http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்


கூட்டுக் குஞ்சுகள்

2

     பெரியபட்டிப் பஞ்சாயத்து ரேடியோ ஓய்ந்து விட்டது போலிருக்கிறது; சத்தமே கேட்கவில்லை. பெரியபட்டிக்கும் சின்னப்பட்டிக்கும் இடையே இரண்டு கல் தொலைவு தானிருக்கும். தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டி வருவதற்கென்று மூன்றாண்டுகளுக்கு முன்போட்ட கப்பிச்சாலை அது. அதற்கு முன்பு குண்டும் குழியுமாக ஒரு வண்டிப் பாதைதான் உண்டு. ஆனால் கூடமங்கலத்துக்கும் பெரியபட்டிக்கும் இடையே இணைப்புப் பாதை வந்து வெகு நாட்களாகிவிட்டன. பெரியபட்டியில் தான் புது நகரத்து வண்மைத் தொழில்களான வண்ண அச்சகங்கள், பட்டாசு, வெடி உற்பத்திச் சாலைகள், தீப்பெட்டித் தொழிற்சாலைகள் ஆகிய பல நிறுவனங்களுக்குரியதோர் குடும்பத்தின் மூதாதையர் வீடு இருக்கிறது. எனவே கார் வந்து செல்ல நல்ல பாதை பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது. மேலும், சொந்த ஊரில் அவர்கள் நிறுவிய உயர்நிலைப் பள்ளியும் இடம் பெற்றிருக்கிறது. குல தேவதையான அம்மன் கோயிலும், கறுப்பண்ணசாமி கோயிலும், வழிபாடுகளுடன் சிறந்து விளங்குகின்றன. சின்னப்பட்டி மக்கள் முக்கால் வாசிப் பேரும் பெரியபட்டிக்காரர்களையும் கூடமங்கலத்துப் பெரியதனக்காரர்களையும் அண்டி வாழும் அரிசன மக்கள். பெரியபட்டிப் பாதை தொடங்குமிடத்தில் சற்றே உட்தள்ளிக் காட்சியளிக்கும் நாலைந்து ஓட்டு வீடுகளைத் தவிர, ஏனைய வீடுகள் அனைத்தும் சின்னப்பட்டியில் எளிய குடில்களே.

     குட்டிச் சுவர்களும் பிரிந்த கூரைகளும் கவிழ்ந்த கூடைகள் போன்ற ஆட்டுக் குடில்களும் இடை இடையே முட்செடிகளும் குப்பை கழிவு மேடுகளுமான சின்னப்பட்டியில் சுமார் அறுபது குடும்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மழை விழுந்து மண் பசைக்கும் நாட்களில் தான் காட்டு வேலை; கஞ்சிக்குத் தானியம் கிடைக்கும். ஏனைய நாட்களில் வேலிக்கருவை வெட்டிச் சுமந்தோ, ஆடுகள் மேய்த்தோ, பிழைப்பதைத் தவிர வருவாய்க்கு வழியில்லை. நாலைந்தாண்டுகளாக, இளஞ்சேரன் தீப்பெட்டித் தொழிற்சாலை வண்டி வந்து, இங்கே மண்ணை அளைந்து கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் பசி பசி என்று பிடுங்கி எடுத்துக் கொண்டுமிருந்த சிறுவர் சிறுமியரைக் கொண்டு செல்கிறது. வாரா வாரம் சனிக்கிழமைகளில், காசைக் கண்களால் பார்க்கின்றனர்; ஆசைகள் குமிழியிட்டுக் கொப்புளிக்கின்றன.

     இடுப்புப்பிள்ளை, கைப்பிள்ளை, வயிற்றுப்பிள்ளை சகிதமாகப் பல பெண்கள் தொழிற்சாலை வண்டியை எதிர்பார்த்துப் பாதையோரத்து வேல மரத்தின் கீழ் நிற்கின்றனர். அங்கிருந்து நேராகக் கூடமங்கலம் செல்லும் ஒற்றைத் தடத்தில் முரட்டு மிதியடிகளின் ஓசை கேட்க, யாரேனும் வருவதைத் தவிர, வண்டி வரும் அறிகுறியே காணவில்லை.

     “எந் நேரமாச்சி! உருமத்துல உசுப்பிக் கூட்டிப் போறா. இன்னுங் காணாம்...” என்று இடுப்புப் பிள்ளைக்காரி ஒருத்தி மங்கலான அரை நிலவில் இன்னொருத்தியை இனங் கண்டவாறு அலுத்துக் கொள்கிறாள்.

     “ஆரது சுரும்பாயியா?... மம்முட்டியான் பெரியபட்டில நிப்பானில்ல? அவங் கூட்டியாந்திடுவா!”

     சந்தனக் குடும்பனின் மச்சான் மம்முட்டியான் சின்னப்பட்டிப் பிள்ளைகளைக் காலையில் எழுப்பி வண்டிக்குக் கொண்டு வரும் ஆள். இந்தப் பணிக்கு அவனுக்கு முப்பது ரூபாய் சம்பளம். மாலையில் அவன் பிள்ளைகளைக் கூட்டி வர வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. ஆனால் மம்முட்டியானுக்குப் பெரியபட்டியின் கோயில் அரசமரத்தின் முன் நின்று, வண்டி வந்ததும் அதில் ஏறிக் கொண்டு வருவதில் ஒரு ஆர்வம். சின்னப்பட்டியில் இறங்கிப் பிள்ளைகளை அவரவர் வீட்டில் சேர்ப்பான்.

     “பசு நிண்ணு போயிடிச்சோ என்னமோ, ஒக்கிட்டுப் போயி! காசு குடுத்து சர்விசு பஸ்ஸில அனுப்பிச்சி வச்சா, அங்கிட்டிருந்து நடந்தில்ல வரணும்?...” என்று கவலைப்படுகிறாள் ராமக்கா.

     “நேத்தே எங்க புள்ள சிலும்பிச்சி. அந்த ஏசன்டு முட்டில அடிச்சிப் போட்டா, நாம் போவ மாட்டேன்னா... அதாரு? மம்புட்டியாம் போல இருக்கு?” நிலவொளியில் தொலைவில் தெரியும் உருவத்தைக் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்க்கின்றனர்.



கூட்டுக் குஞ்சுகள் : முன்னுரை  1  2



இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/rajamkrishnan/koottukkunjugal/kk2.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs