http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



ஏ படகுக்காரா!

மிக்கெய்ல் ஷோலொகோவ்

     அந்த காஸக் கிராமத்தைச் சூழ்ந்து வளர்ந்து நின்ற சாம்பல் பூத்த பசிய நிறம் படைத்த செடிச் செறிவின்மீது சூரியவொளி தெம்பாக விழவில்லை. அருகே ஒரு பரிசல் துறை இருந்தது. அங்கே படகேறி டான் நதியை கடக்க வேண்டும் என நான் எண்ணியிருந்தேன். ஈரம் ஏறிச் சொத சொதவென அழுகல் நாற்றம் நாறும் மணல் வழியாகக் கால்களை 'உழுது' சென்றேன். மணலில் கால்கள் அழுந்தியதால் கலப்பை போட்டு இழுப்பது போன்று இருந்தது. தடமும் பித்துக்குளித்தனமாகச் செடி கொடிகளிலுமே மடங்கி மடங்கி ஓடியது. கிராமத்து சர்ச்சுத் தோட்டத்துக்கு அப்பால் சிகப்புப் பந்துபோல வடிவெடுத்த சூரியன் வீங்கி விழுந்தது. என் பின்புறம் கருக்கிருட்டு, என்னைத் தொடர்ந்தது.

     இறங்கு கரையில் படகு கட்டியிருந்தது. படகின் கீழ் டான் கொப்புளித்துச் சுழித்துக்கொண்டு அல்லி மலரின் மெல்லிய வெள்ளைக் கலவையுடன் பளபளத்து ஓடியது. நிலை நீச்சலில் நிற்பவனுடைய கைகள் போலப் படகின் துடுப்புகள் ஜலத்தில் இங்குமங்கும் நோக்கற்றுத் துழாவி மிதந்து அசைவாடின. துடுப்புகள் படகுடன் தடையிட்டிருந்ததால், அவற்றின் சலனத்துடன் மடக்கு மடக்கென்ற சத்தமும் கேட்டது.

     படகுக்குள் கசிந்து ஏறிய ஜலத்தை வாரி வாரி வெளியே கொட்டிக் கொண்டிருந்தான் படகோட்டி. அவன் தலையை நிமிர்த்தி என்னைப் பார்த்தான். மஞ்சள் பூத்த கால்கள் அவனுக்கு.

     "அக்கரைக்குப் போகவேண்டுமா? இதோ ஒரு நிமிஷத்தில் வந்துவிடுகிறேன். நீயும் காத்திருக்கையில் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஏறிக்கொள்" என்றான் அவன். குரலில் குஷியில்லை.

     "நம்ம ரெண்டு பேருமா இதை ஓட்டிக்கொண்டு போக முடியுமா?" என்று கேட்டேன்.

     "அதைத்தான் பார்ப்பமே. கொஞ்ச நேரத்திலே இருட்டிவிடும், வேற யாரும் இந்தப் பக்கமா வந்தாலும் வரலாம்" என்றான்.

     வாயகன்ற கால்சராய்களை மடித்துவிட்டுக் கொண்டே "உம்மைப் பார்த்தால் இந்தப் பக்கத்துக்குப் புதுசு போலத் தோணுதே. எங்கேயிருந்து வராப்பிலே?" என்றான்.

     "பட்டாளத்திலே இருந்து" என்றேன்.

     அவன் தன்னுடைய குல்லாவை எடுத்துப் படகுக்குள் போட்டுவிட்டு மயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். கருப்போடிய நரைதான். கண்ணை ஒருபுறம் சுளித்துக்கொண்டு நொந்து அழியும் பல் வரிசையைக் காட்டினான். "ரஜாவிலே போறாப்பிலேயாக்கும்..."

     "இல்லை, என் பட்டாளத்தைக் கலைத்து விட்டார்கள். நான் இனிமே உத்தியோகத்துக்குப் போக வேண்டியதில்லை."

     "வாஸ்தவமா? அப்படின்னா, உன் மனசிலே மறுவிருக்காதே" என்றான்.

     என்னுடைய சேவைக் காலத்தில் ராணுவம் நடத்த வேண்டிய காரியம் எதுவும் ஏற்படவில்லை என்று அவன் எதிர்பார்த்தான்.

     இருவருமாகத் துடுப்புப் பிடித்தோம். டான் நதி எங்களைத் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறமாதிரி, கரையிலிருந்து கவிழ்ந்து ஆற்றில் அல்லாடி வேலி போல் வழி மறிக்கும் மரக்கிளைகளிலே கொண்டு சிக்கவைத்தது. படகின் அடித் தட்டில் ஓட்டை. அதன் வழியாகத் தண்ணீர் குபுகுபுவென்று கொப்புளித்துக் கொண்டு ஓடியது. படகுக்காரன் வெற்றுக் காலால், அதன் விலாப்பகுதிகளை மிதித்தழுத்திக் கொண்டிருந்தான். காலின் சதைக் கோளங்கள் நீல நாளங்களைக் காட்டி வலிமையையும் காட்டின. அவன் கைகள் நீண்டு எலும்பெடுத்துப் போயிருந்தன. விரல்கள் முண்டு முண்டாக மடங்கல்கள், முடிச்சேறி இருந்தன. ஒல்லியான தோள்பட்டைகளைக் குறுக்கிக்கொண்டு முதுகு குனிந்து தண்டு வலிப்பது படகோட்டுதலில் சாகசத்திற்கு அறிகுறியாகக் காணப்படவில்லை. ஆனால் அவன் வலித்த துடுப்புகள் அலைச் சிகரங்களை லாவகமாக வெட்டி நீரில் வெகு தொலை வரை முங்கி நிமிர்ந்தன.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/yaepadagukkaraa.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs