்படி மறக்கும்? அதற்குத்தான் நான் ஒன்று சொல்லுகிறேன்; இத் துன்பத்திற்கு மாற்று இருக்கிறது என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்த எண்ணத்தினால் திருப்தியடையவும், இன்பத்திலும் துன்பத்திலும் என்ன இருக்கிறது? அவற்றை நாம் செவ்வாய் மண்டலத்துடனும், விருச்சிக நட்சத்திரத்துடனும் ஒப்பிடும் பொழுது, ஒன்றுமில்லைதான். அந்த எண்ணத்திலே திருப்தியடைந்து விடவும்.

     இந்தப் பழக்கம் லேசில் வந்துவிடாது. ஆனால், இது எளிதில் அடையக் கூடிய நிலை என்று நான் எப்பொழுதாவது சொன்னேனா? வான சாஸ்திரம் படித்து அறிந்து கொள்ளுவதற்கே கஷ்டம்; அதிலும் அதைக் கொண்டு வந்து நமது நடைமுறைச் சம்பவங்களுக்குள் புகுத்துவது என்றால் லேசான காரியமா?

     மேலும் உனது போக்கே விபரீதமானது. முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாதது. இந்த உலகத்துக்கு, ஆமாம், இந்தப் பூமி என்ற கிரக கோளத்திற்கு - ஒரு மதிப்பிருக்கிறது; மனித உணர்ச்சியுடன் ஒத்துப் பார்க்கும்பொழுது இந்தக் கிரகம் மற்றவைகளைவிட சின்ன விஷயமாகத் தெரியாது என்று நீர் சொல்லுகிறீர். அது உப்பில்லாப் பேச்சு. பட்டுப்பூச்சிப் புழு தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்ட கூண்டிலிருந்து சித்தாந்தம் செய்வது போல, நீரும் உமது பெரிய துன்பத்திலே சிரத்தையை லயிக்கவிட்டு, உம்மைச் சுற்றிலும் நடைபெறும் அகில சக்திகளின் கதியைக் கூடக் கவனிக்கத் திறமையற்று இருக்கிறீர்.

     நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர் என்று எனக்குத் தெரியும். உணர்ச்சி கண்ணை மறைக்கும் பொழுது, கற்பனை வேறு எதில் லயிக்க முடியும் என்று பதிலளிக்கிறீர்; ஆனால், நான் உம்மை அப்படி ஒன்றும் செய்யச் சொல்லவில்லையே! இருந்தாலும், உமது மனந்தான் நீர் செய்ய முடியாது என்று சொல்லுகிறது போல் செய்கிறது. 'அப்படி இருந்திருக்கக்கூடாதா? இப்படி இல்லாமல் இருந்திருக்கலாகாதா?' என்றெல்லாம் ஏங்குவதும் உமது மனந்தான்.

     ஆனால் இந்த ஆசைகளால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? உமது வாழ்க்கை இப்பொழுது இருப்பது போல இல்லாமலிருந்தால், உமக்குத் தற்பொழுது தோன்றும் உணர்ச்சிகள் - நம்பிக்கைகள் - ஆசைகள் - யாவும் ஏன் எழப் போகின்றன? இதனால் விளைவதென்ன தெரியுமா? நீர் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்து ஏங்கும் நிலைகள் இருக்கின்றனவே, அவற்றைப் பெற்றவர்களைக் கண்டால், உமக்குப் பிடிக்காது. காரணம் என்ன தெரியுமா? நீர் ஆசைப்படும் நிலையில் இருப்பவர்கள் அதை அநுபவிக்கத் திறமையற்று அலைகிறார்கள் என்று நினைக்கின்றீர். நீர் அந்த நிலையில் இருந்தால்...? எவ்வளவு தூரம் அவர்கள் திருப்தியடையத் திறமையற்றிருக்கிறார்கள் என்று அவர்கள் மீது உமக்குக் கோபம் வருகிறது. இந்த உணர்ச்சி அசட்டுத்தனமானது; இதற்குத்தான் பொறாமை என்று பெயர். நீர் உமது நிலையிலிருந்து மாறவேண்டும் என்று ஆசைப்படாவிட்டால், இது எழாது.

     எழாது என்பது திட்டந்தான். ஒரு உதாரணம் சொல்லுகிறேன் - அது என் அநுபவம்.

*****




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/thunbathirkumaatru.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs